Showing posts with label சங்க செயல்பாடுகள். Show all posts
Showing posts with label சங்க செயல்பாடுகள். Show all posts

Monday, February 24, 2025

நமது கோரிக்கைகள் - CLICK HERE 

இன்று (24.02.2025) தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு இணைந்துள்ள அரசு அலுவலர் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பை தமிழ்நாடு அரசு சார்பில் நான்கு அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்திருந்தது. பேச்சுவார்த்தையில் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் மாநில துணைத் தலைவர் திரு முருகன் கலந்து கொண்டார்   கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்  தமிழ்நாடு அரசு அலுவலர் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு அமிர்தகுமார்  பழைய ஓய்வூதியத் திட்டத்தை முன்பு இருந்தது போல் மீண்டும் அமல்படுத்த வேண்டும்.இதனால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை எதுவும் ஏற்படாது என்பதையும் நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை  உடனடியாக வழங்க வேண்டும் .ஊக்க ஊதிய உயர்வை முன்பு இருந்தது போல்  வழங்கவேண்டும் CPS திட்டத்தை ரத்து செய்யும் வரை அவர்களுக்கு பணிக்கொடை  மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கலந்து பேசி தீர்வுகள் காணப்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.








Sunday, February 23, 2025

திண்டுக்கல் மாவட்ட செய்திகள்!!!

 இன்று (23-02-2025) திண்டுக்கல்லில். GTN கலைக் கல்லூரி எதிர்ப்புறம் அமைந்துள்ள GS நகர் செல்வ விநாயகர் திருக்கோவிலில் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக தேர்வு எழுதக்கூடிய பள்ளி கல்லூரி மாணவர் நலனுக்காகவும் ஆசிரியர்கள் நலனுக்காகவும். மேதா ஹோமம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்டத் தலைவர் திரு இளன் பருதி வரவேற்பு வழங்கி துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் மருத்துவர் டாக்டர். ராம்குமார் ,  பேராசிரியர் டாக்டர். ராமச்சந்திரன் ,சமூக ஆர்வலர் திரு. கோபாலகிருஷ்ணன் ,ஜெய்ஹிந்த் அகாடமி தலைவர் திரு. சந்தானம் ஆகியோர்  மாணவர்கள் தேர்வை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் மற்றும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு யோகாவின் முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கியமான உணவு பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. 70க்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.மாவட்ட பொருளாளர் திரு. மணிகண்டன் நன்றியுரை வழங்கினார் .நிகழ்ச்சியை மாநிலத் துணைத் தலைவர் திரு பா. விஜய் ஏற்பாடு செய்தார் .













Friday, January 10, 2025

திருப்பூர் மாவட்ட செய்திகள்!!!







CPS ஒழிப்பு இயக்கம் சார்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்திக்கோரி,நேற்று மாலை 5 மணி அளவில் (9.2.25 ,வியாழக் கிழமை அன்று,) தாராபுரம் பேருந்து நிலையம் முதல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது. 

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சாந்தி தலைமை தாங்கினார். 


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் தோழர் ஈஸ்வரமூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 

மாநில இணை ஒருங்கிணைப்பாளர் தோழர் நவீன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். 

துறைவாரிச் சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். 
தேசிய ஆசிரியர் சங்கம்  சார்பாக நிர்வாகிகள் 1.கோட்டச் செயலாளர்   
    வ.கோபாலகிருஷ்ணன்,
2.மாவட்டச் செயலாளர்
    திரு கோ.சுரேஷ்,
3.செயற்குழு உறுப்பினர்கள் 
    திரு சி.மகுடீஸ்வரன்,
    திரு ச.பாலமுருகன்,
    திரு அண்ணாதுரை
    கலந்து கொண்டனர்..
     
   CPS ரத்து எப்போது?     
   புத்தகத்தினை பேரணியில்   
   கலந்து கொண்ட       
   அனைவருக்கும் வழங்கி 
   தமிழ்நாடு அரசு     
  ஊழியர்கள் சங்க மாநில   
  துணைத்தலைவர் தோழர்   
  செந்தில்குமார் அவர்கள் 
  நிறைவுறையாற்றினார்.


தோழர் பிரேமலதா நன்றி கூறினார்.