நமது கோரிக்கைகள் - CLICK HERE
இன்று (24.02.2025) தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு இணைந்துள்ள அரசு அலுவலர் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பை தமிழ்நாடு அரசு சார்பில் நான்கு அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்திருந்தது. பேச்சுவார்த்தையில் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் மாநில துணைத் தலைவர் திரு முருகன் கலந்து கொண்டார் கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு அரசு அலுவலர் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு அமிர்தகுமார் பழைய ஓய்வூதியத் திட்டத்தை முன்பு இருந்தது போல் மீண்டும் அமல்படுத்த வேண்டும்.இதனால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை எதுவும் ஏற்படாது என்பதையும் நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை உடனடியாக வழங்க வேண்டும் .ஊக்க ஊதிய உயர்வை முன்பு இருந்தது போல் வழங்கவேண்டும் CPS திட்டத்தை ரத்து செய்யும் வரை அவர்களுக்கு பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கலந்து பேசி தீர்வுகள் காணப்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment