Tuesday, July 9, 2024

Friday, July 5, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 14 !!!

 அருள்மிகு வானமாமலை பெருமாள் கோவில் , நாங்குநேரி , நெல்லை மாவட்டம்

(ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரம்)


திருவரமங்கை என்னும் வானமாமலை என்று அழைக்கப்படும் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். 108 திவ்ய தேசங்களில் சுயம்பு மூர்த்தியாக பெருமாள் உள்ள எட்டு தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
திருவரமங்கை என்னும் இத்தலத்திற்கு வானமாமலை, நாங்குநேரி, தோத்தாத்ரி, திருவரமங்கை நகர் என்ற பல்வேறு பெயர்களும் உண்டு. பிரம்மாண்ட புராணம், ஸ்கந்த புராணம், நரசிம்ம புராணம் போன்றவற்றில் இத்தலம் பேசப்படுகிறது. உரோம முனிவர் தவஞ்செய்து திருமாலைக் கண்டதால் உரோமசேத்திரம் என்றும், ஸ்ரீவரமங்கையாக திருமகள் இவ்விடத்தில் வந்து வளர்ந்து பிறகு எம்பெருமானை மணந்து கொண்டதால் ஸ்ரீவரமங்கை (சீரிவரமங்கல நகர்) எனவும், ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றதால் நாகணை சேரி எனவும், மரங்கள் நிறைந்த வனமும் மலையும் சூழ்ந்த இடமாதலின் வானமாமலை எனவும் இங்குள்ள திருக்குளத்தை நான்கு ஏரிகளாக வெட்டியதால் நான்கு + ஏரி= நான்குநேரி எனவும், அந்த நான்கு ஏரிகளின் கூர்மையான முனைகள் சந்திக்கும் மையப் பகுதியில் அமைந்ததால் நான் + கூர் + நேரி என்பது காலப்போக்கில் நாங்குநேரி என பேச்சு வழக்காயிற்று.
இக்கோயிலில் வானமாமலைப் பெருமாள், திருவரமங்கை தாயார் சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் ஏழு கோபுரங்கள் உள்ளன.
இங்கு இறைவனுக்கு தினந்தோறும் தைலக்காப்பு சாற்றும் நிகழ்வு நடைபெறும். அந்த எண்ணெயை எடுத்து இங்குள்ள நாழிக்கிணற்றில் ஊற்றி வருகின்றனர். இந்த நாழிக்கிணற்றில் உள்ள எண்ணெயை நம்பிக்கையுடன் உண்டால் நோய் தீரும் என்பது நம்பிக்கை ஆகும்.
ஆழ்வார் திருநகரியை ஆண்ட மன்னரான காரிக்கு குழந்தைப் பேறு இல்லாததால், திருக்குறுங்குடிக்குச் சென்று வேண்டினார். மன்னரின் கனவில் தோன்றிய நம்பிராயர் எப்படிபட்ட குழந்தைவேண்டும் என்று வினவினார். அதற்கு காரி தங்களைப்போன்ற ஒரு ஆண்பிள்ளை வேண்டுமென்றார். அவ்வறே ஆகும் என உரைத்த நம்பிராயர், இங்கிருந்து கிழக்கே சென்றால் நான்கு ஏரிகள் சூழ்ந்த இடத்தில் எறும்புகள் சாரைசாரையாகச் செல்லும். அதற்கு நேர் மேலே கருடன் வட்டமிட்டுக்கொண்டிருப்பான். அந்த இடத்தில் அகழ்ந்தால் வானமாமலை தென்படுவான். அவன் கேட்டதை அருளுவான் என்றார். அதன்படி அந்த இடத்தைக் கண்டறிந்து அங்கே மன்னன் அகழ்ந்தபோது, அங்கே வானமாமலைப் பெருமாள் கிடைத்தார். நாங்குநேரி என்ற அவ்வூரிலேயே அவரை நிலையாட்டி அவருக்கு கோயில்கட்டி அவரை வழிபட்டார். அதன்பிறகு நம்பிராயர் அருளியபடியே காரி மன்னருக்கு மகனாக நம்மாழ்வார் பிறந்தார்.

