Tuesday, June 4, 2024

உலக சுற்றுச்சூழல் தினம் - சிறப்பு செய்தி !!!

 உலக சுற்றுச்சூழல் தினம் ஏன் ஜூன் 5 அன்று கொண்டாடப்படுகிறது?

1972 ஆம் ஆண்டு  ஜூன் 5 ஆம் தேதி, ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் மனித சுற்றுச்சூழல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு நடைபெற்றது. 1973-ஆம் ஆண்டு இந்த தினத்தை போற்றும் வகையில், உலகம் தனது முதல் உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடியது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஒரே நாளில் சிறப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள்:

ஒவ்வொரு ஆண்டும், காலநிலை மாற்றம் முதல் புவி வெப்பமடைதல் , காடழிப்பு வரை உடனடி பிரச்சனைகளை குறிவைத்து ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுடன் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த 2024-ம் ஆண்டு, உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் - நில மறுசீரமைப்பு, பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியை எதிர்க்கும் தன்மையாகும். "பாலைவனமாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐ.நா. உடன்படிக்கையின்படி, கிரகத்தின் நிலப்பரப்பில் 40 சதவீதம் வரை சீரழிந்து, உலக மக்கள்தொகையில் பாதியை நேரடியாக பாதிக்கிறது. வறட்சியின் எண்ணிக்கையும் கால அளவும் 2000-லிருந்து 29%  அதிகரித்துள்ளது - துரித  நடவடிக்கை இல்லையெனில் வறட்சி மிக மோசமாக 2050க்குள் உலக மக்கள்தொகையில் முக்கால்வாசிப் பேரை பாதிக்கலாம்" என்று ஐக்கிய நாடுகள் சபை அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

தொகுப்பு :

S.பரமசிவம்,
அறிவியல் ஆசிரியர்,
மாவட்டத் தலைவர்,
தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு,
மதுரை மாவட்டம்.
கைபேசி : 9894313079





Saturday, June 1, 2024

Bank Account in EMIS

 அனைத்து மாணவர்களும் வங்கி கணக்கு தொடங்கி அதனை பள்ளியின் EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.. என பள்ளிக்கல்வி இயக்குநர் தனியார் பள்ளி இயக்குநர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் அவர்களின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செயல்முறைகள்-pdf


அனைத்து மாணவர்களும் வங்கி கணக்கு தொடங்கி அதனை பள்ளியின் EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்..


என பள்ளிக்கல்வி இயக்குநர்


தனியார் பள்ளி இயக்குநர்


மற்றும் 


தொடக்க கல்வி இயக்குநர்


அவர்களின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செயல்முறைகள்-


Dir.proceedings- Click here



Degree certificate genuineness -க்கு, உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்கள் இனி கட்டணம் வசூலிக்கக்கூடாது என, பல்கலைக் கழக மானியக் குழு (UGC) உத்தரவு பிறப்பித்துள்ளது !!!

 


Friday, May 31, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 9 !!!

 அருள்மிகு உலகளந்த பெருமாள் கோவில் திருக்கோயிலூர் 

உலகளந்த பெருமாள் கோவில் தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம்திருக்கோவிலூர் மாநகரில் உள்ள ஒரு பெருமாள் கோயிலாகும். இது 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோயிலின் பெருமாள் திருவுரு ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார். கோபுர நுழைவாயில்கள் கோயிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக உள்ளன. பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரோடும் திருமங்கை மன்னனும் இந்தத் தலத்தை மங்களா சாசனம் செய்திருக்கிறார்.[கோயில் அமைந்துள்ள திருக்கோயிலூர் மாநகரம் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

மகாபலி என்னும் அசுர அரசன் தான தர்மத்தில் சிறந்தவன் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான். அவனது ஆணவத்தை அடக்கும் பொருட்டு விஷ்ணு வாமன (குள்ள) அவதாரம் எடுத்து யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து மூன்றடி மண் தானமாக கேட்கிறார். வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து சுக்கிராச்சாரியார் மூன்றடி மண் தானம் தர விடாது தடுக்கிறார். குருவின் பேச்சை மீறி தானம் தர மகாபலி ஒப்புக்கொள்கிறான்.

அப்போது மகாவிஷ்ணு விசுவரூபம் எடுத்து தன் பாதத்தின் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை ஆகாயத்திலும் வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்கிறார். மகாபலி தன் தலையை தாழ்த்தி தன் தலையை தவிர வேறு இடம் என்னிடம் இல்லை என்கிறான். விஷ்ணுவும் விடாது மகாபலியின் தலைமீது தன் பாதத்தை அழுத்தி மூன்றாவது அடியை தாரை வார்த்து தா என்று சொல்ல மகாபலி கெண்டியை எடுத்து தானமாக தர முயல சுக்கராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து கெண்டியை அடைத்து தண்ணீர் வர விடாமல் தடுக்க விஷ்ணு தர்ப்பை புல்லால் குத்திவிடுகிறார். இதனால் குருடாகி சுக்கிராச்சாரியார் வெளியேறிப் போய் விடுகிறார்.

