Monday, June 17, 2024

IFHRMS June Instructions

 IFHRMS Websiteல் June 24 month Payroll Run & IT auto calculation தொடர்பான தகவல்கள்...


Dear All,


As instructed by the CTA/eTeam, Following points to be noted for *June month payroll run*.


1. Payroll Run: Karur, Perambalur, Nilgris, Tenkasi, Theni, Krishnagiri, Villupuram and PAO (Madurai) shall follow the *decentralized payroll run*. But all other districts and PAOs/SPAOs will be on *Centralized payroll run* this weekend (Today and Tomorrow).


2. IT auto calculation: There is no auto IT calculation for Pensioners this month. For employees, those who updated PAN and selected old/new regime and gross above 7.5 lacs per annum will get IT auto calculated in the system. For the rest of the employees, Previous month manually added/edited IT will be carried forward this month.


Thanks & Regards.

பணி மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்திடுக - பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளருக்கு தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு கோரிக்கை !!!













வணக்கம். பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்துவரும் வேளையில்,  பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் கற்றல் கற்பித்தல் பணிகள் பெருமளவில் முடங்கி உள்ளன. 

கலந்தாய்வு தேதி இதுவரை அறிவிக்கப்படாததால், வெளி மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்ப்பதில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.  எனவே  நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு  உடன்  நடத்திடவும்,  01.08.   நிலவரப்படி நிர்ணயிக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களை ஏற்கெனவே உள்ள காலிப்பணியிடங்களுடன்  கலந்தாய்வில் காண்பிக்கவேண்டும் என தங்களை கேட்டுக்கொள்கிறோம்

               சென்ற கல்வி ஆண்டில் பணிபுரிந்த SMC தற்காலிக ஆசிரியர்களின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான  ஊதியம்  பல மாவட்டங்களில் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. நிலுவை தொகையினை  உடன் வழங்கவும், மாணவர் நலன் கருதி  SMC தற்காலிக ஆசிரியர்களை பள்ளிகளில் நியமனம் செய்ய உடனடியாக ஆணை பிறப்பிக்க தேசிய ஆசிரியர் சங்கம்- தமிழ்நாடு சார்பில் வேண்டுகிறோம்    

   மாநிலத்தலைவர்                    பொதுச் செயலாளர்

Sunday, June 16, 2024

TET ISSUE: Telungana highcourt ordered the state government to consider promotion for teachers without TET !!!

 Download 




SCERT - Mozhigal - Statewide online Refresher Teacher Training Reg !!!

 2024-2025 - SCERT - Mozhigal - Statewide online Refresher Teacher Training to be held from 18. 06. 2024 to 28. 06. 2024 for all English handling teachers from Class 6-8 in High Schools and Higher Secondary Schools

HITECH LAB - LANGUAGE LAB :

ஆங்கில ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம், 

LL - Period Allotment :

 உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் உள்ள அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 8 ஆம் வகுப்பிற்குரிய கால அட்டவணையில் வெள்ளிக்கிழமை அன்று மொழிகள் ஆய்வகத்திற்கென (Language Lab) ஒரு பாடவேளை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். 

Language Lab :

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் 6 முதல் ஆம் 8 வகுப்பு மாணாக்கர்களை Language lab பாட வேளையில் Hitech lab க்கு அழைத்துச் சென்று Language lab சார்ந்து பயன்பெறச் செய்தல் வேண்டும்.

LL-Posters :
Hitech lab ல் Language lab சார்ந்து Posters (TNTP link-ல் தரப்பட்டுள்ளது) ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். 

LL- Training :
6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர்கள் ( BT English Teachers / பிற BT Trs பயிற்சி மட்டும் ) அனைவரும் Language lab சார்ந்து TNTP App ல் Self Training எடுத்துக் கொள்ள வேண்டும்.

TNTP LINK :



Saturday, June 15, 2024

ABRSM NATIONAL EXECUTIVE MEETING AT AYODHYA !!!

 உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியா நகரில் நடைபெற்ற ABRSM NATIONAL EXECUTIVE MEETING இல் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பாக நமது பாசமிகு மாநில பொதுச் செயலாளர் திரு மு கந்தசாமி  ஐயா அவர்கள் கலந்து கொண்டு நமது ஆசிரியர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து எடுத்துரைத்தார். அனைத்து மாநில நிர்வாகிகளும் ஆர்வமுடன் கேட்டு அறிந்து கொண்டனர்.

தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு அமைப்பின் தாய் சங்கமான ABRSM அமைப்பின் தேசிய செயற்குழு கூட்டம் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியா நகரத்தில் ஜூன் 15 16 17 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது. அந்நிகழ்வில் நம் அமைப்பின் சார்பாக மாநில தலைவர் திரு திரிலோக சந்திரன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் திரு கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்வில் பாரத நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நமது சகோதர ஆசிரியர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு. கல்வி மற்றும் ஆசிரியர் மாணவர் நலன் சார்ந்த பல்வேறு கலந்தாலோசித்து வருகின்றனர்.

The purpose of education should not be merely to earn money and obtain degrees, but to achieve the holistic development of life" - Mrs. Indumati, Chancellor Punuruthan University


Three-Day National Executive Meeting of Akhil Bharatiya Rashtriya Shaikshik Mahasangh Begins


Ayodhya, June 15– Indumati Tai Katdare, Chancellor of Punuruthan University, inaugurated the three-day national executive meeting of Akhil Bharatiya Rashtriya Shaikshik Mahasangh (ABRSM) today at Acharya Narendra Dev University of Agriculture and Technology, Ayodhya. She emphasized that the purpose of education should not be merely to earn money and obtain degrees, but to achieve the holistic development of life.


Chief Guest Indumati Tai Katdare said that teaching should include an understanding of social and cultural needs as well as psychological issues. She also stressed that the development of students can occur through true education both at home and in school, which in turn can lead to the development of the nation.


The meeting, attended by executive members and delegates from across India, aims to discuss various educational issues and programs to be implemented nationwide from primary schools to universities. Akhil Bharatiya Rashtriya Shaikshik Mahasangh, recognized as a leading teachers' organization in India, continuously works for the welfare of the teaching community and the education system from KG to PG. Over the next three days, executive members will engage in extensive discussions to formulate plans and strategies that will reach educational institutions at the school level.


Guest of honour Dr. Brajendra Singh, Vice-Chancellor of Acharya Narendra Dev University of Agriculture and Technology, Ayodhya, highlighted the achievements and initiatives of the university in his address. He highlighted that the university has made significant progress in various fields and has launched several new initiatives contributing to agricultural education and research.


Mahendra Kumar, All India Senior Vice President of Akhil Bharatiya Rashtriya Shaikshik Mahasangh, addressed the gathering, highlighting the extensive work and achievements of the organization. Representatives from various states across the country shared information about the activities and accomplishments of the Shaikshik Mahasangh in their respective states and UTs.


The inaugural session was graced by the presence of Sunil Bhai Mehta, Akhil Bhartiya Baudhik shikshan Pramukh of Rashtriya Swayamsevak Sangh, Mahendra Kapoor, All India Organising secretary of Akhil Bharatiya Rashtriya Shaikshik Mahasangh, and Shri G Laxman Ji, All India Joint Organising secretary. The event was conducted and guests were welcomed by Shri Shivanand Sindhanakeda, All India General Secretary of Akhil Bharatiya Rashtriya Shaikshik Mahasangh.










Friday, June 14, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 11 !!!

 அருள்மிகு ஶ்ரீ விஜயராகவ பெருமாள் கோவில் திருபூட்குழி, காஞ்சிபுரம் 

திருப்புட்குழி  ஶ்ரீ விஜயராகவ பெருமாள் கோயில்  108 வைணவத் திவ்ய திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் பாலு செட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே செல்லும் சென்னை - வேலூர் சாலையில் அமைந்துள்ளது.
நான்கு தோள்களுடன் கிழக்குநோக்கி வீற்றிருக்கும் திருக்கோலத்தில் இறைவன் விஜயராகவப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். இறைவி மரகதவல்லி. இத்தலத் தீர்த்தம் ஜடாயு தீர்த்தம். விமானம் விஜயகோடி விமானம் என்ற அமைப்பைச் சேர்ந்தது.
இராமாயணத்தில் சடாயு என்ற பறவைக்கு மோட்சமளித்து அதன் இறுதிச் சடங்குகளை இங்கு செய்ததால் திருப்புட்குழி ( பறவை + குழி) ஆனது என இதன் தலவரலாறு தெரிவிக்கின்றது.

