Wednesday, September 4, 2024

CPS missing credit சார்ந்த பதிவு!!!

 

1) பணியாளர்கள் cps.tn.gov.in/public  website இல் சென்று individual login..

account statement download செய்து கொள்ளலாம் ( தற்போது 

நாம் CPS இல் சேர்ந்த / பணியில் சேர்ந்த நாள் முதல் 2023-24 நிதியாண்டு வரை அனைத்து வருட statement வருகிறது)


2) missing credit இருக்கிறதா என பாருங்கள்?

( Statement இல் கீழே missing credit month - என இருக்கும்)


3) சில நேரங்களில் DA arrear/ SG arrear CPS பிடித்தம் a/c statement இல் இல்லாமல் இருக்கலாம்... அதையும் சரிபார்த்து கொள்ளுங்கள்...


CPS missing credit இல்லை எனில் நன்று...

இருந்தால்


 How to rectify missing credit ?


1) login school/DDO CPS website... cps.tn.gov.in


2) login id 

treasury code_old DDO code

eg 0708_SB456

Password 

treasury code_old DDO code_123

Eg 0708_SB456_123


3) select missing credit


4) MC(2023-24)


5) select month select employee CPS number submit 


6) forward to other treasury?

select yes or no 

தற்போது நம்மிடம் பணிபுரிகிறார் ஆனால் missing credit பழைய பள்ளியில் இருக்கும் போது எனில் yes கொடுத்து 

select district select treasury select DDO submit ( பழைய பள்ளிக்கு மாறி விடும்) நமது பள்ளியில் இருக்கும் போது தான் missing credit எனில் NO...


7) loss of pay, death, already paid,... இது போன்ற காரணம் எனில் select respective reason


8) உண்மையில் missing credit  எனில்...


Enter amount...

CPS schedule total amount...

Token no...

Date....

Voucher no...

Date ( last date of the month)... 

Treasury...

Date of encashment...

Bill GA...

Bill NA...

Head of account...(eg 2202)

15A..

Originally booked Head ( 8342) (en face ment first four digits)

Reason....( Select)

Submit.....


9) note.... 

CPS contribution 10000 க்கு மேல் எனில் அந்த மாத CPS schedule pdf ஆக attachment செய்ய வேண்டும் 


10) ஒரே ஒரு missing credit தான் எனில் submit க்கு பிறகு finalize the entry...


11) ஒன்றுக்கு மேற்பட்ட CPS missing credit எனில் ஒவ்வொன்றாக entry போட்ட பிறகு கடைசியில் தான் finalize the entry வழங்க வேண்டும்...


12) finalize செய்து முடித்த பிறகு... Forward to treasury


13) நமது பணி முடிந்தது...


14) dashboard இல்..

 total no of missing credit...

Completed...

Forwarded...

Yet to complete....

என இருக்கும் அதை வைத்து முடித்தது/ முடிக்காதது பற்றி தெரிந்து கொள்ளலாம்...


பதிவு தான் பெரிதாக இருக்கிறது 

சில நிமிடங்களில் மொத்த பணியாளருக்கும் எளிதாக முடித்து விடலாம் 


15) IFHRMS இல் 

initiator...

Finance...

Bills...

Bill report...

TNTC 70.... e-70 download...


செய்து கொள்ளுங்கள்..

இதில் token no... Bill no.. GA/NA.. voucher no...DOE.. என அனைத்தும் இருக்கும்...


16) அடுத்த ஆண்டு 2024-25 statement போது ... இந்த missing credit தொகை நமது கணக்கில் வரவு செய்யப்பட்டு இருக்கும் .


(IFHRMS உள்ளேயும் சென்று missing credit entry செய்ய இயலும்)



மாநில நல்லாசிரியர் விருது 2024

 டாக்டர் இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்ற ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு.


தொடக்கக் கல்வித்துறை

Dr Radhakrishnan Best Teachers Award 2024 - Selected Teachers List ( DEE )
👇👇👇

பள்ளிக் கல்வித்துறை 

Dr Radhakrishnan Best Teachers Award 2024 - Selected Teachers List ( DSE)  
👇👇👇

Private School Teachers List 


Sunday, September 1, 2024

திருமலை - திருப்பதி - ஆன்மீகச் செய்திகள்!!!

 திருப்பதி - 7 மலைகளும்! அவற்றில் வீற்றிருக்கும் 5 ஸ்ரீனிவாசன்களும்


1. வேங்கட மலை:


‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.


2. சேஷ மலை:


பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.


3. வேதமலை:


வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.


4. கருட மலை:


இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.


5. விருஷப மலை:


விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.


6. அஞ்சன மலை:


ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’ எனப்படுகிற து.


7. ஆனந்த மலை:


ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.


திருப்பதி மலைகளில் வீற்றிருக்கும் ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர். அவர்களில்,


1.த்ருவ ஸ்ரீநிவாசர்,


2. போக ஸ்ரீநிவாசர்,


3. கொலுவு ஸ்ரீநிவாசர்,


4. உக்ர ஸ்ரீ நிவாசர்,


5. மலையப்பர்


என ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர். இவர்களை பஞ்சபேரர்கள் என்று அழைக்கின்றனர்.


1. த்ருவ ஸ்ரீநிவாச மூர்த்தி :


இவர்தான் மூலவர். ஆனந்த நிலையத்தில் சுயம்புவாக எழுந்தவர். சாளக்ராமத்தால் ஆனவர். இவரை ஸ்தானக மூர்த்தி, த்ருவமூர்த்தி, த்ருவபேரம், கோவிந்தன், ஸ்ரீவாரி, பாலாஜி என்றெல்லாம் அழைப்பர். சுமார் பத்தடி உயரம் கொண்ட பரந்தாமன். இந்த மூல மூர்த்தியை ஏகாந்த சேவைக்குப் பிறகு பிரம்மா முதலான எல்லா தேவர்களும் வந்து வணங்குவதாக ஐதீகம்.


2. போக ஸ்ரீநிவாச மூர்த்தி :


இவர், கருவறையில் மூல மூர்த்தியுடன் இருப்பவர். கௌதுக பேரர், மணவாளப் பெருமாள் என்றும் இவருக்குப் பெயர். கோயிலில் இருந்து எப்போதும் வெளியே வராத இவருக்கு தினமும் ஆகாச கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. புதன்கிழமை தோறும் காலை இவருக்கு தங்கவாசல் முன்பு ஸஹஸ்ரக லசாபிஷேகம் நடைபெறுகிறது. அச்சமயம் மட்டும் இவரை தரிசிக்கலாம். எட்டு அங்குல உயரத்தில் வெள்ளியினாலான பெருமாள் இவர்.


3. கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி :


கொலுவு என்றால் ஆஸ்தானம் என்றுபொருள். தினமும் கருவறையில் தோமாலை சேவை ஆனதும் ஸ்நபன மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் எழுந்தருளும் இவரிடம் அன்றைய பஞ்சாங்க விஷயங்கள், கோயில் வரவு&செலவு, நித்திய அன்னதான நன்கொடையாளர் விவரங்கள், உற்சவ விஷயங்கள் ஆகியவற்றை ஆலய பட்டர் அறிவிப்பார். இந்நிகழ்வில் ஆலய பட்டர்கள், ஆலய ஊழியர்கள் தவிர வேறுயாரும் கலந்து கொள்ள முடியாது.


4. உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி :


இவருக்கு வேங்கடத்து உறைவார், ஸ்நபன பேரர் என்றும் பெயர்கள் உண்டு. இவரே பதினான்காம் நூற்றாண்டு வரை உற்சவமூர்த்தியாக இருந்தவர். இவர் மீது சூரிய ஒளி பட்டால் உக்ரமாகி விடுவார். ஒரு முறை அவ்வாறு ஏற்பட, பல கெடுதல்கள் நிகழ்ந்துவிட்டன. எனவேதான் புதிதாக மலையப்பசுவாமியை எழுந்தருளச் செய்தனர். உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் கைசிக துவாதசி அன்று மட்டும் விடியற்காலை மூன்று மணி அளவில் எழுந்தருளி பக்தர்களுக்கு கருணை புரிகிறார்.


5. உற்சவ ஸ்ரீநிவாசர் எனும் மலையப்ப சுவாமி :


இவருக்கு மலை குனிய நின்ற பெருமாள், உத்ஸவ பேரர், மலையப்பர் எனும் பெயர்களும் உண்டு. நெற்றி யில் பதிக்கப்பட்ட திருச்சுட்டியில் கஸ்தூரி திலகம் திகழக் காட்சியளிப்பவர் மலையப்பர்.


ஓம் நமோ நாராயணா....



Thursday, August 29, 2024

10,11 மற்றும் 12 துணைத்தேர்வு: மறுகூட்டல், மறுமதிப்பீடு பட்டியல் நாளை வெளியீடு !!!

 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள் எழுதி, மறுகூட்டல், மறுமதிப்பீடு விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தனித்தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.


இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை: நடைபெற்று முடிந்த ஜூன் / ஜூலை 2024, மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) / மேல்நிலை முதலாம் ஆண்டு(+1) / பத்தாம் வகுப்பு (SSLC) துணைத்தேர்வுகள் எழுதி, மறுகூட்டல் (Re-total) மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள (Revaluation) தனித்தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் (Notification பகுதியில்) 30.08.2024 (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது

Wednesday, August 28, 2024

Paper News With Judgement Copy!!!

 ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் பெறுவதற்கு (BRTE to BT Conversion) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!!!

Download 


Saturday, August 24, 2024

TN CM TROPHY 2024 DATE EXTENDED UPTO 02/09/2024

🇮🇳  *_அண்மை செய்தி_* 📡

🔹🔸 *தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்ய 02.09.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது..

 Click Here For More Details



EMIS பணியினை ஆசிரியரல்லாத பணியாளர்களைக் கொண்டு மட்டுமே முடிக்க வேண்டும் - JD(V) Instructions!!!

 முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் ( மேல்நிலை ) மற்றும் நேர்முக உதவியாளர் ( இடைநிலை ) இணையவழிக் கூட்ட குறிப்புகள் :


 முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் ( மேல்நிலை மற்றும் நேர்முக உதவியாளர் ( இடைநிலை ) இணையவழிக் கூட்டம் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ( தொழிற்கல்வி ) அவர்களால் 23.08.2024 மாலை 5.00 மணிக்கு நடத்தப்பெற்றது . கூட்டத்தின் போது கீழ்க்காண் விவரங்கள் குறித்து ஆலோசணையும் , அறிவுரைகளும் இணை இயக்குநர் அவர்களால் வழங்கப்பட்டது.


PA TO CEOs 23.08.24 MEETING MINUTES

Download here

Wednesday, August 21, 2024

TNPSC DEPARTMENT EXAM EXCEPTION !!!

 மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அறிவிப்புகள் - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத் தேர்வுகளை முதல் மூன்று முறை எழுதியும் தேர்ச்சி பெறாத 50 வயதினை கடந்த மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்தல் வெளியிடப்படுகிறது.

 G.O (Ms) No.11, Dt. 13.08.2024 - Download here

FLASH NEWS

 Download 



HSHM - PG CASE- UPDATE

வழக்கு நாளை ( 22-8-24- வியாழன் ) விசாரணைக்கு வருகிறது.



Friday, August 16, 2024

Career Guidance Aug 24 - Assessment Schedule!!!

 தலைமையாசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்.


🏝️ அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு 19.08.2024 முதல் 23.08.2024 வரை உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் நடைபெறுகிறது.


🏝️ உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீட்டிற்கு உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் இணைய வசதி உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை செய்து முடித்தல் வேண்டும்.


🏝️19.08.2024 & 20.08.2024- 9 ஆம் வகுப்பு 

20.08.2024 & 21.08.2024 - 10 ஆம் வகுப்பு 

21.08.2024 & 22.08.2024 - 11 ஆம் வகுப்பு 

22.08.2024 & 23.08.2024 - 12 ஆம் வகுப்பு 


Steps.

Server : http://locsrv.in:8080

Step1. Log in by school id or HM id.


Step2. Click manage and click update credentials and give update 


Step3. Click manage and click Fetch events and give update.


Step 4. Log in by class teacher id or school id.


Step 5. Click Download QP


Step 6. Log in by students id in other thin clients and start assessment.


Step 7. Log in by headmasters/ school id in server system and click manage and give send response.




Wednesday, August 14, 2024

Teachers Award 2024 Instructions!!!

 


கலைத்திருவிழா 2024 - Important Dates!!!


