Showing posts with label சங்க செயல்பாடுகள். Show all posts
Showing posts with label சங்க செயல்பாடுகள். Show all posts

Saturday, June 15, 2024

ABRSM NATIONAL EXECUTIVE MEETING AT AYODHYA !!!

 உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியா நகரில் நடைபெற்ற ABRSM NATIONAL EXECUTIVE MEETING இல் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பாக நமது பாசமிகு மாநில பொதுச் செயலாளர் திரு மு கந்தசாமி  ஐயா அவர்கள் கலந்து கொண்டு நமது ஆசிரியர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து எடுத்துரைத்தார். அனைத்து மாநில நிர்வாகிகளும் ஆர்வமுடன் கேட்டு அறிந்து கொண்டனர்.

தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு அமைப்பின் தாய் சங்கமான ABRSM அமைப்பின் தேசிய செயற்குழு கூட்டம் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியா நகரத்தில் ஜூன் 15 16 17 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது. அந்நிகழ்வில் நம் அமைப்பின் சார்பாக மாநில தலைவர் திரு திரிலோக சந்திரன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் திரு கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்வில் பாரத நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நமது சகோதர ஆசிரியர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு. கல்வி மற்றும் ஆசிரியர் மாணவர் நலன் சார்ந்த பல்வேறு கலந்தாலோசித்து வருகின்றனர்.

The purpose of education should not be merely to earn money and obtain degrees, but to achieve the holistic development of life" - Mrs. Indumati, Chancellor Punuruthan University


Three-Day National Executive Meeting of Akhil Bharatiya Rashtriya Shaikshik Mahasangh Begins


Ayodhya, June 15– Indumati Tai Katdare, Chancellor of Punuruthan University, inaugurated the three-day national executive meeting of Akhil Bharatiya Rashtriya Shaikshik Mahasangh (ABRSM) today at Acharya Narendra Dev University of Agriculture and Technology, Ayodhya. She emphasized that the purpose of education should not be merely to earn money and obtain degrees, but to achieve the holistic development of life.


Chief Guest Indumati Tai Katdare said that teaching should include an understanding of social and cultural needs as well as psychological issues. She also stressed that the development of students can occur through true education both at home and in school, which in turn can lead to the development of the nation.


The meeting, attended by executive members and delegates from across India, aims to discuss various educational issues and programs to be implemented nationwide from primary schools to universities. Akhil Bharatiya Rashtriya Shaikshik Mahasangh, recognized as a leading teachers' organization in India, continuously works for the welfare of the teaching community and the education system from KG to PG. Over the next three days, executive members will engage in extensive discussions to formulate plans and strategies that will reach educational institutions at the school level.


Guest of honour Dr. Brajendra Singh, Vice-Chancellor of Acharya Narendra Dev University of Agriculture and Technology, Ayodhya, highlighted the achievements and initiatives of the university in his address. He highlighted that the university has made significant progress in various fields and has launched several new initiatives contributing to agricultural education and research.


Mahendra Kumar, All India Senior Vice President of Akhil Bharatiya Rashtriya Shaikshik Mahasangh, addressed the gathering, highlighting the extensive work and achievements of the organization. Representatives from various states across the country shared information about the activities and accomplishments of the Shaikshik Mahasangh in their respective states and UTs.


The inaugural session was graced by the presence of Sunil Bhai Mehta, Akhil Bhartiya Baudhik shikshan Pramukh of Rashtriya Swayamsevak Sangh, Mahendra Kapoor, All India Organising secretary of Akhil Bharatiya Rashtriya Shaikshik Mahasangh, and Shri G Laxman Ji, All India Joint Organising secretary. The event was conducted and guests were welcomed by Shri Shivanand Sindhanakeda, All India General Secretary of Akhil Bharatiya Rashtriya Shaikshik Mahasangh.










Monday, April 15, 2024

திண்டுக்கல் மாவட்டச் செய்திகள்

 திண்டுக்கல் மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு விடைத்தாள் மைய முகாம் அலுவலர்களுக்கு நமது தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர் திரு பா. விஜய் ,மாவட்ட தலைவர் திருமதி வைரமணி ,மாவட்ட செயலாளர் திரு ஆறுமுகம் ,மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் திரு. அழகேஷ் குமார்மற்றும் சங்க உறுப்பினர்கள் திரு. கிருஷ்ணமூர்த்தி ,திரு. வெங்கடேசன்  ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்




மதுரை மாவட்டச் செய்திகள்

 இன்று (15/04/2024 ) அரசுப் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்த முகாம் அலுவலர் மற்றும் மாநகராட்சி கல்வி அலுவலர் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக தமிழ் புத்தாண்டு வாழ்த்து அட்டை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.











தமிழ் புத்தாண்டு🎊🎊🎊🎊🤝🤝🤝 வாழ்த்து அட்டை வழங்கும் நிகழ்வில் தொடர்ச்சியாக 💐💐💐💐💐 மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சார்பாக நேரடி உதவியாளரும் மதுரை மாவட்ட கல்வி அலுவலர் சார்பாக DI madam மும் பெற்றுக் கொண்டனர். மேலும் MLWA ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் சேதுபதி ஆண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் நமது அமைப்பு சார்பாகா வாழ்த்து அட்டை வழங்கப்பட்டது🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 நிகழ்வில் மதுரை மாவட்ட தலைவர் திரு. சா.பரமசிவம் மாவட்ட செயலாளார் திரு. கணேசன் அவர்களும் பங்கேற்றனர்💐💐💐💐🎊🎊🎊🎊🎊🎊







Wednesday, March 6, 2024

மதுரை மாவட்ட செய்திகள்

 இன்று  06/04/2024 கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனர் அவர்களின் அழைப்பின் பேரில் தேசிய ஆசிரியர் சங்கத்தின் திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகளுடன் இணை இயக்குனர் அவர்களை சந்தித்த தருணம்...










