Sunday, June 30, 2024

திருச்சிராப்பள்ளி மாவட்டச் செய்திகள்

 இன்று(30/06/2024) தேசிய‌ஆசிரியர் சங்க(தமிழ்நாடு) மன்டலக் கூட்டம் திருச்சி திருவானைக்கோவில் இனிதே நடைபெற்றது.  நிகழ்ச்சியில் முதலாவதாக மாவட்ட செயலாளர் திரு ஆறுமுகம் வரவேற்புரை நல்கினார். மாநில இனணச் செயலாளர் திரு ராஜகேபாலன் சந்தா சேகரிப்பு பற்றி விவரித்து கூறினார். மாநில ஊடகச் இணை செயலாளர் திரு ஸ்ரீராம் கடந்த கல்வி ஆண்டில் நடைபெற்ற சங்க நிகழ்வுகள் குறித்து பேசினார். மாநில இனணச் செயலாளர் திரு ராகவன் சங்கத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை பற்றி வழிகாட்டினார். திருச்சி மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி மல்லிகா உட்பட பல ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாநில துணைத் தலைவர் திரு ப. விஜய் அவர்கள் குரு வந்தனம் நிகழ்வைப் பற்றியும். அலுவலக நடைமுறை பற்றியும் பசுமை தமிழகம் திட்டம் பற்றியும் எடுத்துரைத்தார். நிறைவாக  மாவட்ட பொருளாளர் திரு சோமசுந்திரம் அவர்கள் நன்றி உறை வழங்கினார். பணி நிறைவு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் திரு விஜேந்திரன் , பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் திரு முரளி மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.








கள்ளக்குறிச்சி மாவட்டச் செய்திகள்

 19.06.2024 அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட துணைத்தலைவர் திரு வினோத் அவர்களுக்கு மகன் பிறந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு அவர்கள் இல்லத்தில் மாவட்ட செயற்குழு நடைபெற்றது .


இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாநில இணைச் செயலாளர் திரு.கதிர்வேல் , மாவட்டத் தலைவர் திரு. ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் திரு. தர்மலிங்கம், மாவட்ட பொருளாளர் திரு கோவிந்தன், மாவட்ட சேவை பிரிவு செயலாளர் திரு சதீஷ்குமார், மாவட்ட துணை தலைவர் திரு வினோத் மற்றும் திருமதி சங்கீதா உள்ளிட்டோர் இன்றைய மாவட்டச் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


மாவட்டச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :


*1. கள்ளக்குறிச்சி மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் திரு. கோவிந்தன் அவர்கள் மாவட்ட பொருளாளராக ஒரு மனதாக நியமிக்கப்பட்டார்*


2. நீதியரசர் திரு சந்துரு அவர்களின் குழுவின் அறிக்கையில் ஒரு தலைப்பட்சமாக ஹிந்து மத அடையாளங்களை மட்டும் அழிக்கும் விதத்தில் உள்ள அனைத்தையும் கைவிட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

3. அந்தக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஜீரோ கவுன்சிலிங் என்பது ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த மன உளைச்சலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் உள்ள வகையில் உள்ளதால் இதையும் கைவிட வேண்டும்.

4. மேலும் திரு சந்துரு அவர்களுக்கு குழுவின் அறிக்கையில் தொடக்கக் கல்வி ஆசிரியர்களை பழைய முறையில் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் விட வேண்டும் என்பதையும் கைவிட வேண்டும்


மேலே உள்ள பல விஷயங்கள் ஆசிரியர்களின் நலனுக்கு எதிராக உள்ளதால் நீதியரசர் திரு. சந்துரு அவர்களின் குழு அறிக்கையை தமிழக அரசு முழுமையாக நிராகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்


தேசிய ஆசிரியர் சங்கம் 

தமிழ்நாடு 

கள்ளக்குறிச்சி மாவட்டம்





Saturday, June 29, 2024

FLASH : பள்ளிக் கல்விப் பணி - இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பணியிட மாறுதல் - ஆணை வெளியீடு !!!

 


NHIS திட்டத்தில் அரசு ஊழியர்களைச் சார்ந்துள்ள தாய், தந்தையரை பயனாளிகளாக சேர்க்க உரிய முறையில் ஆய்வு செய்யப்படும் - NHIS திட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை களைந்திட தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தி நெறிமுறைகள் வழங்க முதலமைச்சர் உத்தரவு!!! (பக்கம் 9&10)!!!

 Download 

பணி நிறைவு பெறும் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பதில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் விவரங்கள் !!!

 


அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நிரவல் தொடர்பாக 28/6/2024 அன்று வெளியிடப்பட்டுள்ள புதிய அரசாணை !!!


அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் மாவட்டத்திற்கு உள்ளேயும் அதன் பின்னரும் உபரி ஆசிரியர் இருந்தால் மாவட்டத்திற்கு வெளியேயும் பணி மாறுதல் செய்ய தமிழக அரசு உத்தரவு.

Download 

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 13 !!!

அருள்மிகு காளமேகப் பெருமாள் கோயில் ,திருமோகூர் , மதுரை


திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். மதுரைக்கு வடக்கே 12 கி.மீ. தொலைவில் யா.ஒத்தக்கடை அருகே, திருமோகூர் ஊராட்சியில் அமைந்துள்ளது.
இக்கோயிலிலுள்ள பல மண்டபங்கள் சிவகங்கையை ஆட்சிபுரிந்த மருது பாண்டியர் திருப்பணியாகும். மூலவர் காளமேகப் பெருமாளின் சந்நிதி உயரமான அதிட்டானத்தின்மீது அமைக்கப்பட்டுள்ள கட்டுமான கற்கோவிலாகும். தாயார் மோகனவல்லி எனப்படுகிறார்.

இக்கோவிலின் கம்பத்தடி மண்டபத்திலுள்ள இராமர், சீதை, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர், மன்மதன், ரதி ஆகியோரின் உருவங்களைக் கொண்ட ஒற்றைக் கல்லினாலான சிற்பங்கள் சிறந்த கலைச் செல்வங்களாகும். யாளிகளின் உருவங்களைத் தாங்கிய தூண்கள் அரிய சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது. இம்மண்டபத்தில், சந்நிதியை நோக்கியவாறு, மருது பாண்டியர் ஆளுயரக் கற்றூண் உருவங்கள் காணப்படுகின்றன.
நம்மாழ்வார் இவ்வூர் கோயில் மீது 10 பாசுரங்கள் பாடியுள்ளார்.

தாள தாமரைத் தடமணி வயல் திருமோகூர்
நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்ற சுரனைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய்,
காள மேகத்தை அன்றி மற்று ஒன்று இலம் கதியே

இக்கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார் மிகவும் பிரசித்தி பெற்றவர்.





Friday, June 28, 2024

SMC - மறுகட்டமைப்பு நடைமுறைகளை மேற்கொள்ளுதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அனுமதி அளித்தல் - ஆணை வெளியீடு!!!

 பள்ளி மேலாண்மைக் குழு 2024-2026 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு 2024 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைமுறைகளை மேற்கொள்ளுதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது .

GO [MS] 144 DT 28-06-2024 SMC

Download here

TNOU Part time ல் MPhil படித்தவருக்கு ஊக்க ஊத்தியம்உண்டு என்பதற்கான G.O !!!

 Download 

Monday, June 24, 2024

SSC CGL 2024 Notification Released for 17727 Vacancies !!!

 Download 



உள்ளாட்சித் தேர்தல் பணியின் போது இறப்பு / காயம் ஏற்படும் தேர்தல் பணியாளர்களின் (Polling Personnel) வாரிசுகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி அரசாணை வெளியீடு!!!

 Download 

பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை அறிவிப்புகள் ஜூன் 2024

 Download 


 இன்றைய சட்டசபையில் கல்வி மானிய கோரிக்கையில்  புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

அவற்றில் சில...

1. அரசு பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை ரூ.58 கோடி மதிப்பில் தரம் உயர்த்துதல்.

2. சாரண சாரணியர் இயக்க வைர விழா, கலைஞர் நூற்றாண்டு வைர விழா ஜாம்போரி ரூ.10 கோடியில் நடத்தப்படும்.

3. காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வி, ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

4. ரூ.2 கோடியில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சிகள் அளிக்கப்படும்.

5. 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு திறன் கற்றுக் கொடுக்கப்படும்.

6. அரசு உதவி பெறும் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.42 கோடி செலவில் அமைக்கப்படும்.

7. எந்திரனியல் (ROBOTICS)ஆய்வகங்கள் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்ற அளவில் 38 பள்ளிகளில் ரூ.15.43 கோடியில் உருவாக்கப்படும்.

8. பல்வகை திறன் பூங்கா, ஒரு மாவட்டத்திற்கு ஒரு பல்வகை திறன் பூங்கா என ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

9. ஒன்பது முதல் 12-ம் வகுப்பு மாணவிகள் எந்தவித இடர்பாடும் இன்றி பள்ளிக்கு வர அகல் விளக்கு திட்டம் அமல்ப்படுத்தப்படும்.

10. 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் தொடக்கப் பள்ளிகளுக்கும் கலைத் திருவிழா விரிவாக்கம் செய்யப்படும்.

