Sunday, January 16, 2022

ஆன்மிக தகவல் - உலகின் முதல் பத்து பெரிய இந்து கோவில்களின் தொகுப்பு !!!

  1. ஆங்கோர் வாட் - ஆங்கோர் - கம்போடியா

அங்கோர் வாட் என்பது கம்போடிய நாட்டின் அங்கோர் என்னும் இடத்தில் உள்ள கோவில்களின் தொகுப்பைக் குறிக்கும். இதுவே உலகின் மாபெரும் சமயம் சார்ந்த கட்டிடம் ஆகும். இதன் பரப்பு 162.6 எக்டேர்கள் (1,626,000 m2; 402 ஏக்கர்கள்). இது 12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இரண்டாம் சூரியவர்மனால் அவனது நாட்டின் தலைநகராகவும் நாட்டின் கோவிலாகவும் கட்டப்பட்டது. கட்டப்பட்ட காலத்தில் இருந்தே மிகவும் முதன்மையான வழிபாட்டு இடமாக உள்ள கோவில் இது ஒன்றே. முதலில் திருமால் கோவிலாக இருந்த இது தற்போது பவுத்தக் கோவிலாக உள்ளது.

2. அரங்கநாத சுவாமி கோயில் - ஸ்ரீரங்கம் - திருச்சிராப்பள்ளி

இந்தக் கோவில் மொத்தம் 156 ஏக்கர் (631,000 m²) நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதன் சுற்றளவு 4,116 மீட்டர் (10,710 அடி). இந்தியாவின் மிகப்பெரிய கோவில் இதுவேயாகும்.மேலும் உலகில் உள்ள சமயம் சார்ந்த பெரிய வளாகங்களுள் இதுவும் ஒன்று. ஏழு சுற்றுக்களும் 21 கோபுரங்களும்  கொண்டது.

3. அக்சரதாம் -  தில்லி 

அக்சர்தாம் இந்தியாவின் தில்லியில் உள்ள ஓர் இந்துக் கோவில் வளாகமாகும்.தில்லி அக்சர்தாம் என்றும் சுவாமி நாராயண் அக்சர்தாம் என்றும் வழங்கப்பெறுகிறது.7,000 கட்டிடக் கலைஞர்களைக் கொண்டு கட்டப்பட்டது.

4.  ஸ்ரீராமகிருஷ்னா மடம் - பேலூர் - ஹவுரா - மேற்கு வங்காளம்

பேலூர் மடம் என்பது இராமகிருட்டிணரின் தலைமைச் சீடரான விவேகானந்தரால் தொடங்கப்பபட்ட இராமகிருட்டிண இயக்கத்தின் தலைமையகம் ஆகும். இது மேற்கு வங்களாத்தில் ஊக்லி ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. கொல்கத்தா நகரின் முக்கிய நிறுவனங்களுள் இதுவும் ஒன்று. இக்கோவில் இந்து, முசுலீம், கிறித்துவ மதங்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் விதமாக இம்மூன்றின் கட்டிடக்கலை அமைப்புகளையும் உள்ளடக்கிக் கட்டப்பட்டுள்ளது.

5. நடராசர் கோயில் - சிதம்பரம்  - கடலூர்

தில்லை நடராசர் கோவில் அல்லது கூத்தன் கோவில் என்று அறியப்படும் கோவில் தமிழ்நாட்டின் சிதம்பரத்தில் உள்ள ஒரு பெரிய சிவன் கோவில். இது 40 ஏக்கர் பரப்பளவில் சிதம்பரம் நகரின் நடுவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் சிவனைத் தவிர சிவகாமி அம்மன், முருகன், பிள்ளையார், கோவிந்தராசப் பெருமாள் ஆகியோருக்கும் கோவில்கள் உள்ளன.


