Saturday, August 1, 2026

பவானி சாகர் வட்டார செய்திகள்!!!

 பவானி சாகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழ்ச்செல்வி அவர்களுடன் தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு!!!


இன்று (1-8-26) பவானி சாகர் தொகுதி எம்.எல்.ஏ. திருமதி தமிழ்ச்செல்வி அவர்களை 

மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி , மாவட்ட இணைச்செயலாளர் மனோகரன், சத்தி வட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், தாளவாடி ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தினர் 

 தாளவாடி வட்டார ஆசிரியர்களின் சான்றிதழ் மதிப்பீடு செய்ய அரசாணை வழங்கிட வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் அனைவருக்கும் 60 என நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்.

 2010 க்கு முன் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்களிக்க மத்திய அரசு வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.


மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கேரளா அரசைப் போன்று 20 அரை நாட்கள் சிறப்பு அனுமதி வழங்க வேண்டும்.

உள்ளிட்ட பல கோரிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும் என கோரப்பட்டது.




No comments:

Post a Comment