Monday, August 12, 2024

திருப்பூர் மாவட்ட செய்திகள்!!!

 நம் மாவட்டத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுள்ள, திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உயர்திரு  உதயகுமார். ஐயா அவர்களை இன்று திங்கள் கிழமை (12.8.2024) மாலை நம் தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில் வாழ்த்தி வரவேற்ற நிகழ்வு !!!




Sunday, August 11, 2024

Disciplinary Proceedings Timeline!!!

 Download 

RTI ABOUT M.Phil !!!

 


திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்!!!

 இன்று 11.08.2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரம் ஸ்ரீ அமிர்தா மேல்நிலைப் பள்ளியில் தேசிய ஆசிரியர் சங்கத்தின் *குரு வணக்கம் நிகழ்ச்சி*  *பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா*  *பசுமை தமிழகம் திட்டம் தொடக்க விழா* என முப்பெரும் விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது ஏறத்தாழ 100 சங்க உறுப்பினர்கள் இதில் பங்கேற்று சிறப்பித்தனர். வித்யா பாரதி சேவா பாரதி தேசிய ஆசிரியர் சங்கம் ஆகிய அமைப்புகளில் இருந்து மாநில பிரதிநிதிகள் பங்கேற்று சிறப்பித்தனர். மாநிலத் துணைத் தலைவர் திரு முருகன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் *பகவத் கீதை* பரிசாக வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.ஸ்ரீ அமிர்தா கல்வியியல் கல்லூரியின் தாளாளர் மற்றும் வித்யா பாரதி அமைப்பின் மாநில நிர்வாகி டாக்டர் மாதவ பாரதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் அவருக்கு அமைப்பின் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. புதுப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் துணை முதல்வர் திரு மோகன் அவர்கள் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய புதுமையான கற்றல் முறைகள் குறித்து விளக்கமாக பேசினார்.

சேவா பாரதி அமைப்பின் வட தமிழக அமைப்பாளர் மானனிய சீனிவாசன் ஜி அவர்கள் ஆசிரியர் பெருமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார் மதியம் அறுசுவை விருந்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.










Friday, August 9, 2024

 Download 



இன்று (09.08.2024) மரியாதைக்குரிய மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் துறை ஆணையர் திரு. சம்பத் இ ஆ பா அவர்களை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து நமது தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் வழங்கினோம். அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார் .

 Download 


HM PROMOTION CASE - உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு அனைத்து வழக்குகளும் ஒரே வழக்காக வரும் திங்கட்கிழமை 12/08/2024 விசாரணைக்கு வருகிறது !!!

 


Saturday, August 3, 2024

திண்டுக்கல் மாவட்ட செய்திகள்!!!

 இன்று தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு அமைப்பின்  திண்டுக்கல் மாவட்டம் சார்பாக குரு வணக்கம் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில். நிகழ்வு மாவட்டத் தலைவர் திருமதி வைரமணி அவர்கள் வரவேற்புரை நல்கினார். மதுரை மாவட்ட தலைவர் திரு. பரமசிவம் அவர்கள் மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி. சாருமதி தேவி .மாநிலத் துணைத் தலைவர் திரு.பா. விஜய் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தலைமை உரையை வாசவி பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் திரு. ராமகிருஷ்ணன் வழங்கினார்.நிகழ்ச்சியில்  ஒட்டன்சத்திரம் ஆசிரியர் பயிற்சி  நிறுவனத்தின் முன்னாள்முதல்வர் திரு.மோகன்ராம் அவர்கள் சிறப்புரை வழங்கினார். மாவட்ட பொருளாளர் திரு. மணிகண்டன் நன்றியுரை  வழங்கினார். நிகழ்ச்சியை மாவட்டச் செயலாளர் திரு ஆறுமுகம் மற்றும் மாவட்ட ஊடக செயலாளர் திரு அழகேஷ்குமார் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இந்நிகழ்வில் நமது தேசிய ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளர்களாய் இருந்து தற்சமயம் ஓய்வு பெற்றுள்ள ஆசிரியர்களான திரு. ராஜபாண்டியன் .திருமதி. தேவி ஜான்சிராணி .திரு. சேரன் செங்குட்டுவன் மற்றும் முன்னாள் முதல்வர் திரு. மோகன்ராம் ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டன. மற்றும் பசுமைத் தமிழகம்திட்டம் துவங்கப்பட்டது.












திருவள்ளூர் மாவட்ட செய்திகள் !!!

 தேசிய ஆசிரியர் சங்கம்- தமிழ்நாடு

திருவள்ளூர் மாவட்டம்

 முப்பெரும் விழா

 குரு வணக்கம், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, பசுமைத் தமிழகம் தொடக்க விழா

 இன்று( 03:08:2024 ) காலை, DRBCCC இந்து மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூரில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தேசிய ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் திரு. ம.கோ.திரிலோகசந்திரன் தலைமை வகித்தார்.

மாவட்டத் தலைவர் திரு வெ. கதிரொளி வரவேற்புரை நிகழ்த்தினார்.

குருவின் பெருமையைப் பற்றி  அரசு மேல்நிலைப்பள்ளி (ஆண்கள்)

இரா.கி.பேட்டை , தலைமை ஆசிரியர் திரு.கோ.சுந்தர் அவர்கள் மிக அழகாக எடுத்துரைத்தார். 


சிறப்பு அழைப்பாளர்களாக DRBCCC இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. கி.வெ. ராமமோகன் அவர்களும், கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு சே.ஆ. தாமோதரன் அவர்களும் கலந்து கொண்டனர்.


பணி ஓய்வு பெற்ற சென்னீர்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. நா. பூபாலமுருகன் அவர்களும், திருவள்ளூர் டிஆர்பிசிசி இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. இரா. கலைச்செல்வன் அவர்களும், செஞ்சி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. வி.குணசேகரன் அவர்களும், பேரம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் திரு. சி. பழனி அவர்களும், திருவள்ளூர் ஆர். எம். ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திரு. இரா.இரவிச்சந்திரன் அவர்களும் விழாவில் சிறப்பிக்கப்பட்டனர்.


மாவட்ட செயலாளர் திரு. தி.நீலநேகன் நிகழ்வினை ஒருங்கிணைப்பு செய்ய,

மாநில தலைமையிடத்து செயலாளர் திரு.ச.வினோத்குமார் முன்னிலை வகித்தார்.


கோட்டச் செயலாளர் திரு.ம. சதீஷ் குமார் அவர்கள் நன்றி கூறினார்.

 விழாவிற்கான ஏற்பாடுகளை பொருளாளர் திரு.மே.சு.பார்த்தீபன் மற்றும் பொறுப்பாளர்கள் திரு.கிருஷ்ணகுமார், திரு.பரமசிவம், திரு.நவீன்குமார் ஆகியோர்  செய்தனர்.










Friday, August 2, 2024

தொழில் வரியை ₹1250/- ஐ விட அதிகரிக்க முடியுமா ??? Paper News

 


HI Tech Lab Assessment Cycle 2

 மதிப்பீட்டு புலம்

Hi -Tech lab Assessment - Quiz - Cycle 02 மேற்கண்ட circular-இல் குறிப்பிட்டுள்ளபடி *August 06 முதல் August 16* வரை 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படவேண்டும். 

முக்கிய குறிப்புகள்:

1. Hi -Tech lab Assessment - Quiz நடைபெறும் தேதியை மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தி அவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும்.

2. *6 முதல் 10 ஆம் வகுப்பு வரை ஒரு பாடத்திற்கு 4 கேள்விகள் வீதம் 5 பாடத்திற்கு 20 கேள்விகளை தேர்வு செய்ய வேண்டும். 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு  4 கேள்விகள் வீதம் 6 பாடத்திற்கு 24* *கேள்விகளை தேர்வு செய்ய வேண்டும்* . 

3. July-இல் நடைபெற்ற Hi -Tech lab Assessment - Quiz - Cycle 01 ஐ 80% பள்ளிகள் முழுமையாக நடத்தி முடித்தனர். 80% (18,85,104) மாணவர்கள் Assessment - Quiz இல் பங்கேற்றுள்ளனர். 

4. Hi -Tech lab Assessment - Quiz - Cycle 02 -விற்கான Event ID உருவாக்கப்பட்டுள்ளது. இந்த Event ID ஐ பயன்படுத்தி Question Paper Allocation நிகழ்வை Assessment நடைபெறும் நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ஆசிரியர்கள் மேற்கொள்ளவேண்டும்.



Thursday, August 1, 2024

SMC - பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு மற்றும் செலவினம் பற்றிய மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் !!!

 Download 



தர்மபுரி மாவட்ட செய்திகள்!!!

 நேற்று 31/7/24 தர்மபுரியில் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு தர்மபுரி மாவட்டம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழா குரு வணக்கம் ,சமூக சேவைக்கான விருது மற்றும் பசுமை தமிழகம்  -விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஶ்ரீ G. லட்சுமணன் ஜி ABRSM அகில பாரத இனை அமைப்பு செயலாளர் அவர்கள் கலந்து கொண்டு குரு வணக்கம் பற்றி உரையாற்றினார் மேலும் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ஶ்ரீ C.முத்துகுமரன் கமலம் இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர்  ஶ்ரீ M.முருகன் விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர் கலந்து கொண்டனர் .தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் D. முருகன் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் மாவட்ட மகளீர்  பொறுப்பாளர் M. அமுதா,M. சுகுணா மாவட்டச் செயலாளர் N.குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் மாவட்டத் துணைத் தலைவர் K. சுரேஷ்  அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்தார் மேலும் G.சத்தியநாராயணன் அவர்கள் நன்றியுரை கூறி நிகழ்ச்சி சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது.