தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு ஆளுமை திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
பராபவ ஆண்டு வைகாசி 9 மற்றும் 10 (மே மாதம் 23 மற்றும் 24) சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் ஸ்ரீ வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி சிவாஜி நகர் அம்மாபேட்டை சேலத்தில் நடைபெற்றது. துவக்க நிகழ்வில் டாக்டர் கிருஷ்ண செட்டி வித்யா மந்திர் கல்வி குழும தாளாளர் அவர்களும் திரு ராசி சரவணன் வணிகர் சங்க தலைவர் சேலம் அவர்களும் பேராசிரியர் ரா குமாரசாமி ஓய்வு பெற்ற பேராசிரியர் சேலம் கலை கல்லூரி அவர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாநிலத் தலைவர் திரு மா கோ திருலோகசந்திரன், மாநிலத் துணைத் தலைவர்கள் திரு முருகன், திரு விஜய், திரு வினோத் , மாநிலச் பொது செயலாளர் திரு மு கந்தசாமி , மாநில பொருளாளர் திரு திருஞான குகன் , மாநில இணைச்் செயலாளர் திரு ராகவன்,மாநில மகளிர் செயலாளர் திருமதி ஸ்ரீ சாருமதிதேவி மற்றும் ஊடக அணி இணைச் செயலளர் திரு ஶ்ரீராம் வழிகாட்டுதல்படி இரண்டு நாட்கள் சிறப்பாக பயிற்சி நடைபெற்றது. ABRSM இன் அகில இந்திய பொறுப்பாளர் திரு லட்சுமன் ஜி அவர்கள் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு நமது சங்கம் (MISSION & VISION) குறித்து எடுத்துரைத்தார்.இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு கோட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு மன்னார்குடி ஜீயர் ஆசியுரை வழங்கினார்.இதில் ஆசிரியர் ஆளுமை திறன் மேம்பாட்டு சார்ந்த பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. கல்வி ஆற்றில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட பொறுப்பாளர்கள் மிகச்் சிறப்பாக செய்திருந்தனர்.

















































