Thursday, December 8, 2022

பள்ளிக்கல்வியை பாதுகாக்க தமிழக அரசின் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்

நாள் : 27-12-2022  செவ்வாய்க்கிழமை
இடம் : வள்ளுவர் கோட்டம்சென்னை
நேரம் : மதியம் 2:00 மணி முதல் 5:00  மணி வரை



ஆசிரியர்களுக்கான பணிப்பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்று

மாணவர்களிடையே போதைப் பழக்கம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வழிகாட்டு நடைமுறைகளை உடனடியாக வெளியிடுக

 பணி நிறைவு பெற்ற பின் வாழ்வாதாரம் காக்க பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்து

கோட்டத்தில் ஒலிக்கும் குரல்

கோட்டையில் எதிரொலிக்கட்டும்

.கோ.திரிலோகசந்திரன்         மு.கந்தசாமி

      மாநிலத்தலைவர்                    பொதுச்செயலாளர்

நிறைவேற்றக் கோரும் மற்ற கோரிக்கைகள்

1. அரசுப் பள்ளி மாணவர்களின் குடும்பத்தாருக்குக் குழுக் காப்பீடு திட்டம் துவக்க          வேண்டும்.

2.  அரசுப் பள்ளிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்ப தேவையான அளவு வகுப்பறைகள், கழிப்பறைகள் ,தண்ணீர் வசதி, நூலகம், அறிவியல் ஆய்வகம் ஆகியவற்றைப் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.

3. மாணவர்கள் கற்றல் அடைவுகளில் பின்தங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டு அனைத்து நிலையிலும் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:30 என நிர்ணயம் செய்து அதற்கான ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்தல் அப்பணியிடங்களை நிரந்தரமாக காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்.

4.  உலகத் தரத்திலான கல்வி வளர்ச்சியை அடைய பள்ளிக்கல்வித்துறை நிதியை மொத்த GDP யில் 6% ஒதுக்க வேண்டும்

5. மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப மும்மொழிக் கல்வித் திட்டத்தைத் தமிழகத்தில் அமல்படுத்தி மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

6. ஆசிரியர்களைக் கல்வி சாராத நிர்வாக ரீதியாக பணிகளில் ஈடுபடுத்துவதை முற்றிலும் தவிர்த்துக் கற்றல் கற்பித்தல் பணிகளில் மட்டும் ஈடுபடுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

7. ஊக்க ஊதிய உயர்வு ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றை 2020க்கு முன்பிருந்த நிலை முறையில் வழங்க வேண்டும்.

8. அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு வழங்கியது போல் ஜூலை 2022 முதல் முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்க வேண்டும்.

9. தொடக்கப் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்பதும் நடுநிலைப்பள்ளி வகுப்புகளில் பாடத்திற்கு ஒரு ஆசிரியர் என்பதும் உறுதி செய்யப்பட வேண்டும் மற்றும் தகுதி பெற்ற தொடக்கக்கல்வி ஆசிரியர்களில் தகுதி பெற்றவர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில் 10% வழங்க வேண்டும்

10.  01-06-2009 க்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு சரி செய்ய வேண்டும்.

11. கள்ளர் பள்ளிகளில் இருந்தும் பள்ளிக் கல்வித்துறையில் இருந்தும் அலகு விட்டு அலகு மாறுதல் கோரும் ஆசிரியர்களுக்குத் தடையின்மை சான்று  அனைவருக்கும் வழங்க வேண்டும்.

12. ஆசிரியர் பயிற்றுர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த பணிமாறுதலின் படி தொடர்ந்து 500 ஆசிரியர் பயிற்றுநர்களைப் பள்ளிகளுககு மாறுதல் அளிக்க வேண்டும்.

13. பகுதி நேர ஆசிரியர்களை முறையான கால ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.


No comments:

Post a Comment