6.பிரம்பானான் கோயில்- யோக்யகர்த்தா- இந்தோனேசியா

பிரம்பானான் கோவில் என்பது இந்தோனேசியாவின் மத்திய சாவகத்தில் உள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். இது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இங்கு பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் கூட கோவில்கள் உள்ளன. இக்கோவில் யோக்கியகர்த்தா நகரில் இருந்து 17 கி.மீ தொலைவில் வடகிழக்குத் திசையில் உள்ளது.

7. பெருவுடையார் கோவில் - தஞ்சாவூர்

தஞ்சைப் பெருவுடையார் கோயில்அல்லது தஞ்சைப் பெரிய கோயில் என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ளசோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும்தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார். 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன.

8. அண்ணாமலையார் கோயில் -    திருவண்ணாமலை

அண்ணாமலையார் கோவில் ஒரு குறிப்பிடத்தகுந்த சிவன் கோவில் ஆகும். கோவில் செயல்கள் நடைபெறும் பரப்பளவின் அடிப்படையில் இது இரண்டாவது பெரிய கோவிலாக விளங்குகிறது. கோவிலின் நாற்புறமும் கோபுரங்களும் கோட்டை போன்ற உயர்ந்த மதில்களும் உள்ளன. 11 அடுக்குள்ள கிழக்குக் கோபுரமானது இராச கோபுரம் என்றழைக்கப்படுகிறது.


9. தக்சிணேசுவர் காளி கோயில் - கொல்கத்தா - மேற்கு வங்காளம்

காளி கோயில், தக்சிணேஸ்வர் ) இந்தியாவின், மேற்கு வங்க மாநிலத்தின் தலை நகரான கொல்கத்தாவின் தக்சிணேஸ்வர் என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில் ஆகும். ஹூக்ளி ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள இக் கோயிலின் முதன்மைக் கடவுள் காளியின் ஒரு அம்சமான பவதாரிணி.தலைமைக் கோயில் ஒன்பது விமானம் போன்ற அமைப்புகளைக் கொண்டு விளங்குகிறது. இக் கோயிலைச் சுற்றி வெளியிடமும், அதனைச் சூழவுள்ள மதிலின் உட்புறத்தில் அறைகளும் அமைந்துள்ளன. ஆற்றங்கரையில் சிவனுக்குப் பன்னிரண்டு சிறு கோவில்கள் அமைந்துள்ளன. கடைசிச் சிவன் கோயிலுக்கு அருகே வட மேற்கு மூலையில் அமைந்துள்ள கூடம் ஒன்றிலேயே இராமகிருஷ்ண பரமஹம்சர் தனது வாழ்வின் குறிப்பிடத்தக்க காலப் பகுதியைக் கழித்தார் என்று சொல்லப்படுகிறது.

10.ராஜகோபால சுவாமி கோயில் - மன்னார்குடி - திருவாரூர்

மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்  ஒரு வைணவக் கோயில் ஆகும். இங்கு உறையும் ராசகோபாலசுவாமி கிருஷ்ணரின் ஒரு வடிவமாக அறியப்படுகிறது.இந்தக் கோவில் 23 ஏக்கர் (93,000 மீ 2) பரப்பளவில் பரவியுள்ளது. குருவாயூரைச் சேர்த்து இந்த கோவிலை தட்சிண துவாரகை (தெற்கு துவாரகா) என இந்துக்கள் கூறுகின்றனர்.நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பெரியோர்கள் இங்கு வாழ்ந்தமையால் ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம் என்றும், செண்பக மரங்கள் அடர்ந்த காடுகள் நிறைந்து காணப்பட்டதனால் சென்பகாரண்யா க்ஷேத்திரம் எனவும், குலோத்துங்க சோழன் இக்கோயிலை அமைத்தபடியால் குலோத்துங்க சோழ விண்ணகரம் என்றும், ஸ்ரீ ராஜகோபாலன் கோயில் கொண்டிருப்பதால் ராஜமன்னார்குடி என்றும், மன்னர்கள் கோபாலனுக்கு கோயில் கட்டியதால் மன்னார்கோயில் என்றும், இவ்வூர் அழைக்கப்படுகிறது.


No comments:

Post a Comment