Saturday, October 23, 2021

தருமபுரி மாவட்ட செய்திகள்

 இன்று 22/10/2021 தருமபுரியில் தேசிய ஆசிரியர் சங்க மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் இனிதே நடைப்பெற்றது.
 

        மாவட்டதலைவர் திரு. சி.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயளாளர் திரு. காமராஜ் மற்றும்
மாவட்டப் பொருளாளர் திரு.R. இரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டதில் சிறப்பு அழைப்பாளராக இலளிகம் அரசு மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு. சீனிவாசன் அய்யா கலந்துக்கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.


சங்க மாநில துணைத்தலைவர் திரு. முருகன் அய்யா அவர்கள் கலந்துகொண்டு ஆசிரியர் நலன்,பணிமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகள்,பழைய ஓய்வூதியத் திட்டம், அகவிலைப்படி உயர்வு,ஈட்டிய விடுப்பு சரண்டருக்கான அனுமதி போன்ற பல்வேறு ஆசிரியர் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுருத்தி விளக்கிப் பேசினார்.

        கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


தீர்மானம் :1


தற்போது பேசப்பட்டுவரும் ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகளில் ஒன்றான பூஜ்ஜிய கலந்தாய்வு மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தலுக்கான பல்வேறு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் பூஜ்ஜிய கலந்தாய்வு ஆசிரியர்களுக்கு சாத்தியமற்றதாகக் கருதி ஏற்கனவே பயன்படுத்திய விதிமுறைப்படியே பணிமாறுதல் கலந்தாய்வு நடத்த இச்சங்கம் அரசைக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் :2

                   தற்போதிய அரசு தனது தேர்தல் அறிக்கையில் தெறிவித்துள்ளவாறு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பழைய பென்சன் திட்டம் உடனடியாக காலதாமதமின்றி செயல்படுத்தவேண்டும்.


தீர்மானம் :3

         மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி உள்ளிட்ட அனைத்துவிதமான படிகளும் தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு  காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்.


தீர்மானம் :4

முதுகலையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் அதிகளவு எண்ணிக்கையிலான ஆசிரியர்களை கலந்துகொள்ளச்செய்து பதவி உயர்வு பணியிடங்கள்(பதவி உயர்வுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள்) அனைத்தும் முழுமையாக நிரப்ப ஒவ்வொரு வருடமும் விடுபடாமல் கலந்தாய்வு நடத்தவேண்டும்.


தீர்மானம் : 5

பட்டதாரி ஆசிரியர் நிலையில் உள்ள முதன்மைப்பாடத்தை ( subject)தவிர்த்து மற்றப்பாடத்தில் முதுகலையாசிரியர் பாடமாக உள்ளவற்றிற்கு பதவி உயர்வுக்கு Cross Major அனுமதிக்கவேண்டும்.
 
தீர்மானம் :6

தற்போது 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ள தமிழக அரசின்  இல்லம் தேடிக்கல்வி திட்டம் இச்சங்கத்தால் வரவேற்கப்படுகிறது. மேலும் இத்திட்டம் செயல்படுத்தும்போது மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு குறைபாடுகள் ஏதும் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது. 

போன்ற ஆசிரியர்,மாணவர், சமுதாய நலன் சார்ந்த முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இறுதியில் கல்விமாவட்டத் தலைவரும் தருமபுரி மாவட்டத் துணைத்தலைவருமான திரு. மணிவன்னன் அவர்களின் நன்றி உரையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.


 

No comments:

Post a Comment