Wednesday, February 4, 2026
Tuesday, February 3, 2026
மதுரை மாவட்ட செய்திகள்!!!
இன்று 3.2.2026 (செவ்வாய் ) தேசிய ஆசிரியர் சங்கம் மதுரை மாவட்டம் சார்பாக ஜெய்ஹிந்த் புரத்தில் அமைந்துள்ள குருகுலம் உயர்நிலைப் பள்ளியில் கடமை உணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டது.சரியாக மாலை 4:30 மணிக்கு தமிழ் தாய் வாழ்த்து சரஸ்வதி வந்தனத்துடன் கூட்டம் துவங்கியது.பள்ளியின் தாளாளர். மதிப்பிற்குரிய திரு.லட்சுமி காந்தன் மாநில துணை தலைவர் திரு.விஜய் மாவட்ட தலைவர் திரு .பரமசிவம் மாவட்ட செயலாளர் திரு .கணேசன் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள்.நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த மாநிலத் துணைத் தலைவர் மற்றும் பள்ளியில் தாளாளர் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் இரு பால் ஆசிரியர்கள் மாணவர்களை மாவட்ட தலைவர் திரு .பரமசிவம் வரவேற்றார்.பள்ளியின் சார்பாக மாநில துணைத்தலைவர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.தேசிய ஆசிரியர் சங்கம் மதுரை மாவட்டத்தின் சார்பாக பள்ளியின் தாளாளர் மற்றும் மாவட்ட துணை தலைவர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.பின்பு வாழ்த்துரை வழங்கிய பள்ளியின் தாளாளர் கடமை உணர்வ தினத்தில் முக்கியத்துவத்தையும் தேசிய ஆசிரியர் சங்கத்தின் பணிகளையும் பாராட்டி மாணவர்களுக்கு கடமை உணர்வு தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தினார்.சிறப்புரையாற்றிய 🎤🎤🎤🎤🎤🎤🎤மாவட்ட தலைவர் திரு பரமசிவம் மாணவர் ஆசிரியர்கள்,பெற்றோர் மற்றும் சமூக பொது மனிதனின் கடமைகளை மாணவர்களுக்கு எளிமையாக எடுத்து கூறினார்.தலைமை உரையாற்றிய 🎤🎤🎤🎤🎤🎤🎤🎤மாநில துணை தலைவர் திரு விஜய் அவர்கள் மாணவர்களுக்கு ஐந்து முக்கிய கடமைகளை நினைவூட்டி அதை எவ்வாறு கடைப்பிடித்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய இலக்கை அடையலாம் என்பதை எளிமையாக எடுத்துக் கூறினார்.பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது.பள்ளிக்கு தேசிய சங்கம் சார்பாக நினைவு பரிசும்📕📒📗📕📗📕📗📕📗 புத்தகங்களும் வழங்கப்பட்டது.நிகழ்ச்சி நிறைவாக மாவட்ட பொருளாளர் திரு ஆறுமுக கடவுள் அவர்கள் நன்றியுடைய ஆற்றினார்.நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட செயலாளர் திரு கணேசன் மிகச் சிறப்பான 🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯முறையில் செய்து நிகழ்ச்சியை திறம்பட நடத்திக் கொடுத்தார்.நிகழ்ச்சியில் சுமார் 200 மாணவ மாணவிகள் மற்றும் 20 ஆசிரியை பெருமக்கள் பங்கேற்றனர்.
Sunday, February 1, 2026
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தவும் ,அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் அடிப்படை கல்வித்தகுதி களில் குறைந்த பட்ச மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்பதிலிருந்து ஆந்திர மாநில அரசைப்போல விலக்கு அளித்து சிறப்ப தகுதித் தேர்வு அறிவிக்கை வெளியிடவும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கடிதம்!!!
TET EXAM AN APPEAL!!!
ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் பொதுப் பிரிவினர்களுக்கு 50 சதவீதமாகவும். மாற்றுத்திறன் பிரிவினர்களுக்கு 40 சதவீதமாகவும் குறைத்து அரசாணை வெளியிடவும் திருத்திய தேர்ச்சி பட்டியல் வெளியிடவும் வேண்டி மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கடிதம்!!!
CLICK HERE TO DOWNLOAD
Saturday, January 31, 2026
TNTET RESULT JAN 2026
ஆசிரியர் தகுதித் தேர்வு
தேர்வு முடிவுகள் வெளியீடு.
✍️✍️✍️✍️✍️✍️✍️
👉TNTET 2025 : ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.
🌹👉TET paper 1
👉தேர்வு எழுதியோர் =91072
👉தேர்ச்சி பெற்றோர் =44770(49.16%)
👉தேர்ச்சி பெறாதோர் =46032(50.84%)
🌹👉TET paper 2 -
👉Social Science
👉தேர்வு எழுதியோர் =142861
👉தேர்ச்சி பெற்றோர் =32554 ( 22.8 %)
👉தேர்ச்சி பெறாதோர் =110307 ( 77.2 % )
🌹👉TET paper II -
👉கணக்கு மற்றும் அறிவியல்
👉தேர்வு எழுதியோர் =186878
👉தேர்ச்சி பெற்றோர் =71608 ( 38.3 %)
👉தேர்ச்சி பெறாதோர் =115270( 61.7 % )
Friday, January 30, 2026
Thursday, January 29, 2026
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்!!!
தேசிய ஆசிரியர் சங்கம் (தமிழ்நாடு) திருவள்ளூர் மாவட்டம் சார்பாக இன்று (29.01.2026) மாலை கடமை உணர்வு தினம் திருவள்ளூர் DRBCCC இந்து மேல்நிலைப் பள்ளியில் சீரும் சிறப்பாக நடைப்பெற்றது.
விழாவில் மாவட்ட தலைவர் திரு. வெ.பரமசிவம் அவர்கள் வரவேற்பு நல்கினார்.
நமது சங்கத்தின் மாநில தலைவர் திரு. ம.கோ. திரிலோக சந்திரன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்.
அப்பொழுது நமது சங்கத்தின் செயல்பாடுகளை எடுத்துரைத்தார்.
மாவட்ட செயலாளர் திரு. கா . கிருஷ்ணகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார். அதன் பின்பு விடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் முதுகலை வரலாறு ஆசிரியர் அவர்கள் கடமை உணர்வு தின சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில்
DRBCCC இந்து மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.G.V. ராம்மோகன் மற்றும் கொமக்கம்பேடு அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் M. பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
வாழும் கலை திருவள்ளூர் குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் ஆனந்த அனுபவ பயிற்சிப் பற்றி திரு. S.S. சீனிவாசன் மற்றும் திரு. S. அனல் சேகர் அவர்கள் விளக்கி அதன் தொடர்ச்சியாகஆசிரியர்களுக்கு எளிமையான பயிற்சிகள் செய்வதற்கு சொல்லித் தரப்பட்டது.
இறுதியாக மாவட்ட பொருளாளர் திரு. மே.சு. பார்த்தீபன் அவர்கள் நன்றியுரை கூறினார்.
இந்நிகழ்வை மாநில இணை செயலாளர் திரு.தி. நீலமேகன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்விற்கு சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட, கோட்ட, வட்ட பொறுப்பாளர்கள் மற்றும் 50 ஆசிரியர்களுக்கு மேல் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு!!!
ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு சென்னை உயர் நீதிமன்றம் WP No : 2083/2026
தீர்ப்பு நாள் : 22.01.2026
ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று அரசு தீர்ப்பில் உறுதி அளித்துள்ளது.
Court Order - Download here
Wednesday, January 28, 2026
TN TET MARKS REDUCTION GO!!!
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்ணை இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மட்டும் 5% குறைத்து (பொதுப் பிரிவினருக்கு மாற்றமில்லை) அரசாணை வெளியீடு!!!
DOWNLOAD
Tuesday, January 27, 2026
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற தேசிய ஆசிரியர் சங்க அமைப்பின் கடமை உணர்வு தின விழா 26.01.2026!!!
திண்டுக்கல் மாவட்டம் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் பழனி நேஷனல் ஹிந்தி வித்யாலயாவில் கடமை உணர்வு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாள் : 26.01.2026
மாலை 5.00 -8.00.
நிகழ்ச்சியில் முக்கியக் கருத்தாளராக சிறப்பு அழைப்பாளர் திரு. இராதாகிருஷ்ணன் ஜீ.,இதிகாச சங்கலன சமிதி. மாநில செயலாளர் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தேசத் தலைவர்கள்,இராமாயன கருத்துகள், பஞ்சபரிவர்த்தன் குறித்து கருத்துகளை எடுத்துரைத்தார். 15 ஆசிரியப் பெருமக்கள், பெற்றோர்,45 மாணவர்கள் கலந்து கொண்டனர்.மாணவிகள் கணேஷினி, கைலாஷினி கடவுள் வாழ்த்து பாடினர். தேசிய ஆசிரியர் சங்கத்தின் பழனி கல்வி மாவட்ட பணிநிறைவு அணித் தலைவர் திருமதி. ஜான்சிராணி அம்மா தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் விஜய் வாழ்த்துரை வழங்க மாநில மகளிர் அணிச் செயலாளர் திருமதி. சாருமதிதேவி சங்கத்தின் செயல்பாடுகளை எடுத்துரைத்தார். திருமதி. மல்லிகா அவர்கள் வரவேற்புரை வழங்க திரு.ரமேஷ்கண்ணன் நூலகர் நன்றியுரை வழங்கினார். மாணவச் செல்வங்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பாரதமாதா மற்றும் தேசத் தலைவர்கள் வேடமிட்டிருந்த குழந்தைகளை வாழ்த்தி சங்க ஆசிரியப் பெருமக்கள் வரவேற்று அழைத்துச் சென்று ஆசனத்தில் அமர்த்தி சிறப்பு செய்தனர். பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டி நினைவுப் பரிசு வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. பணி நிறைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் "வந்தே மாதரம்" புத்தகம் வழங்கி பாடலின் சிறப்பு குறித்து விளக்கப்பட்டது. சில மாணவர்களது மனதில் தான் எதிர்காலத்தில் ஆசிரியப் பணியை மேற்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தனர். நிகழ்ச்சி நல்ல ஆக்கத்தையும் ஊக்கத்தையும் வழங்குவதாக அமைந்தது.





















































