தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு மாவட்ட நிர்வாகிகளுக்கான இரண்டு நாள் ஆளுமைத்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் தர்மபுரி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியில் 24.05.2025 & 25.05.2025 நாட்களில் நடைபெற்றது
இந்த இனிய நிகழ்வில் ஒகேனக்கல் சனாதன தர்ம ஆஸ்ரமத்தின் ஹரி ஓம் சுவாமி ராமானந்தா அவர்கள் திருவிளக்கு ஏற்றி வைத்து ஆசி வழங்கினார்.
நமது அகில பாரத அமைப்பான ABRSM ன் அகில பாரத பிரமுகர் (பள்ளிக்கல்வி) திரு.சிவனந்த சித்தன்கரே அவர்கள் சங்க வளர்ச்சி பற்றி சிறப்புரை வழங்கினார்.
மேலும் இந்த இனிய நிகழ்வில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து மாநில கோட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
ஆளுமைத் திறன் பண்பு பயிற்சியில்
# ஆசிரியர்களின் குணநலன்
# நமது சங்க வளர்ச்சியில் ஊடகத்தின் பங்கு
# ஆசிரியர்களுக்கான நேர மேலாண்மை
# தேசிய கல்விக் கொள்கையில் ஆசிரியர்களுக்கான சாதக பாதகம்
# இன்றைய சூழலில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் தீர்வுகளும் ஆகிய தலைப்புகளில் விவாதங்கள்
# சேவைப் பணியில் தேசிய ஆசிரியர் சங்க செயல் பாடு ஆசிரியர்களின் குண நலன்கள் பற்றி கல்வியாளர் திரு குமாரசாமி அவர்கள் தெளிவாக எடுத்து கூறினார்
இரண்டு நாள் பயிற்சியில் முக்கிய அம்சமாக விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் மணிமண்டபத்துக்கும் பாரதமாதா திருக்கோவிலுக்கும் சென்று தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு
No comments:
Post a Comment