ஜடாயுவுக்கு மோட்சமளித்த இராமன் இங்கு ஜடாயு தீர்த்தத்தை உண்டாக்கினார் என்று சொல்லப்படுகிறது. இங்கு கோவிலுக்கு எதிர்ப்புறத்தில் ஜடாயுவுக்கு சன்னதியுள்ளது. மூலவர் தமது தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு சடங்குகள் செய்யும் பாவனையில் அமர்ந்துள்ளார். வலப்பக்கத்தே இருக்க வேண்டிய இறைவி இடப்பக்கத்தே இருப்பது இங்கும் திருவிடவெந்தையில் மட்டுமே. இறைவன் திருவீது உலா செல்லும் போதெல்லாம் ஜடாயுவுக்கு மரியாதை செய்யப்படுகிறது. இந்த ஊரில் உள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி பெண்கள் இரவில் மடியில் வறுத்த பயறு கட்டிக்கொண்டு படுக்க மறுநாள் விடிந்தவுடன் அப்பயறு முளைத்திருக்குமாயின் அவர்கட்கு குழந்தைப்பேறு உண்டாகும் என்பது நம்பிக்கையாகும். எனவே இந்த இறைவி 'வறுத்த பயறு முளைவிக்கும் மரகதவல்லித் தாயார்' என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

இவ்வூரில் வாழ்ந்த யாதவப் பிரகாசர் என்பவரிடமே இராமானுஜர் அத்வைத பாடங்களைப் பயின்றார். இராமானுஜர் படித்த மண்டபம் இன்றும் உள்ளது. இராமானுஜர் கல்வி கற்றதை விளக்கும் சிற்பமும் இக்கோவிலில் உள்ளது. இக்கோவிலில் அதிக அளவிற்கு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இதன் மூலம் பாண்டிய மன்னர்களும் விஜயநகரப் பேரரசும் இத்தலத்திற்கு ஆற்றிய தொண்டினைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. இங்குள்ள கல்வெட்டுக்கள் இக்கோவிலைப் ‘போரேற்றுப் பெருமாள் கோவில்’ என்றும் ‘சித்தன்னவேலி திருப்புட்குழி நாயனார் கோவில்’ என்றும் பலவாறு குறிப்பிடுகின்றன. இங்குள்ள குதிரை வாகனம் மிகவும் அதிசயமானதாகும். கல் குதிரை என வழங்கப்படும் இக்குதிரை உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது. இதைச் செய்த தச்சன் இதுமாதிரி இனி யாருக்கும் செய்துகொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர் துறந்தானாம். இவனது உறுதியையும் பக்தியையும் போற்றும் வகையில் பெருமாள் 8ஆம் உற்சவத்தன்று அத்தச்சனது வீதிக்கு எழுந்தருளுகிறார்.







9 - 12th std | மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி கையேடு மாதவாரியாக பாடத்திட்டம் , மற்றும் வழிகாட்டு வகுப்பு நடைபெறும் நாட்கள் நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் !!!

 Download



Thursday, June 13, 2024

Immediate constitution of 8th Central Pay Commission !!!

 Immediate constitution of 8th Central Pay Commission for revising the pay / allowances / Pension and other benefits of Central Government Employees .
8 Pay Commission Regards - Download here

மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்புதல் - தலைமை ஆசிரியர்கள் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!

 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை  பதவி உயர்வு மூலம் நிரப்புதல் - தலைமை ஆசிரியர்கள் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

DSE - Called proposal for DEO Panel 2024-2025
Download here

ஐம்பெரும் விழா - அழைப்பிதழ் !!!

 





Wednesday, June 12, 2024

BEO PROMOTION From Middle school HM- COUNCELING ON 14.6.24 @ 11 a.m onwards.

 வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு 14.06.24 அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறும்- தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் !!!