மகாபலி கெண்டியை எடுத்து மூன்றாவது அடியை தானம் செய்து மண்ணில் புதையுண்டு போனான். அவனது ஆணவத்தை இவ்வாறு அடக்கிய பின்பு மகாபலியை விஷ்ணு தன்னோடு சேர்த்து கொண்டார் என்று தலவரலாறு கூறுகிறது. அவ்வரலாற்றின்படி மாலவன் கால் தூக்கி நிற்கும் காட்சியே இக்கோயில் கருவறையில் மூலவராக, வடிக்கப்பெற்றிருக்கிறது.

விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட இராஜகோபுரம் பதினொரு நிலைகளோடு உயர்ந்திருக்கிறது. என்றாலும் கோயிலின் பிரதான வாயிலில் ஒரு சிறிய கோபுரமே உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தால் மங்கை மன்னன் கட்டிய கோபுர வாயில் வரும். அதனையும் கடந்தால் பாண்டியன் மண்டபம், பின்பு தான் கருவறை உள்ளது. கருவறையில் நிற்கிறார் உலகளந்த திருவிக்கிரமன். நல்ல நெடிய திருவுருவம். மூலவர் திருவுரு, மரத்தால் ஆன வடிவம். இந்த இறைவன் பிற கோயில்களில் இருந்து மாறுபட்டு வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்தி காட்சி தருகிறார். திருவிக்கிரமன் பத்தினி (திருவிக்கிரமி) மிருகண்டு, மகாபலி எல்லோரும் காலடியிலேயே இருக்கிறார்கள்.

பொதுவாக சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தில் தான், விஷ்ணு துர்க்கையைக் காண முடியும். ஆனால், 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் சன்னதி அருகிலேயே விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கிறாள். இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்யலாம்.

கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி,திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை ஆகியவை பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
















ஜூன் 10 : பள்ளிகள் திறப்பு - தமிழக அரசு அறிவிப்பு !!!

 ஜூன் 10 - ஆம் தேதி பள்ளிகள் திறப்பு : தமிழக அரசு 


தமிழகத்தில் ஜூன் 6ம் தேதிக்கு பதிலாக ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறுகட்சிகள் வலியுறுத்தின.



Thursday, May 30, 2024

Mass Cleaning - பள்ளித் தூய்மை பணி செயல்பாடுகள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் - 03.06.2024 முதல் 05.06.2024 வரை செயல்படுத்துதல் சார்ந்து DSE & DEE இணைச் செயல்முறைகள்!!!

 Download 

BLOOD DONOR LIST - CLICK HERE 

Paper News

 


30.05.2024 முதல் 05.06.2024 பொது மாறுதல் கோரும் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் - ஆதி திராவிடர் நலத் துறை அறிவிப்பு!!!

 Download 

வாழ்த்து செய்தி

 


பயிலும் பள்ளியிலேயே ஆதார் எனும் சிறப்புத் திட்டத்தை பள்ளி தொடங்கும் முதல் நாளிலேயே தொடங்க பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவு!!!

 Download 

BLOOD DONOR LIST - CLICK HERE 

Monday, May 27, 2024

கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு நியமன அலுவலரே (Appointing Authority) பணிவரன்முறை செய்து ஆணை வழங்கலாம் - DSE செயல்முறைகள்!!!

 Download 

தேசிய திறந்தநிலைப்பள்ளி நிறுவனம் NATIONAL INSTITUTE OF OPEN SCHOOLING (NIOS) - சேர்க்கை அறிவிப்பு - 2024-25!!!

 NATIONAL INSTITUTE OF OPEN SCHOOLING (NIOS)


(உலகின் மிகப்பெரிய திறந்தநிலைப்பள்ளி நிறுவனம்)

ISO 9001:2015 சான்றிதழ் பெற்றது (மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி கல்வி நிறுவனம்) A-24/25, செக்டார்-62. நொய்டா 201309, உத்தரப்பிரதேசம் மாநிலம்

இணையதளம்: www.nios.ac.in / கட்டணமில்லா தொலைபேசி: 1800 1809393

Regional Office: NIOS மண்டல மையம்-சென்னை, லேடி வில்லிங்டன் வளாகம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005

CLICK HERE TO GO TO ADMISSION PAGE

Paper News

 Click Here to Know Full Details 


தேனி - ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம்- முழு விவரம்!!!

 தேசிய ஆசிரியர் சங்கம் -தமிழ்நாடு

அமைப்பின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆளுமைதிறன் மேம்பாட்டுபயிற்சி முகாம் - மே 2024

(Personality Development Camp) 

தேனி மாவட்டம் வேதபுரி ஆசிரமத்தில்   நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்து  தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அகில பாரத பொதுச் செயலாளர் திரு.சிவானந்த் சிந்தன்கரே அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்  .மாநில மாவட்ட பொறுப்பாளர்களுக்கு ஆன்மீகம் மற்றும் தேசிய சிந்தனையூட்டும் பல்வேறு வகையான பயிற்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் நமது சங்கத்தின் மாநில தலைவர் மாநில பொதுச் செயலாளர் உள்ளிட்ட மாநில கோட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

சிறு விளையாட்டுகள், யோகாசனப் பயிற்சி உட்பட பல அமர்வுகள் இடம் பெற்றன.

