Sunday, February 12, 2023

ABRSM அகில இந்திய செயற்குழு கூட்டம் 2023

 உத்திரபிரதேசம் மாநிலம்.காசி நகரத்திற்கு அருகில் உள்ள சாரநாத் நகரத்தில்.ABRSM அகிலஇந்திய செயற்குழு (11/2/2023 -12/2/2023) நடைபெற்று வருகிறது. அதில் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக. மாநிலத் துணைத் தலைவர் திரு பா விஜய் மற்றும் மாநில இணை செயலாளர் திரு.S.ராகவன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

செயற்குழுவில் தமிழக ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான

 1.பழைய பென்ஷன் திட்டம் கொண்டு வருவதை பற்றி கோரிக்கை வைக்கப்பட்டது.

 2.தமிழகத்தில் தமிழ் மொழியை வளர்த்திட மேலும் இரண்டு மத்திய தமிழ் பல்கலைக்கழகங்கள். மதுரை மற்றும் கோவையில் நிறுவ கோரிக்கை வைக்கப்பட்டது. 


3.தமிழகத்திலே நவோதயா பள்ளிகள் துவங்க வேண்டும்.   

 

   4.ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டம்


 5.தமிழகத்தின் அனைத்து பள்ளிகளையும் பள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தின்  கீழ் கொண்டு வருதல்.


 6.வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ் கற்க ஆவன செய்தல். 

7.திருக்குறள் மற்றும் பாரதியாரின் கவிதைகளை தேசிய மயமாக்கி அனைத்து மாணவர்களும் கற்க ஆவன செய்தல்.


 8.தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமனம் செய்வதை தவிர்க்க வேண்டுதல்.


 9.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருமான வரி கழிவில்சேமிப்புத் தொகை வரம்பை ரூபாய் 1,50,000 இருந்து மூன்று லட்சமாக அதிகரித்தல் .இதன் மூலம் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பயன்பாடுவார்கள்.


 10.தமிழகத்தில் மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழியில் மாணவர்கள் படிக்க ஏற்பாடு செய்தல்


11.EMIS portal பணிக்கு தனியாக ஒரு அலுவலரை நியமித்து. ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் பணியை மட்டும் அளித்தல்.


 12.பகுதி நேர ஆசிரியர்களை  பணி நிரந்தரம் செய்தல்








No comments:

Post a Comment