அரசுப் பொதுத் தேர்வில் 💯 விழுக்காடு பெற்ற அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பாராட்டுதல் விழா உள்ளிட்ட ஐம்பெரு விழா - 14.06.2024 அன்று சென்னையில் நடைபெறுகிறது - DSE செயல்முறைகள்!!!_* *_இணைப்பு: பள்ளிகளின் பட்டியல் !!!

 Download 

Paper News

 
























IAS, IPS கனவல்ல நிஜம் !!!

 IAS, IPS தேர்வுகளை யாரெல்லாம் எழுத முடியும்? | ஒரு முழுமையான வழிகாட்டல்!!

இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு :

இந்திய அரசின் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission - UPSC), ஆண்டுதோறும் 24 வகையான இந்தியக் குடியியல் பணிகளுக்கு அகில இந்திய அளவில் இந்தியக் குடியியல் பணிகள் தேர்வினை (Civil Services Examination - CSE) நடத்துகிறது.

தேர்வை எழுதத் தகுதியுடையவர்கள் :

1. இந்தியக் குடிமகன்


2. நேபாளக் குடிமகன் அல்லது பூட்டான் குடிமகன்


3. ஜனவரி 1, 1962-ம் நாளுக்கு முன்பாக இந்தியாவில் குடியேறிய திபெத்திய அகதிகள்


4. இந்தியாவில் நிரந்தரமாகக் குடியேறும் நோக்கத்துடன் பாகிஸ்தான், மியான்மர், இலங்கை, கென்யா, உகாண்டா, தான்சானியா, சாம்பியா, மலாவி, ஜைர், எத்தியோப்பியா அல்லது வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து குடிபெயர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.


கல்வித்தகுதி மற்றும் வயது :

இத்தேர்வு எழுதிட விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து ஏதாவதொரு பட்டத்தைப் (10+2+3) பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் அனைவருக்கும் விண்ணப்பிக்கும் ஆண்டில் ஆகஸ்ட் முதல் நாளில் 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு 32 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். 

பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மூன்று ஆண்டுகள் தளர்வுடன் 35 வயதுக்கு அதிகமாகாமலும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகள் தளர்வுடன் 37 வயதுக்கு அதிகமாகாமலும், மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 ஆண்டுகள் தளர்வுடன் 42 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். வயதுச் சான்றிதழுக்கு மெட்ரிக் அல்லது மேல்நிலைப்பள்ளிச் சான்றிதழ் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.


எழுதுவதற்கான வாய்ப்புகள் :

இந்தியக் குடியியல் பணிகள் தேர்வினைப் பொதுப்பிரிவினர்கள் குறிப்பிட்ட வயது வரம்புக்குள் ஆறு முறைகள் எழுத அனுமதிக்கப்படுவார்கள். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, அவர்களுக்கு அளிக்கப்பட்ட வயது வரம்பிற்குள் ஒன்பது முறைகளும், எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர்களுக்கு அவர்களுக்கு அளிக்கப்பட்ட வயது வரம்பிற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுத முடியும். இங்கு முதல் நிலைத் தேர்வில் ஒரு தாள் மட்டும் எழுதினாலும், தேர்வில் கலந்து கொண்டதாகவேக் கருதப்படும். எனவே, தேர்வுக்கு சரியாகத் தயார் செய்து கொள்ளவில்லை எனக் கருதினால், தேர்வு எழுதுவதை தவிர்த்துவிடுவது சிறந்தது.


காலியிடங்கள் : 

ஒவ்வொரு ஆண்டும் காலியிடங்களின் எண்ணிக்கை மாறுபடும். முதற்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை பொதுவாக காலியிடங்களின் எண்ணிக்கையை விட 11 அல்லது 12 மடங்கு அதிகமாகும், மேலும் இறுதி நேர்காணலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை காலியிடங்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும். தற்போதுள்ள கொள்கைகளின்படி, எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு தேர்வு செயல்முறையின் ஒவ்வொரு நிலைக்கும் பொருந்தும்.


பணிகளின் பட்டியல் :

இத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள், கீழ்க்காணும் 24 வகையான பணிகளில் பணியமர்த்தப்படுகிறார்கள். அவை...


