உலக சுற்றுச்சூழல் தினம் ஏன் ஜூன் 5 அன்று கொண்டாடப்படுகிறது?
Tuesday, June 4, 2024
உலக சுற்றுச்சூழல் தினம் - சிறப்பு செய்தி !!!
Monday, June 3, 2024
Sunday, June 2, 2024
Saturday, June 1, 2024
Bank Account in EMIS
அனைத்து மாணவர்களும் வங்கி கணக்கு தொடங்கி அதனை பள்ளியின் EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.. என பள்ளிக்கல்வி இயக்குநர் தனியார் பள்ளி இயக்குநர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் அவர்களின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செயல்முறைகள்-pdf
அனைத்து மாணவர்களும் வங்கி கணக்கு தொடங்கி அதனை பள்ளியின் EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்..
என பள்ளிக்கல்வி இயக்குநர்
தனியார் பள்ளி இயக்குநர்
மற்றும்
தொடக்க கல்வி இயக்குநர்
அவர்களின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செயல்முறைகள்-
Dir.proceedings- Click here
Friday, May 31, 2024
சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 9 !!!
அருள்மிகு உலகளந்த பெருமாள் கோவில் திருக்கோயிலூர்
உலகளந்த பெருமாள் கோவில் தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் மாநகரில் உள்ள ஒரு பெருமாள் கோயிலாகும். இது 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோயிலின் பெருமாள் திருவுரு ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார். கோபுர நுழைவாயில்கள் கோயிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக உள்ளன. பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரோடும் திருமங்கை மன்னனும் இந்தத் தலத்தை மங்களா சாசனம் செய்திருக்கிறார்.[கோயில் அமைந்துள்ள திருக்கோயிலூர் மாநகரம் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
மகாபலி என்னும் அசுர அரசன் தான தர்மத்தில் சிறந்தவன் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான். அவனது ஆணவத்தை அடக்கும் பொருட்டு விஷ்ணு வாமன (குள்ள) அவதாரம் எடுத்து யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து மூன்றடி மண் தானமாக கேட்கிறார். வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து சுக்கிராச்சாரியார் மூன்றடி மண் தானம் தர விடாது தடுக்கிறார். குருவின் பேச்சை மீறி தானம் தர மகாபலி ஒப்புக்கொள்கிறான்.
அப்போது மகாவிஷ்ணு விசுவரூபம் எடுத்து தன் பாதத்தின் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை ஆகாயத்திலும் வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்கிறார். மகாபலி தன் தலையை தாழ்த்தி தன் தலையை தவிர வேறு இடம் என்னிடம் இல்லை என்கிறான். விஷ்ணுவும் விடாது மகாபலியின் தலைமீது தன் பாதத்தை அழுத்தி மூன்றாவது அடியை தாரை வார்த்து தா என்று சொல்ல மகாபலி கெண்டியை எடுத்து தானமாக தர முயல சுக்கராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து கெண்டியை அடைத்து தண்ணீர் வர விடாமல் தடுக்க விஷ்ணு தர்ப்பை புல்லால் குத்திவிடுகிறார். இதனால் குருடாகி சுக்கிராச்சாரியார் வெளியேறிப் போய் விடுகிறார்.
மகாபலி கெண்டியை எடுத்து மூன்றாவது அடியை தானம் செய்து மண்ணில் புதையுண்டு போனான். அவனது ஆணவத்தை இவ்வாறு அடக்கிய பின்பு மகாபலியை விஷ்ணு தன்னோடு சேர்த்து கொண்டார் என்று தலவரலாறு கூறுகிறது. அவ்வரலாற்றின்படி மாலவன் கால் தூக்கி நிற்கும் காட்சியே இக்கோயில் கருவறையில் மூலவராக, வடிக்கப்பெற்றிருக்கிறது.
விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட இராஜகோபுரம் பதினொரு நிலைகளோடு உயர்ந்திருக்கிறது. என்றாலும் கோயிலின் பிரதான வாயிலில் ஒரு சிறிய கோபுரமே உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தால் மங்கை மன்னன் கட்டிய கோபுர வாயில் வரும். அதனையும் கடந்தால் பாண்டியன் மண்டபம், பின்பு தான் கருவறை உள்ளது. கருவறையில் நிற்கிறார் உலகளந்த திருவிக்கிரமன். நல்ல நெடிய திருவுருவம். மூலவர் திருவுரு, மரத்தால் ஆன வடிவம். இந்த இறைவன் பிற கோயில்களில் இருந்து மாறுபட்டு வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்தி காட்சி தருகிறார். திருவிக்கிரமன் பத்தினி (திருவிக்கிரமி) மிருகண்டு, மகாபலி எல்லோரும் காலடியிலேயே இருக்கிறார்கள்.
பொதுவாக சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தில் தான், விஷ்ணு துர்க்கையைக் காண முடியும். ஆனால், 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் சன்னதி அருகிலேயே விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கிறாள். இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்யலாம்.
கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி,திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை ஆகியவை பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
ஜூன் 10 : பள்ளிகள் திறப்பு - தமிழக அரசு அறிவிப்பு !!!
ஜூன் 10 - ஆம் தேதி பள்ளிகள் திறப்பு : தமிழக அரசு
தமிழகத்தில் ஜூன் 6ம் தேதிக்கு பதிலாக ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறுகட்சிகள் வலியுறுத்தின.
Thursday, May 30, 2024
Wednesday, May 29, 2024
Tuesday, May 28, 2024
Monday, May 27, 2024
தேசிய திறந்தநிலைப்பள்ளி நிறுவனம் NATIONAL INSTITUTE OF OPEN SCHOOLING (NIOS) - சேர்க்கை அறிவிப்பு - 2024-25!!!
NATIONAL INSTITUTE OF OPEN SCHOOLING (NIOS)
(உலகின் மிகப்பெரிய திறந்தநிலைப்பள்ளி நிறுவனம்)
ISO 9001:2015 சான்றிதழ் பெற்றது (மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி கல்வி நிறுவனம்) A-24/25, செக்டார்-62. நொய்டா 201309, உத்தரப்பிரதேசம் மாநிலம்
இணையதளம்: www.nios.ac.in / கட்டணமில்லா தொலைபேசி: 1800 1809393
CLICK HERE TO GO TO ADMISSION PAGE
தேனி - ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம்- முழு விவரம்!!!
தேசிய ஆசிரியர் சங்கம் -தமிழ்நாடு
அமைப்பின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆளுமைதிறன் மேம்பாட்டுபயிற்சி முகாம் - மே 2024
(Personality Development Camp)
தேனி மாவட்டம் வேதபுரி ஆசிரமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்து தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அகில பாரத பொதுச் செயலாளர் திரு.சிவானந்த் சிந்தன்கரே அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .மாநில மாவட்ட பொறுப்பாளர்களுக்கு ஆன்மீகம் மற்றும் தேசிய சிந்தனையூட்டும் பல்வேறு வகையான பயிற்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் நமது சங்கத்தின் மாநில தலைவர் மாநில பொதுச் செயலாளர் உள்ளிட்ட மாநில கோட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிறு விளையாட்டுகள், யோகாசனப் பயிற்சி உட்பட பல அமர்வுகள் இடம் பெற்றன.
முகாம் ஏற்பாடுகளை மாநில பொறுப்பாளர்களும் தேனி மாவட்ட நிர்வாகிகளும் இணைந்து செய்திருந்தனர்.
To join in our association - click here
Sunday, May 26, 2024
Saturday, May 25, 2024
சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 8 !!!
அருள்மிகு புண்டரீகாட்ச பெருமாள் கோயில் திருவெள்ளறை - திருச்சி