Sunday, July 7, 2024
Saturday, July 6, 2024
Friday, July 5, 2024
சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 14 !!!
அருள்மிகு வானமாமலை பெருமாள் கோவில் , நாங்குநேரி , நெல்லை மாவட்டம்
(ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரம்)
கோவில் கருவறையில் ஆதிசேடன் குடையாய் இருக்க, வானமாமலைப் பெருமாள் வைகுண்டபதியாக அமர்ந்த திருக்கோலத்தில் இருக்கிறார். அவருக்கு இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி தாயார்கள் காட்சி தருகிறனர். இவர்களுக்கு ஊர்வசியும் திலோத்தமையும் சாமரம் வீசுகின்றனர். பிருகு முனிவர், மார்க்கண்டேய முனிவர், சூரியன், சந்திரன் ஆகியோர் பெருமாளை சேவித்தபடி, கருவறையில் வீற்றிருக்கின்றனர். அர்த்த மண்டபத்தில் கருடாழ்வார், விஷ்வக்சேனர் இருக்கிறார். இந்த 13 விக்கிரகங்களும் சுயம்புகள் என்றும். வைகுண்டத்தில் பெருமாள் எப்படி வீற்றிருப்பாரோ அத்தகைய கோலத்திலேயே சுவாமி இங்கு இருப்பதாக நம்பிக்கை உள்ளது.
மேலும் கோயிலில் ஞானப்பிரான், லட்சுமி நாராயணர், வேணுகோபாலன், தசாவதார மூர்த்திகள், ராமர், கண்ண பிரான், சக்கரத்தாழ்வார் ஆகியோர் தனிச் சன்னிகளில் உள்ளனர். குலசேகர மண்டபத்தில் நம்மாழ்வாரைத் தவிர 11 ஆழ்வார்களும், கருவறைப் பிரகாரத்தில் 32 ரிஷிகள், தும்பிக்கை ஆழ்வார் ஆகியோரும் உள்ளனர். இத்தலத்தில் உள்ள சேற்றுத் தாமரை தீர்த்தமானது திருப்பாற்கடலின் அம்சமாகவும் சாபம் நீக்கக்கூடியதாகவும் கருதப்படுகிறது.
இத்தலம் நம்மாழ்வாரால் மட்டும் 11 பாக்களில் பாடப்பெற்றது. இத்தலத்தில் மட்டுமே சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
Thursday, July 4, 2024
பசுமை தமிழகம் - Pilot Project!!!
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳 முன்னெடுத்துள்ள ஒரு மாணவன் மற்றும் ஒரு ஆசிரியர் ஒரு மரக்கன்று🌳 வளர்த்தல் என்ற உன்னதமான பணியை-சுவாமி விவேகானந்தர் நினைவை🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳 போற்றும் வகையில் இன்று (04/07/2024) தர்மபுரி மாவட்டம் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஓசஅள்ளிபுதூர் நடுநிலைப்பள்ளியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியும் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டும் இந்த உன்னதமான பணி💐💐💐💐💐 துவக்கப்பட்டுள்ளது மேலும் மாவட்டத்தில் ஒன்பது பள்ளிகளில் 475 மரக்கன்றுகள் மாணவர்களுக்கு வழங்கி பராமரிக்கும்படி முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாம் கேட்டுக் கொண்டதின் பேரில் நமது இந்தப் பணிக்கு மரக்கன்றுகள் வழங்கிய தர்மபுரி🎊 மாவட்டம்🌳🌳🌳 இயற்கையை காப்போம் அமைப்பினருக்கும் நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் பணியை💐💐💐 தேசிய ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் முருகன் மற்றும் தர்மபுரி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் முன்னெடுத்து செயல்படுத்தி உள்ளனர் .
இந்த பணியானது மேலும் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற வேண்டும் எனவும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
Wednesday, July 3, 2024
Tuesday, July 2, 2024
INSPIRE AWARD APPLY 2024-25
INSPIRE AWARD APPLY 2024-25 ACADEMIC YEAR 01-07-24 TO 15-09-24.
The online nominations for 2024-25 , will resume from 01st July , 2024. The schools will be able to submit their online nominations till 15th September , 2024 .
Monday, July 1, 2024
தேசிய மருத்துவர்கள் தினம் - ஜூலை 1
In India the National Doctors' Day is celebrated on 1stJuly all across India to honor the legendary physician and the second Chief Minister of West Bengal, Dr. Bidhan Chandra Roy. Dr Roy was honored with the country's highest civilian award, Bharat Ratna on 4thFebruary 1961. The celebration of the Doctors' Day is an attempt to emphasize on the value of doctors in our lives and to offer them our respects by commemorating one of their greatest representatives. India has shown remarkable improvements in the medical field and July 1 pays a perfect tribute to all the doctors who have made relentless efforts towards achieving this goal irrespective of the odds.
தேசிய மருத்துவர்கள் தினம்: ஜூலை 1 - பி.சி.ராய் பிறந்த தினம்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி டாக்டர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மாபெரும் மருத்துவ மேதையும், மேற்கு வங்க மாநிலத்தின் 2- வது முதல்வர் என்ற பெருமைக்குரியவருமான மறைந்த டாக்டர் பிதான் சந்திர ராய் (பி.சி. ராய்) பிறந்த தினத்தைத்தான் டாக்டர்கள் தினமாக இந்தியாவில் கொண்டாடுகிறார்கள்.
