ஈரோடு மாவட்டம் -இன்று 18-06-2026 (வியாழக்கிழமை) 2012க்கு முன் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு TET ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்க
நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டி மாண்புமிகு பிரதமர், மத்திய கல்வி அமைச்சர், ஆகியோருக்கும் மத்திய அரசை சட்ட திருத்தம் செய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி தமிழக முதல்வருக்கும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் வாயிலாக மனு அளிக்க தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு ஈரோடு மாவட்டக் கிளை சார்பாக கடிதம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தே.ஆ.ச மாநிலப் பொதுச் செயலாளர் திரு மு.கந்தசாமி, மாநிலப் பொருளாளர் திரு இரா.திருஞானகுகன், மாவட்டத் தலைவர் திரு மு.சண்முகராஜூலு,மாவட்டச் செயலாளர் திரு து. ஶ்ரீதரன், மாவட்டப் பொருளாளர் திரு சு.ர.சுரேஷ்குமார், பள்ளிகள் ஒருங்கிணைப்பாளர் திரு மு.சந்திரசேகர், ஈரோடு ஒன்றிய செயலாளர் திரு ப.மயில்சாமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment