Showing posts with label சங்க செயல்பாடுகள். Show all posts
Showing posts with label சங்க செயல்பாடுகள். Show all posts

Tuesday, November 25, 2025

TET ISSUE - Our Association Activities !!!

TET சிக்கலுக்கு தீர்வு காண நமது சங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் தொகுப்பு!!!


02.08.2023 - தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு - பதவி உயர்வு சார்ந்த குழப்பங்களுக்கு NCTE மூலமாக தீர்வுகாண முயற்சி - CLICK HERE

22.06.2023 -  தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் TET சிக்கல் குறித்து கோரிக்கை மனு - CLICK HERE

03.08.2023- பணியில் உள்ள TET தேர்வில் விலக்களிக்க  தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு நிர்வாகிகள் புது டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சரை சந்தித்து கோரிக்கை- CLICK HERE

15.06.2024 -  UP யில் நடைபெற்ற ABRSM தேசிய செயற்குழு கூட்டத்தில் TET சிக்கல் குறித்து வலியுறுத்தல் - CLICK HERE

 01.10.2024 - NCTE CHAIRPERSON உடன் தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு - CLICK HERE


01.05.2025 -  TET உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாண்புமிகு மத்திய கல்விஅமைச்சருடன் ABRSM நிரவாகிகள் பேச்சு !!! - CLICK HERE

13.06.2025 -  SIMLA வில் நடைபெற்ற ABRSM தேசிய செயற்குழு கூட்டத்தில் TET சிக்கல் குறித்து வலியுறுத்தல் - CLICK HERE

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று முடிந்த TET வழக்கில் இடை மனுதாரராக CA NO 1409-1410 மூலம் பதவி உயர்வுக்கு TET தேவையில்லை என நமது சங்கம் சார்பில் வாதாடப்பட்டது.


07.11.2025 - RTE 2009 சட்டத்திற்கு முன்பு பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் விலக்கு பெற NCTE CHAIR MAN DR பங்கஜ் அரோரா மற்றும் அலுவலர்களுடன் ABRSM நிர்வாகிகளுடன் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு பொதுச் செயலாளர் கந்தசாமி சந்திப்பு!!! - CLICK HERE

இது தவிர மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு கடிதம் அனுப்ப  பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க பல்வேறு மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு வலியுறுத்தி கடிதம் வழங்கியது..


மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் அனைத்து செயற்குழு, பொதுக்குழு மற்றும் மாநில உயர்மட்ட குழு கூட்டங்களில் TET தேர்வில் இருந்து பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவை உரிய அதிகாரிகளுக்கு FORWARD செய்யப்பட்டுள்ளது..


தொகுப்பு:
STATE MEDIA TEAM 
DESIYA ASIRIYAR SANGAM
TAMILNADU














Saturday, November 22, 2025

பங்கேற்பு !!!

 CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் சென்னையில் இன்று (22.11.2025) நடைபெற்ற கோட்டையை நோக்கி பேரணி நிகழ்வில் தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் மாநில, மாவட்ட, கோட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்....

சென்னை எழும்பூரிலிருந்து ராஜரத்தினம் ஸ்டேடியம் வரையிலான மாபெரும் பேரணியில் 

CPS ஒழிப்புக்காக வீரமுழக்கமிட்டனர். 💪🏼💪🏼💪🏼














Friday, November 21, 2025

SPECIAL TET - நமது சங்கம் முன் வைத்துள்ள ஆலோசனைகள்!!!

நமது தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு முன் வைத்துள்ள ஆலோசனைகள்  - CLICK HERE 

இன்று 21.11.2025 சென்னையில் ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த கூட்டம் நடைபெற்று வருகிறது. 

அதில் தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு அமைப்பு சார்பாக மாநிலத்தலைவர் திரு.ம. கோ. திரி லோகச்சந்திரன், பொதுச்செயலாளர் திரு.மு.கந்தசாமி, துணைத்தலைவர் திரு. து.முருகன்  ஆகியோர் கலந்துகொண்டு 

ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த நமது அமைப்பின் நிலைப்பாட்டினையும் 

அமைப்பின் நீதிமன்ற தீர்ப்பு குறித்து நமது தொடர் செயல்களையும் தகுதித்தேர்வு குறித்த நமது கோரிக்கைகளையும் தகுதித்தேர்வு நடத்துவது குறித்த முன்மொழிவுகளையும் எழுத்துப்பூர்வமாக வழங்கினார்கள்.





நமது தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு முன் வைத்துள்ள ஆலோசனைகள் - CLICK HERE 

செய்தி வெளியீடு :
மாநில ஊடகப்பிரிவு 
தேசிய ஆசிரியர் சங்கம் 
 தமிழ்நாடு

Tuesday, November 11, 2025

பழனி வட்டார செய்திகள்!!!

 7.11.2025 அன்று திண்டுக்கல் மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில் பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் பழனி சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு NMMS புத்தகத் தொகுப்பு வழங்கப்பட்டது.











திருவள்ளூர் மாவட்ட செய்திகள்!!!

 



திருவள்ளூர் மாவட்டத் தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில், மாநிலத் தலைவர் திரு. திரிலோக சந்தர் அவர்கள் தலைமையில்

 இன்று மாலை(10-11-2025) திருவள்ளூர் மாவட்டதில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மரியாதைக்குரிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களைச் சந்தித்து பொன்னாடை அணிவித்து,

 மாணவர்களின் போட்டித் தேர்வுகளுக்குப் பயன்படும்.

NMMS, TRUST உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.

இவண்,

முனைவர் வெ. பரமசிவம்,

மாவட்டத் தலைவர்,

தேசிய ஆசிரியர் சங்கம்,

திருவள்ளூர்.

Friday, November 7, 2025

ABRSM PRESS RELEASE 07.11.2025!!!

 TAMIL VERSION - CLICK HERE 

PRESS NOTE

Akhil Bharatiya Rashtriya Shaikshik Mahasangh (ABRSM)

 ABRSM urges NCTE to intervene in the Supreme Court’s decision related to Teacher Eligibility Test (TET)

A delegation of the Akhil Bharatiya Rashtriya Shaikshik Mahasangh (ABRSM) met Professor Pankaj Arora, Chairman of the National Council for Teacher Education (NCTE), in New Delhi.

The delegation requested the NCTE to intervene appropriately in the recent Supreme Court judgment dated 1st September 2025 (Civil Appeal No. 1385/2025) concerning the Teacher Eligibility Test (TET).

The Mahasangh expressed concern that the decision to make TET qualification mandatory for all serving teachers has created a serious situation affecting the continuity of service, promotions, and livelihood of nearly 2 million teachers across the country.

Prof. Geeta Bhatt, General Secretary of ABRSM, stated that as per the NCTE Notification dated 23 August 2010, it is clearly mentioned that under Section 2(n) of the Right of Children to Free and Compulsory Education (RTE) Act, 2009, the minimum qualifications for appointment as a teacher for Classes I to VIII shall be effective from the date of the said notification. Therefore, ABRSM urged that the Supreme Court decision should be applied prospectively and not retrospectively.

The Mahasangh further pointed out that since the RTE Act was implemented in different years across various States, the cut-off date should accordingly be determined state-wise, keeping in view the local context. It was also requested that the services, seniority, and dignity of experienced teachers appointed with valid qualifications be protected, and that necessary legal measures be taken to prevent any adverse impact on their service or promotion.


Prof. Bhatt reiterated that ABRSM is fully committed to maintaining the quality and standards of education, but at the same time believes that protecting the rights and dignity of teachers who have devoted their lives to this noble profession is equally essential.


The delegation comprised Mahendra Kapoor, Organizing Secretary; Prof. Geeta Bhatt, General Secretary; Mohan Purohit, Additional General Secretary; Pawan Mishra, Vice President; Hanumant Rao, President, Telangana State; and M Kandaswamy, General Secretary, Tamil Nadu State.

(Prof. Geeta Bhatt)

General Secretary

प्रेस नोट 

अखिल भारतीय राष्ट्रीय शैक्षिक महासंघ (ABRSM)

 शिक्षक पात्रता परीक्षा (TET) संबंधी सर्वोच्च न्यायालय के निर्णय पर NCTE से हस्तक्षेप का आग्रह

अखिल भारतीय राष्ट्रीय शैक्षिक महासंघ का एक प्रतिनिधिमंडल आज राष्ट्रीय अध्यापक शिक्षा परिषद (NCTE) के अध्यक्ष प्रो. पंकज अरोड़ा से नई दिल्ली में मिला। प्रतिनिधिमंडल ने शिक्षक पात्रता परीक्षा (TET) से संबंधित सर्वोच्च न्यायालय के हालिया निर्णय (दिनांक 01 सितम्बर 2025, सिविल अपील संख्या 1385/2025) में NCTE द्वारा उचित हस्तक्षेप किए जाने का अनुरोध किया।

महासंघ ने अवगत कराया कि सभी कार्यरत शिक्षकों के लिए TET उत्तीर्ण करना अनिवार्य करने संबंधी इस निर्णय से देशभर के लगभग 20 लाख शिक्षकों की सेवा निरंतरता, पदोन्नति एवं आजीविका पर संकट उत्पन्न हो गया है।

महासंघ की महामंत्री प्रो. गीता भट्ट ने बताया कि NCTE की अधिसूचना दिनांक 23 अगस्त 2010 में स्पष्ट रूप से उल्लेख है कि “बच्चों को नि:शुल्क और अनिवार्य शिक्षा का अधिकार अधिनियम (RTE), 2009” की धारा 2(एन) के अंतर्गत कक्षा 1 से 8 तक शिक्षक के रूप में नियुक्ति हेतु आवश्यक न्यूनतम योग्यता अधिसूचना की तिथि से प्रभावी होगी। अतः महासंघ ने यह आग्रह किया कि सर्वोच्च न्यायालय का यह निर्णय भविष्य के लिए लागू किया जाए, न कि पूर्वव्यापी रूप से ।

महासंघ ने यह भी कहा कि RTE अधिनियम विभिन्न राज्यों में अलग-अलग वर्षों में लागू हुआ है, इसलिए राज्यवार कट-ऑफ वर्ष निर्धारित किया जाना ही न्यायसंगत रहेगा। साथ ही, वैध योग्यता पर नियुक्त अनुभवी शिक्षकों की सेवा, वरिष्ठता एवं गरिमा की रक्षा सुनिश्चित की जाए तथा सेवा समाप्ति और पदोन्नति पर प्रतिकूल प्रभाव रोकने हेतु आवश्यक कानूनी कदम उठाए जाएँ।

प्रो. भट्ट ने कहा कि महासंघ शिक्षा की गुणवत्ता और मानकों के संरक्षण के प्रति पूर्णतः प्रतिबद्ध है, परंतु साथ ही उन शिक्षकों के अधिकारों और आत्मसम्मान की रक्षा को भी समान रूप से आवश्यक मानता है, जिन्होंने अपना जीवन इस महान सेवा को समर्पित किया है।

प्रतिनिधिमंडल में संगठन मंत्री 

महेन्द्र कपूर, महामंत्री प्रो. गीता भट्ट, अतिरिक्त महामंत्री मोहन पुरोहित, उपाध्यक्ष पवन मिश्रा, तेलंगाना प्रांत अध्यक्ष हनुमंत राव तथा तमिलनाडु प्रांत महामंत्री कंदस्वामी सम्मिलित रहे।

(प्रो. गीता भट्ट)

महामंत्री


TET சிக்கலுக்கு தீர்வு!!! - புதுடெல்லி செய்திகள்!!!

 07.11.2025

RTE 2009 சட்டத்திற்கு முன்பு பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் விலக்கு பெற NCTE CHAIR MAN DR பங்கஜ் அரோரா மற்றும் அலுவலர்களுடன் ABRSM நிர்வாகிகளுடன் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு பொதுச் செயலாளர் கந்தசாமி சந்திப்பு!!!

இன்று (7-11-25)புதுடெல்லி NCTE தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் DR பங்கஜ் அரோரா, உறுப்பினர் செயலர் செல்வி அபிலாஷா ஜா மிஸ்ரா , மற்றும் அனைத்து செயலாளர்கள் அடங்கிய குழுவுடன் அகில பாரத தேசிய கல்விக் கூட்டமைப்பு (ABRSM) அமைப்புச்செயலாளர் திரு மகேந்திர கபூர், பொதுச் செயலாளர் திருமதி கீதா பட், தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு பொதுச் செயலாளர் திரு கந்தசாமி உள்ளிட்ட குழுவினர் சந்தித்து TET தகுதித்தேர்வில் இருந்து அந்தந்த மாநிலங்களில் RTE ACT அமலுக்கு வந்த நாளுக்கு முன்பு நியமனம் பெற்ற 1-8 வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கருத்து பரிமாற்றம் செய்யப்பட்டது.  

1)ஆசிரியர் தகுதித்தேர்வை முன் தேதியிட்டு நடைமுறைப்படுத்தக்கூடாது. 

2) இவ்வாறு நடைமுறைப்படுத்துவது அரசியலமைப்பு சட்டத்திற்கும் அடிப்படை உரிமைகளையும் மீறும் செயலாகும். 

3) 23-8-2010 நாளிட்ட NCTE notification இல் குறிப்பிட்டவாறு அதற்கு முன் நியமனம் பெற்ற மற்றும் நியமன நடவடிக்கைகள் துவங்கப்பட்ட அனைவரின் பணிப்பாதுகாப்பு,பதவி உயர்வு உறுதி செய்யப்பட வேண்டும். 

4) அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிநியமனம் பெற்றவர்களைப்பொறுத்த வரை அந்தந்த மாநில அரசுகள் செயல்முறைகள் வெளியிட்ட நாளுக்கு முன்பு வரை நியமனம் பெற்றவர்களுக்கு தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். 

5) இந்நிகழ்வில் NCTE மறு சீராய்வு மனு தாக்கல் செய்யும் வழிவகைகளை ஆராய வேண்டும். 

6) மத்திய அரசுக்கு உரிய சட்ட திருத்தம் செய்யும் வகையில் NCTE கருத்துருக்களை அனுப்ப வேண்டும். 

7) புதிதாக நடத்தப்படும் தகுதித்தேர்வுகளில் அந்தந்த பாடங்களிலும் கல்வி உளவியலிலும் மட்டுமே பாடத்திட்டம் இருக்க வேண்டும் போன்றவை வலியுறுத்தப்பட்டது. கருத்துகளுக்கு பதிலளித்த NCTE CHAIRMAN இது குறித்து மத்திய கல்வி அமைச்சருடன் விரைவில் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் , ஏற்கனவே ABRSM மூலம் மாண்புமிகு பாரதப் பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதம் குறித்து வரும் நவம்பர் 18 இல் விவாதிக்க அழைத்துள்ளதாகவும், NCTE ஆசிரியர் நலனுக்கு ஆதரவான நிலையை உறுதி செய்வதாகவும் தெரிவித்தார் நமது கோரிக்கைகளை உரிய சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி தெரிவிப்பதாகவும் கூறினார். 90 நிமிடங்களுக்கு மேல் நடந்த கருத்து பரிமாற்றத்தில் அகில இந்திய பள்ளிக்கல்வி பிரிவின் செயலாளர் திரு மோகன் புரோகித், தேசிய செயலாளர் திரு பவன் மிஸ்ரா, தெலுங்கானா மாநில TPUS மாநிலத்தலைவர் திரு ஹனுமந்தராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு: 

மாநில ஊடகப்பிரிவு,

தேசிய ஆசிரியர் சங்கம் 

தமிழ்நாடு







 

Friday, October 10, 2025

திண்டுக்கல் மாவட்ட செய்திகள்!!!