1. இந்திய ஆட்சிப்பணி (Indian Administrative Service - IAS)


2. இந்திய அயலகப் பணி (Indian Foreign Service – IFS)


3. இந்தியக் காவல் பணி (Indian Police Service – IPS)


4. இந்திய அஞ்சல் மற்றும் தொலைதொடர்புக் கணக்குகள் மற்றும் நிதிப் பணி (Indian P & T Accounts & Finance Service – IPTA & FS, Group ‘A’)


5. இந்தியத் தணிக்கை மற்றும் கணக்குகள் பணி (Indian Audit and Accounts Service – IA&AS, Group ‘A’)


6. இந்திய வருவாய்ப் பணி (சுங்கம் மற்றும் மத்தியக் கலால்) ((Indian Revenue Service (Customs and Central Excise) – IRS (C&CE), Group ‘A’)


7. இந்தியப் பாதுகாப்புக் கணக்குகள் பணி (Indian Defence Accounts Service – IDAS, Group ‘A’)


8. இந்திய வருவாய்ப் பணி (வருமான வரி) (Indian Revenue Service (I.T) – IRS (IT), Group ‘A’)


9. இந்திய ஆயுதத் தொழிற்சாலைகள் பணி (Indian Ordnance Factories Service - IOFS Group ‘A’ (Assistant Works Manager, Administration))


10. இந்திய அஞ்சலகப் பணி (Indian Postal Service – IPS (Postal) Group ‘A’)


11. இந்தியக் குடிமைக் கணக்குகள் பணி (Indian Civil Accounts Service - ICAS, Group ‘A’)


12. இந்தியத் தொடருந்து போக்குவரத்துப் பணி (Indian Railway Traffic Service - IRTS, Group ‘A’)


13. இந்தியத் தொடருந்துக் கணக்குகள் பணி (Indian Railway Accounts Service - IRAS, Group ‘A’)


14. இந்தியத் தொடருந்துப் பணியாளர் பணி (Indian Railway Personnel Service - IRPS, Group ‘A’)


15. உதவிப் பாதுகாப்பு ஆணையர், தொடருந்து பாதுகாப்புப் படை (Post of Assistant Security Commissioner in Railway Protection Force, Group ‘A’)


16. இந்தியப் பாதுகாப்பு உடைமைகள் பணி (Indian Defence Estates Service - IDES, Group ‘A’)


17. இந்தியத் தகவல் பணி (இளநிலை) (Indian Information Service (Junior Grade), Group ‘A’)


18. இந்தியத் தொழில் பணி (Indian Trade Service - ITS, Group ‘A’)


19. இந்திய நிறுவனச் சட்டப் பணி (Indian Corporate Law Service - ICLS, Group “A”)


20. ஆயுதப் படைத் தலைமையக குடிமைப் பணி (Armed Forces Headquarters Civil Service, Group ‘B’) (Section Officer’s Grade).


21. டெல்லி, அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள், இலட்சத்தீவு, டாமன் மற்றும் டையூ மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி குடிமைப் பணி (Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service, Group ‘B’)


22. டெல்லி, அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள், இலட்சத்தீவு, டாமன் மற்றும் டையூ மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி காவல் பணி (Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Police Service, Group ‘B’)


23. புதுச்சேரி குடிமைப் பணி (Pondicherry Civil Service, Group ‘B’)


24. புதுச்சேரி காவல் பணி (Pondicherry Police Service, Group ‘B’)  


தகுதித் தேர்வு :

இத்தேர்வு முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination), முதன்மைத் தேர்வு (Mains Examination) என்று இரு நிலைகளிலான தேர்வினைக் கொண்டிருக்கிறது. முதல்நிலைத் தேர்வில் தாள் 1, தாள் 2 என்று இரு தேர்வுகளும், முதன்மைத் தேர்வில் தேர்வு மற்றும் ஆளுமைத் தேர்வு (நேர்காணல்) என்று அமைந்திருக்கிறது.