கோவில் கருவறையில் ஆதிசேடன் குடையாய் இருக்க, வானமாமலைப் பெருமாள் வைகுண்டபதியாக அமர்ந்த திருக்கோலத்தில் இருக்கிறார். அவருக்கு இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி தாயார்கள் காட்சி தருகிறனர். இவர்களுக்கு ஊர்வசியும் திலோத்தமையும் சாமரம் வீசுகின்றனர். பிருகு முனிவர், மார்க்கண்டேய முனிவர், சூரியன், சந்திரன் ஆகியோர் பெருமாளை சேவித்தபடி, கருவறையில் வீற்றிருக்கின்றனர். அர்த்த மண்டபத்தில் கருடாழ்வார், விஷ்வக்சேனர் இருக்கிறார். இந்த 13 விக்கிரகங்களும் சுயம்புகள் என்றும். வைகுண்டத்தில் பெருமாள் எப்படி வீற்றிருப்பாரோ அத்தகைய கோலத்திலேயே சுவாமி இங்கு இருப்பதாக நம்பிக்கை உள்ளது.

மேலும் கோயிலில் ஞானப்பிரான், லட்சுமி நாராயணர், வேணுகோபாலன், தசாவதார மூர்த்திகள், ராமர், கண்ண பிரான், சக்கரத்தாழ்வார் ஆகியோர் தனிச் சன்னிகளில் உள்ளனர். குலசேகர மண்டபத்தில் நம்மாழ்வாரைத் தவிர 11 ஆழ்வார்களும், கருவறைப் பிரகாரத்தில் 32 ரிஷிகள், தும்பிக்கை ஆழ்வார் ஆகியோரும் உள்ளனர். இத்தலத்தில் உள்ள சேற்றுத் தாமரை தீர்த்தமானது திருப்பாற்கடலின் அம்சமாகவும் சாபம் நீக்கக்கூடியதாகவும் கருதப்படுகிறது.

 இத்தலம் நம்மாழ்வாரால் மட்டும் 11 பாக்களில் பாடப்பெற்றது. இத்தலத்தில் மட்டுமே சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.








Thursday, July 4, 2024

பசுமை தமிழகம் - Pilot Project!!!

 தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳 முன்னெடுத்துள்ள ஒரு மாணவன் மற்றும் ஒரு ஆசிரியர் ஒரு மரக்கன்று🌳 வளர்த்தல் என்ற உன்னதமான பணியை-சுவாமி விவேகானந்தர் நினைவை🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳 போற்றும் வகையில் இன்று (04/07/2024) தர்மபுரி மாவட்டம் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஓசஅள்ளிபுதூர் நடுநிலைப்பள்ளியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியும் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டும்  இந்த உன்னதமான பணி💐💐💐💐💐 துவக்கப்பட்டுள்ளது மேலும் மாவட்டத்தில் ஒன்பது பள்ளிகளில் 475 மரக்கன்றுகள் மாணவர்களுக்கு வழங்கி  பராமரிக்கும்படி முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாம் கேட்டுக் கொண்டதின் பேரில் நமது இந்தப் பணிக்கு மரக்கன்றுகள் வழங்கிய தர்மபுரி🎊 மாவட்டம்🌳🌳🌳 இயற்கையை காப்போம் அமைப்பினருக்கும் நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் பணியை💐💐💐 தேசிய ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் முருகன் மற்றும் தர்மபுரி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள்  முன்னெடுத்து செயல்படுத்தி உள்ளனர் .

      இந்த பணியானது மேலும் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற  வேண்டும் எனவும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். 🙏🙏🙏🙏🙏🙏

🙏🙏🙏🙏









Monday, July 1, 2024

An Appeal

 


தேசிய மருத்துவர்கள் தினம் - ஜூலை 1

 In India the National Doctors' Day is celebrated on 1stJuly all across India to honor the legendary physician and the second Chief Minister of West Bengal, Dr. Bidhan Chandra Roy. Dr Roy was honored with the country's highest civilian award, Bharat Ratna on 4thFebruary 1961. The celebration of the Doctors' Day is an attempt to emphasize on the value of doctors in our lives and to offer them our respects by commemorating one of their greatest representatives. India has shown remarkable improvements in the medical field and July 1 pays a perfect tribute to all the doctors who have made relentless efforts towards achieving this goal irrespective of the odds.


தேசிய மருத்துவர்கள் தினம்: ஜூலை 1 - பி.சி.ராய் பிறந்த தினம்


இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி டாக்டர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மாபெரும் மருத்துவ மேதையும், மேற்கு வங்க மாநிலத்தின் 2- வது முதல்வர் என்ற பெருமைக்குரியவருமான மறைந்த டாக்டர் பிதான் சந்திர ராய் (பி.சி. ராய்) பிறந்த தினத்தைத்தான் டாக்டர்கள் தினமாக இந்தியாவில் கொண்டாடுகிறார்கள்.


