சந்திப்பு
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் இன்று பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி), இணை இயக்குனர் (இடைநிலை)
பள்ளிக்கல்வி இயக்குனர் ஆகியோரை தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு மாநிலத்தலைவர் திரு திரிலோகச்சந்திரன், பொதுச் செயலாளர் திரு கந்தசாமி ஆகியோர் சந்தித்து பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண கோரினர்கள்.
பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களுடனான சந்திப்பின் போது
சிறுபான்மையற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளில் 23-8-2010 க்கும் பிறகு இடைநிலை/பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் TET தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஒப்புதல், ஆண்டு வளரூதியம் ஆகியவை வழங்கிட வேண்டும் எனக் கோரினோம் நியமன அலுவலருக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் பணிப்பதிவேட்டில் TET தேர்ச்சி பெற்றதை பதிவு செய்து கொள்ளலாம் எனத்தெரிவித்தார்
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து கேட்ட போது விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே கடந்த 22-11-2025 இல் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் கலந்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அடுத்து இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அவர்களை சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேசினோம்
அவருடன் பேசும் போது. பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் PAY CELLS உச்ச பட்ச நிலையை அடைந்ததால் அவர்கள் ஆண்டு வளரூதியம் பெற இயலாத நிலை குறித்து பேசினோம் கடந்த ஐந்து ஆண்டுகள் முன்பாக நீட்டிப்பு செய்யப்பட்ட அரசாணையை பெற்று நிதித்துறைக்கு தெரிவிப்பதாக தெரிவித்தார்
தற்காலிக பணியிடங்கள் நிரந்தரப்பணியிடங்களாக IFHRMS இல் மாற்றப்படாத இடைநிலை ஆசிரியர்கள் ஊதியமின்றி இருப்பதை சுட்டிக்காட்டி ஊதியம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டினோம் இது குறித்த பாதிக்கப்பட்டோர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெறுவதாகவும் விரைவில் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்
பொதுப்பிரிவினர், மாற்றுத்திறன் ஆசிரியர்கள் TET தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்பட வேண்டும் எனக்கோரினோம் இது குறித்து நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் கருத்துகளை தெரிவிப்பதாகக்கூறி இது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது எனக்கூறி பிற மாநிலங்களில் மதிப்பெண் குறைப்பு செய்யப்பட்ட விபரங்களை தான் அறிந்துள்ளதாக தெரிவித்தார்.
பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (இடைநிலை) அவர்களை சந்தித்து பேசினோம் நிதி உதவிப் பள்ளிகள் சார்ந்த பிரச்சனைகளை உடனடியாக தீர்வு காண்பதாக தெரிவித்தார்.



No comments:
Post a Comment