1882-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பிறந்தார் ராய். 1962-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி தனது 80-வது வயதில் அவர் மறைந்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் படித்த ராய் ஒரே நேரத்தில் மருந்தியல் மற்றும் அறுவை மருத்துவத்திற்கான எம்.ஆர்.சி.பி மற்றும் எஃப்.ஆர்.சி.எஸ் படிப்புகளை இரண்டாண்டுகள் மூன்று மாதங்களிலேயே படித்து முடித்தது ஓர் சாதனையாகும். அவரது அளப்பரிய சேவை கருதி இந்திய அரசு அவருக்கு 1961-ம் ஆண்டு அவருக்கு பாரதரத்னா விருது வழங்கி கவுரவித்தது.
Sunday, June 30, 2024
திருச்சிராப்பள்ளி மாவட்டச் செய்திகள்
இன்று(30/06/2024) தேசியஆசிரியர் சங்க(தமிழ்நாடு) மன்டலக் கூட்டம் திருச்சி திருவானைக்கோவில் இனிதே நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலாவதாக மாவட்ட செயலாளர் திரு ஆறுமுகம் வரவேற்புரை நல்கினார். மாநில இனணச் செயலாளர் திரு ராஜகேபாலன் சந்தா சேகரிப்பு பற்றி விவரித்து கூறினார். மாநில ஊடகச் இணை செயலாளர் திரு ஸ்ரீராம் கடந்த கல்வி ஆண்டில் நடைபெற்ற சங்க நிகழ்வுகள் குறித்து பேசினார். மாநில இனணச் செயலாளர் திரு ராகவன் சங்கத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை பற்றி வழிகாட்டினார். திருச்சி மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி மல்லிகா உட்பட பல ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாநில துணைத் தலைவர் திரு ப. விஜய் அவர்கள் குரு வந்தனம் நிகழ்வைப் பற்றியும். அலுவலக நடைமுறை பற்றியும் பசுமை தமிழகம் திட்டம் பற்றியும் எடுத்துரைத்தார். நிறைவாக மாவட்ட பொருளாளர் திரு சோமசுந்திரம் அவர்கள் நன்றி உறை வழங்கினார். பணி நிறைவு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் திரு விஜேந்திரன் , பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் திரு முரளி மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டச் செய்திகள்
19.06.2024 அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட துணைத்தலைவர் திரு வினோத் அவர்களுக்கு மகன் பிறந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு அவர்கள் இல்லத்தில் மாவட்ட செயற்குழு நடைபெற்றது .
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாநில இணைச் செயலாளர் திரு.கதிர்வேல் , மாவட்டத் தலைவர் திரு. ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் திரு. தர்மலிங்கம், மாவட்ட பொருளாளர் திரு கோவிந்தன், மாவட்ட சேவை பிரிவு செயலாளர் திரு சதீஷ்குமார், மாவட்ட துணை தலைவர் திரு வினோத் மற்றும் திருமதி சங்கீதா உள்ளிட்டோர் இன்றைய மாவட்டச் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மாவட்டச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
*1. கள்ளக்குறிச்சி மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் திரு. கோவிந்தன் அவர்கள் மாவட்ட பொருளாளராக ஒரு மனதாக நியமிக்கப்பட்டார்*
2. நீதியரசர் திரு சந்துரு அவர்களின் குழுவின் அறிக்கையில் ஒரு தலைப்பட்சமாக ஹிந்து மத அடையாளங்களை மட்டும் அழிக்கும் விதத்தில் உள்ள அனைத்தையும் கைவிட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
3. அந்தக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஜீரோ கவுன்சிலிங் என்பது ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த மன உளைச்சலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் உள்ள வகையில் உள்ளதால் இதையும் கைவிட வேண்டும்.
4. மேலும் திரு சந்துரு அவர்களுக்கு குழுவின் அறிக்கையில் தொடக்கக் கல்வி ஆசிரியர்களை பழைய முறையில் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் விட வேண்டும் என்பதையும் கைவிட வேண்டும்
மேலே உள்ள பல விஷயங்கள் ஆசிரியர்களின் நலனுக்கு எதிராக உள்ளதால் நீதியரசர் திரு. சந்துரு அவர்களின் குழு அறிக்கையை தமிழக அரசு முழுமையாக நிராகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்
தேசிய ஆசிரியர் சங்கம்
தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி மாவட்டம்
Saturday, June 29, 2024
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நிரவல் தொடர்பாக 28/6/2024 அன்று வெளியிடப்பட்டுள்ள புதிய அரசாணை !!!
Download
சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 13 !!!
அருள்மிகு காளமேகப் பெருமாள் கோயில் ,திருமோகூர் , மதுரை
Friday, June 28, 2024
SMC - மறுகட்டமைப்பு நடைமுறைகளை மேற்கொள்ளுதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அனுமதி அளித்தல் - ஆணை வெளியீடு!!!
பள்ளி மேலாண்மைக் குழு 2024-2026 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு 2024 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைமுறைகளை மேற்கொள்ளுதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது .
GO [MS] 144 DT 28-06-2024 SMC