முகாம் ஏற்பாடுகளை மாநில பொறுப்பாளர்களும் தேனி மாவட்ட நிர்வாகிகளும் இணைந்து செய்திருந்தனர்.

To join in our association - click here 
















BT/BRTE - பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் சான்றிதழ் சரிபார்ப்பு !!!

 


Saturday, May 25, 2024

Paper News

 


சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 8 !!!

  அருள்மிகு புண்டரீகாட்ச பெருமாள் கோயில் திருவெள்ளறை -  திருச்சி


இத்திருக்கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்.சோழ நாட்டு நான்காவது திருத்தலம். இத்திருக்கோவில் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலே துறையூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது.இங்கு செந்தாமரைக்கணன் (புண்டரீகாக்ஷன்) என்ற திருநாமம்த்தில் எம்பெருமான் எழுந்தருளியுள்ளார்.
புண்டரீகாக்ஷன் - செந்தாமரைக் கண்ணன், நின்ற திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம். சக்கரம்- ப்ரயோக சக்கரம்.

மூலஸ்தானத்தில் மூலவர் பெருமாளை தவிர ஏழு மூலவர்கள் உள்ளனர். மேலே பெருமாளின் வலது பக்கம் சூரியனும் இடது பக்கம் சந்திரனும் பெருமாளுக்கு சாமரம் வீசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு கீழே பெருமாளின் வலது பக்கம் கருட பகவானும் இடது பக்கம் ஆதிசேஷனும் மனித ரூபத்தில் நின்றுக்கொண்டு பெருமாளை சேவித்த படி இருக்கின்றனர். கீழே அமர்ந்தபடி பெருமாளின் வலது பக்கம் மார்க்கண்டேய மஹரிஷி மோட்சத்திற்காக தவம் புரிந்துக்கொண்டு இருக்கிறார் இடது பக்கம் பூமாதேவி தாயார் உலக நன்மைக்காக தவம் புரிந்துக்கொண்டு இருக்கிறார். இவர்களுக்கு நடுவில் மூலவர் பெருமாள் பெரிய உருவத்துடன் இருக்கிறார். அவருக்கு கீழே ஒரே சிம்மாசனத்தில் உற்சவர் செந்தாமரைக் கண்ணனும் பங்கஜவல்லி தாயாரும் உள்ளனர்.இத்தலம் மிகவும் தொன்மையான தலங்களில் ஒன்றாகும். திருவரங்கத்திற்கும் பழமையானது என்பதாலேயே ஆதிவெள்ளறை என்றும் அழைக்கபடுகிறது. வெண்மையான பாறையினால் ஆன மலை எனப்பொருள்பட வெள்ளறை எனப்படுகிறது. திரு என்பது உயர்வை குறிக்குமாதலால் ‘திருவெள்ளறை’ என அழைக்கப்படுகிறது.திவ்யகந்த, க்ஷீரபுஷ்கரிணிகள், மணிகர்ணிகா என்று ஏழு தீர்த்தங்கள் மதிலுக்குள்ளாகவே அமைந்துள்ளன.எங்குமில்லாத வகையில் இக்கோயிலில் உத்தராயண வாசல் என்றும் தக்ஷிணாயன வாசல் என்றும் இரண்டு வாசல்கள் உள்ளன. தை முதல் ஆனி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி வரை தக்ஷிணாயன வாசல் வழியாகவும் கோயிலில் பெருமானைத் தரிசிக்கச் செல்ல வேண்டும். இத்தல பெருமாளை பெரியாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.இக்கோயில் பல்லவ மன்னன் நந்திவர்மனின் ஐந்தாம் ஆண்டில் (கி.பி 805) தொடங்கி மூன்றாம் நந்திவர்மன் சோழர்கள், விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்கள் என பல காலகட்டங்களில் இந்த கோயில் ஆக்கம் பெற்றுள்ளதை அவர்கள் காலத்தின் கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. மதுராந்தக உத்தம சோழனின் எட்டாம் ஆண்டு கல்வெட்டுகளில் இந்த கோயில் "பெரிய ஸ்ரீ கோயில்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கோயிலில் இருக்கும் கிணறு பல்லவ மன்னன் தந்திவர்மனால் உருவாக்கப்பெற்றது. இது மாற்பிடுகு பெருங்கிணறு என்று அழைக்கப்பெறும். இந்தக் கிணற்றுக்கு அருகில் இருக்கும் ஒரு கல்வெட்டு ஆலம்பாக்கத்து கம்பன் அரையன் என்ற தலைவன் தன் அரசன் நந்திவர்மன் பட்டபெயரான மாற்பிடுகு என்ற பெயரில் "மாற்பிடுகு பெருங்கிணறு" என்று தோற்றுவித்தான். இந்த கிணற்றின் பக்கசுவற்றில் ஒரு கல்வெட்டு பாடல் ஆலம்பாக்கத்து கம்பன் அறையனால் பொறிக்கப்பெற்றுள்ளது.