Saturday, February 21, 2026

திண்டுக்கல் மாவட்ட செய்திகள்!!!

 தேசிய ஆசிரியர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக GS நகர் அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோவிலில் நேற்று (20/2/2026)பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனுக்காக மேதா யாகம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் திரு. இளன் பருதி வரவேற்புரையாற்றினார் 

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி .ஸ்ரீ சாருமதி தேவி அவர்கள் வருகை புரிந்து மாணவர்களிடம் தேர்வுக்கு தயாராகும் முறை பற்றி தன்னம்பிக்கை உரையாற்றினார் 

மேலும் திண்டுக்கல் ஜி டி என் கலைக்கல்லூரியின் பேராசிரியர் திரு. ராஜமோகன் மற்றும் லட்சுமி கல்வியியல் கல்லூரி பேராசிரியர் திரு. வின்சென்ட் ராஜசேகர் ஆகியோர் மாணவர்களுக்கு தேர்வுக்கு தயாராக பல்வேறு யுக்திகளை கூறினார்கள். மாவட்ட பொருளாளர் திரு. மணிகண்டன் அவர்கள் நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாநில துணைத்தலைவர் திரு .விஜய் அவர்கள் ஏற்பாடு செய்தார். இந்நிகழ்ச்சிக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.









No comments:

Post a Comment