 இன்று(10.10.2025) தேசிய ஆசிரியர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக பசுமை தமிழகம் திட்டத்தின் சார்பாக சுதந்திரப் போராட்ட தியாகி திரு. சுப்பிரமணிய சிவா அவர்களின் நூற்றாண்டு வருடம் மற்றும் இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேல் அவர்களுடைய நினைவாக திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சேடப்பட்டி கிராமத்தில் ஆல மரம் நடப்பட்டது..



ஜெய்ப்பூர் தேசிய ஆசிரியர்கள் மாநாட்டின் முக்கிய தீர்மானங்கள் OCT 2025!!!

 தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு 

ABRSM ராஜஸ்தான் 

அகிலபாரத ஆசிரியர்கள் மாநாட்டில் கொண்டு வந்த

ஆசிரியர் நலன் சார்ந்த 

தீர்மானம் 3 - ன் மொழிபெயர்ப்பு

தீர்மானம் – 3

கல்வி சார்ந்த மற்றும் ஆசிரியர்களின் பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்.

கல்வி மற்றும் ஆசிரியர்களின் பல பிரச்சனைகள் அரசின் அலட்சியமும் தீர்மானமின்மையாலும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளன.

அகில பாரதிய ராஷ்ட்ரிய ஷைக்ஷிக் மஹாசங்கத்தின் இந்த பொதுக்குழு, மத்திய மற்றும் மாநில அரசுகள் கீழ்க்கண்ட பிரச்சனைகளை தாமதமின்றி, உணர்வுபூர்வமான அணுகுமுறையுடன் தீர்க்க வேண்டுமென வலியுறுத்துகிறது.

1. தேசிய கல்விக் கொள்கை 2020 வெளியிடப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, அதன் செயல்பாடு, நிலைமைகள் மற்றும் காணப்பட்ட சவால்கள் குறித்த விரிவான ஆய்வு நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டும்.


2. ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறையின் அனைத்து நிலைகளிலும் உள்ள காலியிடங்கள் நிரந்தரமாக நிரப்பப்பட வேண்டும்; தற்காலிக நியமனங்கள் நிறுத்தப்பட வேண்டும்.


3. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அமல்படுத்தப்பட வேண்டும்; அதில் உள்ள முரண்பாடுகள் நீக்கப்பட வேண்டும்.


4. UGC 2025 வரைவு விதிமுறைகள் ABRSM வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் திருத்தப்படவோ அல்லது திரும்பப்பெறப்படவோ வேண்டும்.


5. ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு கோடிக்கணக்கான ஆசிரியர்களை பாதித்துள்ளது; 2010க்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் சேவை மற்றும் பதவி உயர்வை பாதுகாக்க உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும்.


6. 2004 ஜனவரி 1க்கு முன் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டம் அனைத்து ஆசிரியர்களுக்கும் மீண்டும் வழங்கப்பட வேண்டும்.


7. அனைத்து நிலைகளிலும் உள்ள ஆசிரியர்களின் ஓய்வூதிய வயது நாடு முழுவதும் ஒரே மாதிரியாக 65 ஆண்டுகளாக இருக்க வேண்டும்.


8. அனைத்து நிலைகளிலும் ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒழுங்காகவும், தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்.


9. உயர்கல்வி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு திட்ட நன்மைகள் காலவரையறைக்குள் வழங்கப்பட வேண்டும்.


10. பணியில் உள்ள ஆசிரியர்கள் Ph.D. பாடநெறி பணியில் இருந்து விலக்கு பெறவோ அல்லது அதற்கான ஊதியத்துடன் விடுமுறை / ஆன்லைன் வசதி வழங்கப்படவோ வேண்டும்.


11. உதவிபெறும் கல்வி நிறுவனங்களுக்கான ஊதியப் பரிவர்த்தனைகள் பொருளாதாரத் துறை (Treasury System) மூலம் உறுதி செய்யப்பட வேண்டும்.


12. பள்ளி மற்றும் உயர்கல்வி ஆசிரியர்களுக்கு இலவச சுகாதார வசதி வழங்கப்பட்டு, அதற்கான சரியான செயல்பாடு உறுதி செய்யப்பட வேண்டும்.


