Thursday, April 17, 2025
சென்னை மாவட்ட செய்திகள்!!!
Wednesday, April 16, 2025
SSLC விடைத்தாள் திருத்தும் முகாம் - கோரிக்கை கடிதம் !!!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்களில், மாணவர் நலன் கருதி ஒரு வேளைக்கு 12 விடைத்தாட்கள் மட்டும் வழங்கக்கோரி தேர்வுத்துறை இயக்குநர் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு கடிதம்......
தருமபுரி மாவட்ட செய்திகள்!!!
இன்று (16.04.2025) தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு தர்மபுரி மாவட்ட பொறுப்பாளர்கள் மதிப்பிற்குரிய முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை அலுவலர்கள் ஆகியவர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து அட்டை வழங்கி மகிழ்ந்தோம் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டோம் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்....
Thursday, April 3, 2025
FATO - GEO வில் தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு!!!
CLICK HERE TO VIEW PAPER NEWS
அனைவருக்கும் வணக்கம். இன்று (03/04/2025) போட்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாலை நேர வாழ்வாதார 10 அம்ச கோரிக்கைகளை மீட்டெடுக்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நமது தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு சார்பில் 36+ மாவட்டங்களில் மாநில , கோட்ட , மாவட்ட , வட்டார பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அதிக மாவட்டங்களில் கலந்து கொண்டு தேசிய ஆசிரியர் சங்கத்தின் கரங்களை வலுப்படுத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்...
மாநில மையம்
தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு
Monday, February 24, 2025
நமது கோரிக்கைகள் - CLICK HERE
இன்று (24.02.2025) தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு இணைந்துள்ள அரசு அலுவலர் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பை தமிழ்நாடு அரசு சார்பில் நான்கு அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்திருந்தது. பேச்சுவார்த்தையில் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் மாநில துணைத் தலைவர் திரு முருகன் கலந்து கொண்டார் கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு அரசு அலுவலர் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு அமிர்தகுமார் பழைய ஓய்வூதியத் திட்டத்தை முன்பு இருந்தது போல் மீண்டும் அமல்படுத்த வேண்டும்.இதனால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை எதுவும் ஏற்படாது என்பதையும் நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை உடனடியாக வழங்க வேண்டும் .ஊக்க ஊதிய உயர்வை முன்பு இருந்தது போல் வழங்கவேண்டும் CPS திட்டத்தை ரத்து செய்யும் வரை அவர்களுக்கு பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கலந்து பேசி தீர்வுகள் காணப்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.
Sunday, February 23, 2025
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்!!!
இன்று (23-02-2025) திண்டுக்கல்லில். GTN கலைக் கல்லூரி எதிர்ப்புறம் அமைந்துள்ள GS நகர் செல்வ விநாயகர் திருக்கோவிலில் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக தேர்வு எழுதக்கூடிய பள்ளி கல்லூரி மாணவர் நலனுக்காகவும் ஆசிரியர்கள் நலனுக்காகவும். மேதா ஹோமம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்டத் தலைவர் திரு இளன் பருதி வரவேற்பு வழங்கி துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் மருத்துவர் டாக்டர். ராம்குமார் , பேராசிரியர் டாக்டர். ராமச்சந்திரன் ,சமூக ஆர்வலர் திரு. கோபாலகிருஷ்ணன் ,ஜெய்ஹிந்த் அகாடமி தலைவர் திரு. சந்தானம் ஆகியோர் மாணவர்கள் தேர்வை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் மற்றும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு யோகாவின் முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கியமான உணவு பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. 70க்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.மாவட்ட பொருளாளர் திரு. மணிகண்டன் நன்றியுரை வழங்கினார் .நிகழ்ச்சியை மாநிலத் துணைத் தலைவர் திரு பா. விஜய் ஏற்பாடு செய்தார் .