பள்ளி அளவிலான போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கலைத்திருவிழா 2024-25 போட்டிகளின் மையக்கருத்து

 சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு 


இந்த மையக் கருத்தின் அடிப்படையிலேயே போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

 போட்டி நடைபெறும் நாட்கள்

 22.08.2024 முதல் 30.08.2024 வரை

அரசுப் பள்ளிகளில் 1 - 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் மற்றும்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 - 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும்.

கலைத் திருவிழா போட்டிகள் *ஐந்து பிரிவுகளில்* நடைபெறும்.


பிரிவு 1️⃣

1 மற்றும் 2ஆம் வகுப்பு


பிரிவு 2️⃣

3 முதல் 5 ஆம் வகுப்பு வரை 


பிரிவு 3️⃣ 

6 முதல் 8 ஆம் வகுப்பு வரை 


பிரிவு 4️⃣ 

9 மற்றும் 10 ஆம் வகுப்பு 


பிரிவு 5️⃣ 

11 மற்றும் 12 ஆம் வகுப்பு


 *சில வழிகாட்டுதல்கள்* :


🔵 அனைத்து பள்ளிகளும் கலைத்திருவிழா போட்டிகளில் பெரும்பான்மையான மாணவர்களை பங்கு பெறச் செய்தல் வேண்டும்.


🔵 போட்டிகளை நடத்துவதற்கு பள்ளி அளவில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கலை ஆர்வலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அமைப்பு குழுவினை உருவாக்க வேண்டும்.


🔵 பள்ளி அளவில் நடைபெறும் கலைத் திருவிழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், SMC உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளின் முழு ஈடுபட்டையும் ஒத்துழைப்பையும் பெறுதல் மிகவும் முக்கியம்.


🔵 பள்ளி அளவிலான போட்டிகளில் நடுவர்களாக பணிபுரிய வல்லுநர்களை கண்டறிந்து அமைப்பு குழுவினரிடம் கலந்து ஆலோசித்து நடுவர் பட்டியலை தயார் செய்ய வேண்டும். அதற்கான முன் அனுமதியை வட்டாரக் கல்வி அலுவலர்களிடமிருந்து பள்ளித் தலைமை ஆசிரியர் பெற வேண்டும். இந்த பட்டியலில் இருந்து தான் நடுவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.


🔵 பள்ளி அளவிலான அனைத்து போட்டிகளும் "சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு" என்ற மையக் கருத்தின் அடிப்படையிலேயே குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.


🔵 ஒருவர் எவையேனும் மூன்று தனிப் போட்டிகள் மற்றும் இரண்டு குழுப்போட்டிகளில் மட்டுமே பங்கு பெற முடியும்.


 EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல்


🔴 போட்டிகளில் பங்குபெறும் மாணவர்களின் விவரங்களை சேகரித்து பள்ளி அளவில் போட்டி வாரியாக போட்டிகள் நடைபெறுவதற்கு முன்பாகவே EMIS - ல் பதிவு செய்ய வேண்டும்

(19.08.2024 - 21.08.2024)


🔴 ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை போட்டி வாரியாக EMIS -ல் பதிவு செய்ய வேண்டும். (03.09.2024)


🔴 பள்ளி அளவில் முதலிடத்தில் வெற்றி பெறும் தனிநபர்/ குழு மட்டுமே வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற 

தகுதி பெறுவர்.



🟢 *சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களை (CWSN)* பெரும்பான்மையான அளவில் போட்டிகளில் பங்கு பெறுவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.


🟢 சில வகை மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு ( *ID, ASD, CP)* மட்டும் ஒரு சில போட்டிகள் தனியாக நடைபெறும். 


🟢 இந்த போட்டிகளை சார்ந்த பள்ளிக்கான சிறப்பு பயிற்றுநர்களுடன் இணைந்து நடத்த வேண்டும்.


 🟢 அட்டவணையில் குறிப்பிடப்படாத குறைபாடு உள்ள மாணவர்களை ஊக்குவித்து மற்ற மாணவர்களுடன் இணைந்து அனைத்து போட்டிகளிலும் பங்கு பெற செய்ய வேண்டும்.


🟢 போட்டிகளில் பங்கேற்கும் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களின் படைப்புகளின் புகைப்படம் மற்றும் காணொளி சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் EMIS -ல் கட்டாயமாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.


🟦 இந்த நல்லதொரு வாய்ப்பினை பயன்படுத்தி அந்த பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களையும் அனைத்து போட்டிகளிலும் பங்கு பெறச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.