Saturday, June 14, 2025

ABRSM - தேசிய செயற்குழு கூட்டம்!!!

 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அகில பாரத ராஷ்ட்ரிய ஷைஷிக் மகா சங்கத்தின் (ABRSM) தேசிய செயற்குழு மற்றும் தேசம் முழுவதும் உள்ள பொறுப்பாளர்களின் கூட்டம் நேற்று

(13.06.2025) ஹிமாச்சல் பிரதேசம், சிம்லா வில் தொடங்கியது.

 இக்கூட்டத்தில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கடந்த ஆறு மாதங்களில் ஒவ்வொரு மாநில சங்கமும் ஆசிரியர்களுக்கென செய்த செயல்களைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.

 தமிழகத்தின் சார்பில் நமது மாநில தலைவர் திரு.ம.கோ. திரிலோகசந்திரன் அவர்கள் கலந்துகொண்டு, தமிழகத்தில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை அலுவலர்களிடம் முறையிட்டு நிறைவேற்றியவை, FOTA-GEO ஆர்ப்பாட்டங்கள், அதன் மூலம் பெற்ற EL சரண்டர், பழைய ஓய்வூதியம் பெற CPS ஒழிப்பு இயக்கத்துடன் நமது பணி,இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு,பதவி உயர்வு, TET முடிக்காத சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நிலை, பதவி உயர்விற்கு TET முடிக்க வேண்டும் என்ற நிபந்தனை, பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலை, பணியிடங்கள் நிரப்பப்படாத சூழல் என அனைத்தையும் விரிவாக எடுத்துரைத்தார்.

இக்கூட்டம் சிம்லாவில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

செய்தி வெளியீடு 

மாநில ஊடகப் பிரிவு 

தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு










No comments:

Post a Comment