குருவணக்கம் & ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா!!!
திருவள்ளூர் மாவட்டத் தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில், இன்று (12 - 8 - 2026) மாலை திருவள்ளூர் DRBCCC இந்து மேனிலைப்பள்ளியில் குருவணக்கம் & ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கான பணிநிறைவுப் பாராட்டு விழா மிகச் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
கலைமகள் வணக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்வில், திருவள்ளூர் மாவட்டத் மாவட்டத் தலைவர் முனைவர் வெ.பரமசிவம் அவர்கள் வரவேற்புரையாற்ற, மாநில இணைச் செயலாளர் திரு. தி. நீலமேகன் தலைமையுரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாகப் பேரம்பாக்கம் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு. வா.பாலமுருகன், திருவள்ளூர் DRBCC இந்து மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. G. V. ராமமோகன், கிளாம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. S.பாலாஜி ஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், கனகம்மாசத்திரம் அரசு மேனிலைப் பள்ளியின் முதுநிலை வணிகவியல் ஆசிரியர் திரு. ச. தி. ஆனந்தன் சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில், ஓய்வுபெற்ற ஆசிரியர்களான இரா.கி. பேட்டை அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு.கோ.சுந்தர் அவர்களுக்கும் கொட்டாமேடு அரசு உயர்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திரு. ச.தட்சணாமூர்த்தி அவர்களுக்கும் தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில், பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசும் கேடயமும் வழங்கப்பட்டன.
ஏற்புரை வழங்கிய ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் இருவரும் சங்கத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தனர்.
இவ்விழாவில், திருவள்ளூர் கல்வி மாவட்டத் தலைவர் திரு. ஸ்ரீ.சுப்பிரமணி அவர்களும் கல்வி மாவட்டச் செயலர் திரு. மு.ஆனந்தபாபு அவர்களும் ஊடகப்பிரிவுச் செயலர் திரு. நவீன் குமார் அவர்களும் ஊடகப்பிரிவின் உதவிச் செயலர் திரு. கா. ரகுபதி அவர்களும் திருத்தணி கல்வி மாவட்டப் பொறுப்பாளர்களும் திருவள்ளூர் மாவட்ட உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோரும் கலந்து கொண்டனர்.
மாநிலச் செயற்குழு உறுப்பினர் திரு. ம. சதீஷ்குமார் இந்நிகழ்வை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தார். திருவள்ளூர் மாவட்டத் தேசிய ஆசிரியர் சங்கத்தின் பொருளாளர் திரு. மே.சு. பார்த்திபன் நன்றியுரை வழங்கினார். இறுதியாக, நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.




No comments:
Post a Comment