1882-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பிறந்தார் ராய். 1962-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி தனது 80-வது வயதில் அவர் மறைந்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் படித்த ராய் ஒரே நேரத்தில் மருந்தியல் மற்றும் அறுவை மருத்துவத்திற்கான எம்.ஆர்.சி.பி மற்றும் எஃப்.ஆர்.சி.எஸ் படிப்புகளை இரண்டாண்டுகள் மூன்று மாதங்களிலேயே படித்து முடித்தது ஓர் சாதனையாகும். அவரது அளப்பரிய சேவை கருதி இந்திய அரசு அவருக்கு 1961-ம் ஆண்டு அவருக்கு பாரதரத்னா விருது வழங்கி கவுரவித்தது.




Paper News

 


Sunday, June 30, 2024

திருச்சிராப்பள்ளி மாவட்டச் செய்திகள்

 இன்று(30/06/2024) தேசிய‌ஆசிரியர் சங்க(தமிழ்நாடு) மன்டலக் கூட்டம் திருச்சி திருவானைக்கோவில் இனிதே நடைபெற்றது.  நிகழ்ச்சியில் முதலாவதாக மாவட்ட செயலாளர் திரு ஆறுமுகம் வரவேற்புரை நல்கினார். மாநில இனணச் செயலாளர் திரு ராஜகேபாலன் சந்தா சேகரிப்பு பற்றி விவரித்து கூறினார். மாநில ஊடகச் இணை செயலாளர் திரு ஸ்ரீராம் கடந்த கல்வி ஆண்டில் நடைபெற்ற சங்க நிகழ்வுகள் குறித்து பேசினார். மாநில இனணச் செயலாளர் திரு ராகவன் சங்கத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை பற்றி வழிகாட்டினார். திருச்சி மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி மல்லிகா உட்பட பல ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாநில துணைத் தலைவர் திரு ப. விஜய் அவர்கள் குரு வந்தனம் நிகழ்வைப் பற்றியும். அலுவலக நடைமுறை பற்றியும் பசுமை தமிழகம் திட்டம் பற்றியும் எடுத்துரைத்தார். நிறைவாக  மாவட்ட பொருளாளர் திரு சோமசுந்திரம் அவர்கள் நன்றி உறை வழங்கினார். பணி நிறைவு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் திரு விஜேந்திரன் , பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் திரு முரளி மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.








கள்ளக்குறிச்சி மாவட்டச் செய்திகள்

 19.06.2024 அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட துணைத்தலைவர் திரு வினோத் அவர்களுக்கு மகன் பிறந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு அவர்கள் இல்லத்தில் மாவட்ட செயற்குழு நடைபெற்றது .


இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாநில இணைச் செயலாளர் திரு.கதிர்வேல் , மாவட்டத் தலைவர் திரு. ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் திரு. தர்மலிங்கம், மாவட்ட பொருளாளர் திரு கோவிந்தன், மாவட்ட சேவை பிரிவு செயலாளர் திரு சதீஷ்குமார், மாவட்ட துணை தலைவர் திரு வினோத் மற்றும் திருமதி சங்கீதா உள்ளிட்டோர் இன்றைய மாவட்டச் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


மாவட்டச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :


*1. கள்ளக்குறிச்சி மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் திரு. கோவிந்தன் அவர்கள் மாவட்ட பொருளாளராக ஒரு மனதாக நியமிக்கப்பட்டார்*


2. நீதியரசர் திரு சந்துரு அவர்களின் குழுவின் அறிக்கையில் ஒரு தலைப்பட்சமாக ஹிந்து மத அடையாளங்களை மட்டும் அழிக்கும் விதத்தில் உள்ள அனைத்தையும் கைவிட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

3. அந்தக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஜீரோ கவுன்சிலிங் என்பது ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த மன உளைச்சலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் உள்ள வகையில் உள்ளதால் இதையும் கைவிட வேண்டும்.

4. மேலும் திரு சந்துரு அவர்களுக்கு குழுவின் அறிக்கையில் தொடக்கக் கல்வி ஆசிரியர்களை பழைய முறையில் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் விட வேண்டும் என்பதையும் கைவிட வேண்டும்


மேலே உள்ள பல விஷயங்கள் ஆசிரியர்களின் நலனுக்கு எதிராக உள்ளதால் நீதியரசர் திரு. சந்துரு அவர்களின் குழு அறிக்கையை தமிழக அரசு முழுமையாக நிராகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்


தேசிய ஆசிரியர் சங்கம் 

தமிழ்நாடு 

கள்ளக்குறிச்சி மாவட்டம்