Sunday, February 25, 2024

தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு அறிக்கை - 25/02/2024

 தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள்,  உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் காணொளி மூலம் நேற்று (24.02.2024) மாலை 6.00.மணிக்கு மாநில நிதிக்காப்பாளரும்,பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்தலைவருமான திரு.எஸ்.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

         இக்கூட்டத்தில் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்,மாநில ஒருங்கிணைப்பாளர்கள்,மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில்  நீண்ட விவாதத்திற்கு பின்பு கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

1).10 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகவும் கடந்த 15.02.2024 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தபோராட்டத்தை சிறப்பாக  நடத்தினோம்.

அதன்பின்பு அரசு அழைப்பின் பேரில் 19.02.2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நமது கூட்டமைப்பு தலைவர்கள் சந்தித்து,10 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்து கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் எனக்கேட்டுக் கொண்டார்கள்.

   அப்பொழுது அங்கிருந்த தொலைக்காட்சியில் அரசு அலுவலர்,ஆசிரியர்கள் கோரிக்கைகள் குறித்து ஒத்தி வைப்பு தீர்மானத்தை நாளைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவிப்பு வெளியானது. அதனை கண்ட நமது கூட்டமைப்பு தலைவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மீது வைத்திருந்த மிகுந்த நம்பிக்கையோடும் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாகும் என காத்திருந்தோம். ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை, அரசிடம் இருந்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாததை அறிந்த நமது கூட்டமைப்பை சார்ந்த பல லட்சக்கணக்கான அலுவலர்கள்  ஆசிரியர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்கள். அதன் எதிரொலியாக அனைத்து அரசு அலுவலர்கள்,ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களின்  குடும்பத்தினர்கள் சிந்தித்து வாக்களிப்பது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

2).சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெறும் ‌‌26 .02.2024 முதல் நடத்தவுள்ள காத்திருப்பு போராட்டம்,சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு போராட்டம் நடத்தும் SSTA அமைப்பிற்கும் நமது கூட்டமைப்பு ஆதரவு அளிக்கும் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3) நமது 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர் வருகின்ற 

(16.03.2024) அன்று சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் மாபெரும் கோரிக்கை உண்ணாவிரத போராட்டம் நடத்துவது எனவும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இங்ஙனம்,

எஸ்.பாஸ்கரன்,

கூட்டத்தலைவர் (ம) மாநில ‌நிதி காப்பாளர்.

மேலே கண்ட கூட்டமைப்பின் செய்தியை நமது மாவட்ட செயலாளர்கள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மேலும் சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதம் வருகை தருவதற்குரிய வழி வகைகளை செய்திட வேண்டுகிறேன்.

அன்புடன்

மு.கந்தசாமி 

பொதுச் செயலாளர்

தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு

Monday, February 19, 2024

கூட்டமைப்பு சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கைகளைப் பற்றி எடுத்துரைத்த நிகழ்வு !!! (19/02/2024)


 





1)இன்று தமிழக முதல்வர் அவர்களை சந்தித்த பின் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்மைப்பு கூட்டம் இன்று சென்னை பெல்ஸ் சாலையில் உள்ள உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச்சங்கத்தில் வைத்து நடைபெற்றது.

2) நாளை சட்டசபையில் கேள்வி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளது. அதற்கு தமிழக சட்டசபையில் சபாநாயகர் திரு.அப்பாவு அவர்கள் சட்டசபையில் அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களிடம் முன்மொழிந்து ஒப்புதல் பெற்றார்.

Thursday, February 15, 2024

15-02-2024 பல்வேறு மாவட்டங்களில் நடைப்பெற்ற வேலைநிறுத்தம் - சிறப்பு படத்தொகுப்பு !!!

 அனைவருக்கும் வணக்கம்.

 தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு அங்கம் வகிக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பாக  10 அம்ச வாழ்வாதார கோரிக்கைகான ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் பல மாவட்டங்களில் மிகவும் எழுச்சியுடன் (15-02-2024 ) நடைப்பெற்றது. இதில் மாநில, கோட்ட, மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சங்கத்தின் கரத்தினை வலுப்படுத்தினர்.

இன்றைய போராட்ட களமான வருகை பதிவேட்டிலும் ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்ட போராளிகளான ஆசிரிய சகோதர, சகோதரிகளுக்கு தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு நமது கூட்டமைப்பு சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

கோரிக்கை விவரம் அறிய - CLICK HERE

ஈரோடு மாவட்டம் :










மதுரை மாவட்டம் :




















திருவாரூர் மாவட்டம்:





நாகை மாவட்டம் :





கரூர் மாவட்டம் :






பெரம்பலூர் மாவட்டம் :









திருப்பூர் மாவட்டம்: 





இராணிப்பேட்டை மாவட்டம் :





மற்ற மாவட்ட புகைப்படங்கள் இருப்பின் பின்வரும் WHATSAPP - எண்ணிற்கு அனுப்பினால் இத்தளத்தில் பதிவேற்றப்படும்.

97876795104

செய்தி வெளியீடு


மாநில ஊடகப் பிரிவு


தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு


https://desiyaasiriyarsangam.blogspot.com/



Sunday, January 21, 2024

ஈரோடு மாவட்ட செய்திகள்

தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு

ஈரோடு மாவட்டம் 

கடமை உணர்வு தினம் 21/01/2024

ஊ. ஒ. நடுநிலைப்பள்ளி,

பெருந்துறை - மேற்கு.

சிறப்புரை : திரு. இரா. கோகுல்நாதன்.

இன்று நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.