11. உயர்கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவர்கள் கல்விச்செலவை ஏற்றல் – ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

12. தமிழ்நாடு தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.

13. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், தகை சால் நிறுவனமாக தரம் உயர்த்தப்படும்.

14. ரூ.3.15 கோடி செலவில் ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பயிற்சி அளிக்கப்படும்.

15. இரண்டாம் கட்டமாக இவ்வாண்டு 1000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி வழங்கப்படும்.

16. உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருளை மாணவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க நன்னெறி செயல்பாடு செயல்படுத்தப்படும்.

17. தூத்துக்குடியில் மாவட்ட மைய நூலகத்திற்கு ரூ.6 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்படும்.

18. பார்வைத் திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கான கணினி எழுத்துணறி மென்பொருள் உருவாக்கப்படும்.

19. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறார் அறிவியல் பூங்கா ரூ.80.24 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்படும்.

20. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் நூலகங்களுக்கான புதிய சேவைகள், ரூ.5 லட்சம் மதிப்பில் அறிமுகப்படுத்தப்படும்.

21. வீடு தோறும் நூலகம் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து ஊக்குவிக்க விருது தரப்படும்.

22. திசை தோறும் திராவிடம் திட்ட விரிவாக்கம். பிற இந்திய மொழிகள், வெளிநாட்டு மொழிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

23. மிளிரும் தமிழ்நாடு என்ற பெயரில் புகைப்பட ஓவிய நூல்கள் 50 லட்சம் மதிப்பீட்டில் பரிசு பதிப்புகளாக வெளியிடப்படும்.

24. பட்டய கணக்காளர் ( CA) தேர்வு நூல்கள், 30 லட்சம் மதிப்பில் வெளியிடப்படும்

25. இணையவழியில் பாடநூல் கழக நூல்களின் விற்பனையை தேசிய, சர்வதேச அளவில் ரூ.20 லட்சம் மதிப்பில் விரிவுபடுத்துதல்.

School Education Policy Note 2024-25

 பள்ளிக் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2024-2025

 மானியக் கோரிக்கை எண் 43

 

School Education Policy Note -Tamil-Date 24.06.2024

Download here

Saturday, June 22, 2024

ஜூலை 15ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாள் - பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்!!!

 ஜூலை 15ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் சார்ந்து பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்!

ஜூலை -15 கல்வி வளர்ச்சி நாள் Proceedings - Download here

DEE - தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு !!!

 Download 

Revised Teacher Transfer Counseling Dates !!!

 Download 

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 12 !!!

 அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் கோவில், திருக்கண்ணமங்கை , திருவாரூர் மாவட்டம் 

மகாலட்சுமி தவம் செய்து பக்தவத்சலப் பெருமாளைக் கைப்பிடித்த தலம் என்பதால் இவ்விடம் லட்சுமி வனம் என்றும் அழைக்கப்படுகிறது. சாபத்தால் துன்புற்ற சந்திரன் இங்கமைந்த புஷ்கரணியில் நீராடி சாபவிமோசனம் பெற்றான் என்பது தொன்நம்பிக்கை.

திருமணக் கோலம் தினசரி காண முனிவர்கள் தேனீ வடிவில் உள்ளனர்.
இக்கோவில் திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்திலுள்ள திருக்கண்ணமங்கை ஊரில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து சுமார் 25 மைல் தொலைவிலும், திருச்சேரையிலிருந்து சுமார் 15 மைல் தொலைவிலும் திருவாரூர் நகரிலிருந்து  சுமார் 4 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.
பரந்த வளாகத்தில் அமைந்துள்ள இக்கோவில், 5 அடுக்கு இராஜகோபுரம் கொண்டுள்ளது. ராஜ கோபுரத்தை அடுத்து பலிபீடம், கொடி மரம் ஆகியவை உள்ளன. திருச்சுற்றில் ஆழ்வார்கள் சன்னதி, அபிசேகவல்லித் தாயார் சன்னதி, வசந்த மண்டபம், ஆண்டாள் சன்னதி, ஹயக்ரீவப்பெருமாள் சன்னதி, மணவாளமாமுனிகள் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. மூலவர் சன்னதிக்கு முன் பட்சிராசன் சன்னதி உள்ளது. சாலையின் எதிர்ப்புறம் கோயிலுக்கு எதிரே அனுமார் சன்னதி உள்ளது.

மூலவர்
பக்தவத்சலப் பெருமாள். இவர் பக்தராவிப் பெருமாள் என்றும் அறியப்படுகிறார். பெருமாள் இங்கு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார்.

தாயார்
அபிஷேகவல்லித் தாயார்.

விமானம்
உட்பல விமானம்.

தல விருட்சம்
மகிழம்

தீர்த்தங்கள்
தர்சண புஷ்கரணி தீர்த்தம்

திருவிழா
ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெறும் சித்ரா பௌர்ணமித் திருவிழா, இத்தலத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாவாகும்.

திருமங்கையாழ்வார் தனது 14 பாசுரங்களில் இத்தலத்தினை, பாடியுள்ளனர்.

இக்கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று. சோழ நாட்டு பதினாறாவது திருத்தலம்.மேலும் இது பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும். 12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை நாலாயிர திவ்யப் பிரபந்தமாகத் தொகுத்தளித்த நாதமுனிகளின் மாணவர் திருக்கண்ண மங்கை ஆண்டான், பெருமாளை வழிப்பட்டு வாழ்ந்த தலம் என்பதால் இவ்வூர் அவரது பெயரால் வழங்கப்படுகிறது.





Thursday, June 20, 2024

சர்வதேச யோகா தினம் - 21/06/2024

 ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி, யோகா பயிற்சியின் பல நன்மைகளை ஊக்குவிக்க உலக மக்களால் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

நமது நல்வாழ்வுக்காக யோகா வழங்கும் முழுமையான நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கம். இது நமது வேகமான வாழ்க்கையில் சமநிலையைக் கண்டறிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது மற்றும் நமது உடல், மன மற்றும் ஆன்மீக அம்சங்களில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கிறது. நினைவாற்றலை வளர்க்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் உயிர்ச்சக்தியையும் மேம்படுத்த யோகா உதவுகிறது.

சர்வதேச யோகா தினத்தின் 2024 இன் அதிகாரப்பூர்வ தீம் "பெண்கள் அதிகாரமளிப்பதற்கான யோகா" ஆகும் .

பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கும், அவர்களின் உடல், மன, உணர்ச்சி, சமூக மற்றும் ஆன்மீகத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் யோகா ஒரு விரிவான கருவியாக செயல்படுகிறது. அதிகாரம் பெற்ற பெண்கள், தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாற்றத்திற்கான வக்கீல்கள், உள்ளடக்கம், பன்முகத்தன்மை மற்றும் சமூகம் முழுவதும் அதிகாரமளித்தல் போன்ற முக்கிய பாத்திரங்களை வகிக்கிறார்கள்

யோகா, இந்தியாவில் தோன்றிய ஒரு பண்டைய நடைமுறை, உடல், மன மற்றும் ஆன்மீக கூறுகளை உள்ளடக்கியது. "யோகா" என்ற சொல் சமஸ்கிருதத்திலிருந்து வந்தது மற்றும் உடல் மற்றும் நனவின் ஒன்றிணைப்பைக் குறிக்கிறது, அவற்றின் இணக்கமான தொடர்பைக் குறிக்கிறது.

இன்றைய உலகில், யோகா பல்வேறு வடிவங்களில் நடைமுறையில் உள்ளது மற்றும் பரவலான புகழ் பெற்றுள்ளது.

 2014 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தனது உரையின் போது யோகாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட சர்வதேச தினத்தின் யோசனையை முன்மொழிந்தார். யோகாவை "இந்தியாவின் பண்டைய பாரம்பரியத்தின் விலைமதிப்பற்ற பரிசு" என்று விவரித்த அவர் , "ஆரோக்கியமான கிரகத்தை உருவாக்க பங்களிக்க முடியும்" என்றும் கூறினார் . யோகா என்பது உடல் பயிற்சி மட்டுமல்ல, தன்னோடும், உலகத்தோடும், இயற்கையோடும் ஒற்றுமை உணர்வைக் கண்டறிவதற்கான ஒரு வழியாகும் என்று அவர் வலியுறுத்தினார். இதை பல நாடுகளும் ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஐ சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்க ஐ நா சபை அங்கீகாரம் வழங்கியது.

சர்வதேச யோகா தினத்தின் நோக்கம் :

  • சர்வதேச யோகா தினம் யோகா பயிற்சியின் பல நன்மைகள் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் ஆரோக்கியமான தேர்வுகள் மற்றும் நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வாழ்க்கை முறைகளை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை தீர்மானமாக ஒப்புக்கொள்கிறது.
  • இதற்கு இணங்க, உலக சுகாதார அமைப்பு, உறுப்பு நாடுகள் தங்கள் குடிமக்களை உடல் செயலற்ற தன்மையைக் குறைக்க ஊக்குவிக்க வேண்டும், இது உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணமாகும் மற்றும் இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற தொற்றாத நோய்களுக்கான முக்கிய ஆபத்து காரணியாகும். 


TNPSC GROUP 2 NOTIFICATION