Friday, July 31, 2026

ஈரோடு மாவட்ட செய்திகள்!!!

 CLICK HERE TO DOWNLOAD 




மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஈரோட்டில் சந்திப்பு


இன்று (31-7-26) ஈரோடு வருகை தந்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு ராஜ்மோகன் அவர்களை தேசிய ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் கந்தசாமி தலைமையில் மாநில பொருளாளர் திருஞான குகன், ஈரோடு மாவட்ட தலைவர் சண்முக ராஜூலு, செயலாளர் ஸ்ரீதரன் , மகளிர் அணி செயலாளர் திருமதி கிருத்திகா மாவட்ட பொருளாளர் சுரேஷ்குமார் இணைச்செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.

சந்திப்பின் போது 

அரசுப்பள்ளியில் 8 ம் வகுப்பு வரை காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த உள்ளமைக்கும்,

அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் வினாத்தாள் கட்டணம் ரத்து செய்ய பரிசீலனை செய்ய உள்ளதாக அறிவித்தமைக்கும் நன்றி தெரிவித்தோம் 

அதே சமயம் 

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு 20 அரை நாட்கள் சிறப்பு அனுமதி வழங்குதல் 

6-8 வகுப்புகளில் ஆல் பாஸ் நடைமுறையை மறுபரிசீலனை செய்தல் 

கூடுதல் தேவை என கண்டறியப்பட்ட அனைத்து ஆசிரியர் பணியிடங்களளை இயக்குனர் பொதுத்தொகுப்பிலிருந்து தேவையான பள்ளிகளுக்கு வழங்கி பணியிடம் நிரப்பப்படும் வரை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நிரப்ப அனுமதி அளித்தல் 

ஆசிரியர் பயிற்றுநர் ஊதியத்தை IFHRMS மூலம் வழங்க நடவடிக்கை எடுத்தல் 

தாளவாடி வட்டார ஆசிரியர்களின் கர்நாடக மாநில சான்றிதழ் மதிப்பீடு செய்து ஆணை வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தினோம் அனைத்தையும் பரிசீலனை செய்வதாக அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்

No comments:

Post a Comment