13. UGC விதிமுறை 2018 நாடு முழுவதும் ஒரே மாதிரியாக செயல்படுத்தப்பட வேண்டும்; அதில் உள்ள முரண்பாடுகளை நீக்குவதற்கான "Anomaly Redressal Committee" அறிக்கை பொதுமக்களுக்கு வெளியிடப்பட வேண்டும்.


14. நூலகர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இதர இணைந்த பணியாளர்களின் சேவை நிபந்தனைகள் ஆசிரியர்களுடன் சமமாக இருக்க வேண்டும்.


15. ஆசிரியர்கள் கல்விசார் பணிகளில் மட்டுமே ஈடுபட வேண்டும்; மதிய உணவு திட்டம் போன்ற நிர்வாகப் பணிகளில் அவர்களைச் சேர்க்கக் கூடாது.


16. மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது பட்ஜெட்டில் முறையே 10% மற்றும் 30% கல்விக்காக ஒதுக்க வேண்டும், இதனால் போதுமான ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் (புத்தகங்கள், கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்றவை) வழங்கப்படலாம்.


17. கல்வியின் தன்னாட்சி நாடு முழுவதும் மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும்; கல்வி தொடர்பான முடிவுகளில் ஆசிரியர்களின் பங்கேற்பு உறுதி செய்யப்பட வேண்டும், அரசியல் மற்றும் நிர்வாக தலையீடுகள் தவிர்க்கப்பட வேண்டும்.


18. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகள் நடைமுறைப்படுத்தத்தக்கவாறு ஒரே மாதிரியாகவும், தேவையான வளங்களுடன் செயல்படுத்தப்பட வேண்டும்.


19. கல்வியின் வணிகமயமாதல் மற்றும் தனியார்மயமாதலை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.


20. கல்லூரி முதல்வரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தப்படாமல், ஓய்வு பெறும் வரை நீட்டிக்கப்பட வேண்டும்.


21. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சரியான ஆசிரியர்–மாணவர் விகிதம் உறுதி செய்யப்பட வேண்டும். தொடக்கப் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு ஆசிரியர், மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். உயர் கல்வியில் UGC மற்றும் NEP விதிகளின்படி ஆசிரியர்–மாணவர் விகிதம் பின்பற்றப்பட வேண்டும்.


22. சுயநிதி கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் நியமனம், குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகள் ஒழுங்குபடுத்தப்பட்டு, அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.







Tuesday, October 7, 2025

TET தேர்வு : மத்திய அரசுக்கு கோரிக்கை!!!

 RTE சட்டம் வருவதற்கு முன் நியமன ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்களிக்க மத்திய அரசு சட்டம் இயற்றவேண்டும்

ஜெய்ப்பூர் மாநாட்டில் தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே ஜம் டோலியில் ABRSM (அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பு) சார்பில் அக்டோபர் 5,6,7 தேதிகளில் அகில இந்திய கல்வி மாநாடு நடந்தது ராஜஸ்தான் மாநில முதல்வர் மாண்புமிகு பஜன்லால் சர்மா அவர்கள் மாநாட்டை துவங்கி வைத்து சிறப்புரை வழங்கினார்கள் மாண்புமிகு துணை முதல்வர்கள் , மாண்புமிகு கல்வி அமைச்சர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் நாடு முழுவதிலும் இருந்து சுமார் ஆசிரியர் சங்கங்களைச்சார்ந்த 4000 நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் ஆசிரியரே சமுதாயத்திற்கு வழிகாட்டி, அனைவருக்கும் தரமான சமமான கல்வி வழங்குவதில் தேசிய கல்விக் கொள்கையில் உள்ள திட்டங்கள் , தேச முன்னேற்றத்தில் ஆசிரியர்கள் பங்கு ,பல்வேறு மாநிலங்களில் கல்வித்துறையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள்குறித்து விவாதிக்கப்பட்டது இம்மாநாட்டில் தமிழ்நாட்டில் இருந்து தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் 60 பேர் கலந்து கொண்டனர் 