முதல்நிலைத் தேர்வு :

முதல்நிலைத் தேர்வில் தாள் 1 தேர்வில் தற்போதைய நிகழ்வுகள், இந்தியா மற்றும் இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு, இந்திய மற்றும் உலகப் புவியியல், இந்திய அரசியல், பஞ்சாயத்து ராஜ் அமைப்பு மற்றும் நிர்வாகம், பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாடு, சுற்றுச்சூழல், சூழலியல், பல்லுயிர், காலநிலை மாற்றம் மற்றும் பொது அறிவியல், கலை மற்றும் பண்பாடு ஆகியவற்றில் விண்ணப்பதாரரின் அறிவை சோதிக்கும் வகையிலான கேள்விகளைக் கொண்டதாக அமைந்திருக்கும்.

தாள் 2 தேர்வில் விண்ணப்பதாரரின் புரிதல், தனிப்பட்ட திறன்கள், தகவல் தொடர்பு, தர்க்கரீதியான பகுத்தறிவு, பகுப்பாய்வு திறன், முடிவெடுத்தல், சிக்கலைத் தீர்ப்பது, அடிப்படை எண், தரவு விளக்கம், ஆங்கில மொழியினைப் புரிந்து கொள்ளும் திறன் மற்றும் மனத்திறன் ஆகியவற்றை சோதிக்கும் வகையிலான கேள்விகளைக் கொண்டதாக அமைந்திருக்கும்.

இந்தத் தாளில் பெற்ற மதிப்பெண்கள் தகுதிக்காகக் கணக்கிடப்படுவதில்லை. இருப்பினும், முதல்நிலைத் தகுதித் தேர்வில் தகுதி பெற, விண்ணப்பதாரர் இந்தத் தாளில் குறைந்தபட்சம் 33 சதவீத மதிப்பெண்களைப் பெறுவது கட்டாயமாக இருக்கிறது.

முதல்நிலைத் தேர்வானது, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் நடத்தப்பெறுகிறது. இத்தேர்வின் முடிவுகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படுகிறது.

முதன்மைத் தேர்வு :

முதன்மை எழுத்துத் தேர்வானது ஒன்பது தாள்கள், இரண்டு தகுதி மற்றும் ஏழு தர வரிசைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு தாளுக்கும் 3 மணி நேரம் வழங்கப்படுகிறது.


1. தாள் அ (Paper A) எனும் தாளுக்கு இந்திய அரசின் எட்டாவது அட்டவணையிடப்பட்டுள்ள அசாம், வங்காளம், போடோ, டோக்ரி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, மைதிலி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு உருது ஆகிய 23 மொழிகளில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். இந்தத் தாளுக்கு மொத்தம் 300 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.


2. தாள் ஆ (Paper B )எனும் தாளில் ஆங்கிலம் இருக்கிறது. இந்தத் தாளுக்கு மொத்தம் 300 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.


3. தாள் 1 எனும் தாளில் கட்டுரைகள் (Essays) இருக்கிறது. இந்தத் தாளுக்கு மொத்தம் 250 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.  


4. தாள் 2 எனும் பொது ஆய்வுகள் – 1 எனும் தாளில் இந்தியப் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் (Indian Heritage and Culture), உலகின் வரலாறு மற்றும் புவியியல் (History and Geography of the World) மற்றும் சமூகம் (Society) தொடர்பான கேள்விகள் இடம் பெற்றிருக்கும். இந்தத் தாளுக்கு மொத்தம் 250 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.


5. தாள் 3 எனும் பொது ஆய்வுகள் – 2 எனும் தாளில் ஆட்சி (Governance), அரசியலமைப்பு (Constitution), அரசியல் (Polity), சமூக நீதி (Social Justice) மற்றும் பன்னாட்டு உறவுகள் (International Relations) தொடர்பான கேள்விகள் இடம் பெற்றிருக்கும். இந்தத் தாளுக்கு மொத்தம் 250 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.


6. தாள் 4 எனும் பொது ஆய்வுகள் – 3 எனும் தாளில் தொழில்நுட்பம் (Technology), பொருளாதார மேம்பாடு (Economic Development), உயிரியல் பன்முகத்தன்மை (Bio-Diversity), சுற்றுச்சூழல் (Environment), பாதுகாப்பு (Security) மற்றும் பேரிடர் மேலாண்மை (Disaster Management) தொடர்பான கேள்விகள் இடம் பெற்றிருக்கும். இந்தத் தாளுக்கு மொத்தம் 250 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.


