Thursday, June 18, 2026

திருவள்ளூர் மாவட்டம் 18.06.2026

 ABRSM - உடன் இணைந்த தேசிய ஆசிரியர் சங்கம் (தமிழ்நாடு) - ன் சார்பாக இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பாரத பிரதமர் , மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனைவருக்கும் கட்டாய உரிமைச் சட்டம் (RTE) கொண்டு வந்த நாளிற்கு முன்பு பணியில் சேர்ந்த அனைத்து மூத்த பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை கடிதம் *திருவள்ளூர் மாவட்டம் சார்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கொடுக்கப்பட்டது.*


இந்நிகழ்வில் மாநிலத் தலைவர் திரு. M.K. திரிலோக சந்திரன், மாநில இணைச் செயலாளர் திரு. T. நீலமேகன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் திரு. K. கிருஷ்ணகுமார், மாவட்ட பொருளாளர் திரு. M.S. பார்த்தீபன், திருவள்ளூர் கல்வி மாவட்ட தலைவர் T. சுப்பிரமணி, திருவள்ளூர் கல்வி மாவட்ட செயலாளர் திரு M. ஆனந்த்பாபு, திருவள்ளூர் கல்வி மாவட்ட துணை செயலாளர் S.M. ஜெயப்பிரகாஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் 

திரு. M. சதீஷ், கோட்ட, வட்ட பொறுப்பாளர்கள் மற்றும் திரளான தேசிய ஆசிரிய சங்க உறுப்பினர்களான ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.


முன்னதாக ஆட்சியர் அலுவலக வாயிலில் தங்களின் கோரிக்கைகாக பேரணி நடத்தி கோஷம் போடப்பட்டது.








No comments:

Post a Comment