இம்மாநாட்டில் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் மாநில பொதுச் செயலாளர் திரு மு.கந்தசாமி அவர்கள் சமீபபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பால் நாடு முழுவதும் சுமார் 15 இலட்சம் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் ,20-30 ஆண்டுகளுக்கு முன் நியமனம் பெற்ற இவர்கள் TET தேர்வு எழுத நிர்ப்பந்தம் செய்வதால் கற்பித்தல் பணி பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதை சுட்டிக்காட்டி RTE சட்டம் 2009 நடைமுறைக்கு வந்த பின் பணி நியமனம் பெற்று TET தேர்ச்சி பெறாமல் உள்ளவர்கள் எழுத வேண்டிய TET தேர்வு தவறான புரிதலால் அனைவரும் எழுத வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி NCTE மற்றும் மத்திய அரசு இதில் தீவிர கவனம் செலுத்தி உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் அல்லது உரிய சட்ட திருத்தம் செய்து RTE சட்டம் அந்தந்த மாநிலங்களில் அமலுக்கு வருவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார் மேலும் 

தமிழகத்தில் எமிஸ் ,யுடைஸ் பிளஸ் என பல்வேறு புள்ளிவிபரங்கள் பதிவேற்றவே ஆசிரியர்கள் நேரம் எடுத்துக்கொள்ளப்படுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும், கடந்த சில ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமலே உள்ளது இதனால் தமிழகத்தின் கல்வித்தரம் பாதிக்கும் அபாயம் உள்ளதை சுட்டிக்காட்டி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார் மேலும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை செப்டம்பர் 30 க்குள் பெற்று அக்டோபரில் அறிவிப்பதாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்புக்கு மாறாக இடைக்கால அறிக்கை மட்டுமே பெற்றது அனைவரையும் ஏமாற்றம் அடையச் செய்கிறது எனவும் தெரிவித்தார் இதை பாரதப் பிரதமர் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக அகில இந்திய அமைப்பின் பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதன் மூலம் TET பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..

நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சுமார் 4000 ஆசிரியர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.





Saturday, September 20, 2025

கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்!!!

 வணக்கம். நேற்று 18.9.2025 வியாழன் அன்று TET தேர்வுக்குத் தளர்வு கோரி மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கோரிக்கை மனு மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக அனுப்பும் நிகழ்வு நடந்தது. இதில் கன்னியாகுமரி மாவட்ட தேசிய ஆசிரியர் ங்க மாவட்டத் தலைவர் Dr.M.ஜெயபோஸ், மாவட்டச் செயலாளர் திரு.காசி. சாந்தகுமார், பொருளாளர் திரு. உதயகுமார், சேவைப் பிரிவுச் செயலாளர் திரு.ராஜன் பாபு, ஊடகச் செயலாளர் திரு. சிவகுமார், நாகர்கோவில் கல்வி மாவட்டத் தலைவர் திரு. ஜெயராஜ துரை, செயலாளர் திரு. ஹரிஹரன், ஊடகச் செயலாளர் திரு. அருள் சிகாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.



Friday, September 19, 2025

திருச்சி மாவட்ட செய்திகள்!!!


வணக்கம். TET EXAM விலக்கு கோருதல் சார்பாக திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரிடம் மாவட்ட பொறுப்பாளர்கள் சார்பில் இன்று மனு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட செய்திகள்!!!

 


கோவை மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் 
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு 
கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் .....

Nagapattinam District News!!!

 தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு அமைப்பின் தேசிய அமைப்பு மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய ஆசிரியர் அமைப்பான ABRSM அமைப்பு நாடு முழுவதும் 800 மாவட்டங்களில் இருந்து ஆசிரியர் தகுதி தேர்வு தீர்ப்பு விவகாரத்தில் மேதகு பிரதமர் அவர்கள் பணிபுரியும் ஆசிரியர்களை கண்ணியமாக நடத்தவும் சீரிய வழியை காட்ட வேண்டுமாய் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழியாக பிரதமருக்கு வேண்டுகோள். நாகப்பட்டினம் மாவட்ட நிகழ்வு.