7. தாள் 5 எனும் பொது ஆய்வுகள் – 4 எனும் தாளில் நெறிமுறைகள் (Ethics), ஒருமைப்பாடு (Integrity) மற்றும் தகுதி (Aptitude) தொடர்பான கேள்விகள் இடம் பெற்றிருக்கும். இந்தத் தாளுக்கு மொத்தம் 250 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.


8. 6 மற்றும் 7 தாள்களுக்கு வேளாண்மை (Agriculture), கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல் (Animal Husbandry and Veterinary Science), மானுடவியல் (Anthropology), தாவரவியல் (Botany), வேதியியல் (Chemistry), கட்டிடவியல் பொறியியல் (Civil Engineering), வணிகம் மற்றும் கணக்குப்பதிவியல் (Commerce and Accountancy), பொருளியல் (Economics), மின்னியல் பொறியியல் (Electrical Engineering), புவியியல் (Geography), நிலவியல் (Geology), வரலாறு (History), சட்டம் (Law), மேலே பட்டியலிடப்பட்ட மொழிகளில் ஒன்றின் இலக்கியம் (Literature of any one of the languages listed above), மேலாண்மை (Management), கணிதம் (Mathematics), இயந்திரவியல் பொறியியல் (Mechanical Engineering), மருத்துவ அறிவியல் (Medical Science), மெய்யியல் (Philosophy), இயற்பியல் (Physics), அரசியல் அறிவியல் மற்றும் பன்னாட்டு உறவுகள் (Political Science and International Relations), உளவியல் (Psychology), பொது நிர்வாகம் (Public Administration), சமூகவியல் (Sociology), புள்ளியியல் (Statistics), உருது (Urdu), விலங்கியல் (Zoology) எனும் விருப்பப் பாடங்களின் பட்டியலிலிருந்து ஒரு பாடத்தில் இரண்டு தாள்களைத் தேர்வு செய்திட வேண்டும். இந்தத் தாள்கள் ஒவ்வொன்றுக்கும் 250 மதிப்பெண்கள் வீதம் இரு தாள்களுக்கு மொத்தம் 500 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

மொத்தத்தில் இந்த ஒன்பது தாள்களின் எழுத்துத் தேர்வுகளுக்கு மொத்தம் 1750 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

முதன்மைத் தேர்வானது, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நடத்தப்பெறுகிறது. இத்தேர்வின் முடிவுகள் ஜனவரி மாதத்தில் வெளியிடப்படுகிறது.

ஆளுமைத் தேர்வு :

பொதுச்சேவையில் ஒரு பணிக்கு விண்ணப்பதாரரின் தனிப்பட்ட பொருத்தத்தை மதிப்பிடுவதாக இந்த நேர்காணல் அமைகிறது. இந்நேர்காணலானது, தீர்மானிக்கப்பட வேண்டிய சில குணங்கள் மன விழிப்புணர்வு, ஒருங்கிணைக்கும் முக்கியமான சக்திகள், தெளிவான மற்றும் தர்க்கரீதியான வெளிப்பாடு, தீர்ப்பின் சமநிலை, சமூக ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்திற்கான திறன் மற்றும் அறிவுசார் மற்றும் தார்மீக ஒருமைப்பாடு என்று விண்ணப்பதாரரின் அறிவுசார் குணங்கள் மட்டுமின்றி, சமூகப் பண்புகள் மற்றும் நடப்பு விவகாரங்களில் உள்ள ஆர்வத்தின் மதிப்பீடாகவும் அமைகிறது. ஆளுமைத் தேர்வுக்கு (நேர்காணல்) 275 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

முதன்மை எழுத்துத் தேர்வுகளுக்கான 1750 மதிப்பெண்கள், ஆளுமைத் தேர்வுக்கான 275 மதிப்பெண்கள் என்று மொத்தம் 2025 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறையினைப் பின்பற்றி, கூடுதல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் இந்தியக் குடியியல் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்தியக் குடியியல் பணிகளுக்குத் தேர்வு செய்யப் பெற்ற விண்ணப்பதாரர்களின் மருத்துவப் பரிசோதனை மற்றும் பிற தேவையான நடைமுறைகள் நிறைவடைந்த பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான பயிற்சித் திட்டம் அடுத்து வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்குகிறது. பயிற்சி நிறைவுக்குப் பின்பு, அவர்களுக்கான பணி மற்றும் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


அதிகாரப்பூர்வ இணையதளம் :

https://upsc.gov.in/

மாதிரி வினாத்தாட்கள் : 

Click to get pervious year question papers 


தொகுப்பு :

வா ஶ்ரீராம் ,

பட்டதாரி கணித ஆசிரியர்,

மாநில ஊடக இணைச் செயலர், 

தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு.

கைபேசி : 7305518764

Saturday, June 8, 2024

FLASH : 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி வெளியீடு!!!

 Download 

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 10 !!!

 திரு ஆயர்பாடி, மதுரா மாவட்டம், உத்திரபிரதேசம்

ஆயர்பாடி என்றும் ஆய்ப்பாடி என்றும் கோகுலம் என்றும் அழைக்கப்படும் இத்தலம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகிய மூவரால் பாடல்பெற்ற தலம் இதுவாகும். இந்த கோகுலம் என்னும் ஆய்ப்பாடி மதுரா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 மைல் தொலைவில் உள்ளது.

இத்தலம் பற்றியும், கோகுலம் பற்றியும் ஸ்ரீமத் பாகவதம் உட்பட எண்ணற்ற வடமொழி நூல்கள் எடுத்தியம்பியுள்ளன. துவாபரயுகத்தில் திருமாலின் அவதாரமான கண்ணன் குழந்தைப்பருவ லீலைகள் நடந்த இடமே கோகுலம். கண்ணன் சின்னஞ்சிறு சிறுவனாக இருந்து இந்த ஆயர்பாடியில் செய்த லீலைகள் எல்லாம் எண்ணற்ற நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெண்ணெய் உண்டது, இளங்கன்னிமார்களை ஏய்த்தது, சிற்றில் சிதைத்தது. நந்த கோபாலனாக வளர்ந்தது, மாடு மேய்க்கப் போனது என்றிவ்வாறான பலவித லீலைகளை நடத்திய இந்த கோகுலம் முழுவதையும் ஆழ்வார்கள் தம் பாக்களில் பாடியுள்ளனர்.
இத்தலத்தில் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் நவமோகன கிருஷ்ணன் என்ற பெயரில் காட்சி தருகிறார். இறைவி ருக்மணி தேவி, சத்திய பாமா ஆகியோர். இதன் விமானம் ஹேம கூட விமானம் என்னும் அமைப்பினைச் சேர்ந்தது.
இங்கு யமுனை நதி ஓடுகிறது. இங்கு கோகுல் என்று அழைக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடம் தான் உண்மையான கோகுலப் பகுதி என்று சொல்லப்படுகிறது.புராண்கோகுல் என்று அழைக்கப்படும் இந்தப் பழைய கோகுலத்தில் யமுனை நதிக்கரையில் ஒரு தலம் அமைந்துள்ளது. இங்கு நந்தகோபர், யசோதை, பலராமர், மற்றும் தொட்டில் கிருஷ்ணன் ஆகியோருக்கு மரத்தினால் செய்யப்பட்ட மூர்த்திகள் உள்ளன.

சிறைச்சாலையில் தேவகி மைந்தனாகப் பிறந்த கண்ணன் இந்த ஆயர்பாடியில் உள்ள நந்த கோபர் வீட்டிற்கு வந்த நாளை ஆண்டுதோறும் இங்கு விழாவாக நந்தோற்சவம் என்ற பெயரில் இன்றும் கொண்டாடுகின்றனர். இன்றும் ஜன்மாஷ்டமியின் மறுநாள் (கோகுலாஷ்டமியின் மறுதினம்) இதே பெயரில் இந்த உற்சவம் வடநாட்டிலும், பிற முக்கிய தலங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள கௌடில்யா மடத்தில் இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் மிக்க சிறப்புடன் தற்போதும் நடத்தப்பட்டு வருகிறது.