Friday, January 23, 2026

TRB ANNUAL PLANNNER 2026!!!

 


பொதுத் தேர்வு முகப்பு தாட்கள் (Top Sheets) தைக்கும் பணி தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள்!!!

 Download here

THIRAN ASSESMENT JAN 26!!!

 DOWNLOAD 

ஜனவரி 2026 மாத சிறார் திரைப்படம் `அயலி - பாகம் 1` திரையிடல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!

 DOWNLOAD 

கருணை அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள ஆரம்ப நிலை பணிகளில் 25 சதவீதமாக இருந்த ஒதுக்கீட்டினை ஐந்து சதவீதமாக குறைத்ததை பரிசீலனை செய்து மீண்டும் 25 சதவீதமாக உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்ததை ஏற்க இயலாது என தெரிவித்து வழங்கப்பட்டுள்ள கடிதம்.

 DOWNLOAD 

Thursday, January 22, 2026

TRB PG FINAL SELECTION LIST!!!

 LINK 

TAPS திட்டம் - PAPER NEWS

 


Thanks To தினமணி


உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்-முரண்பாடுகள் - Dinamani 

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஒட்டுமொத்த ஓய்வூதியம் முழுமையும் அரசின் பங்களிப்பாக மட்டுமே இருந்தது. இப்போது அறிவித்திருக்கும் திட்டத்தில் 10 % ஊழியா்களிடம் இருந்து எடுக்கப்படுகிறது. அப்படி இருக்கையில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம், பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு நிகரானது அல்ல.

புதிய பொருளாதாரக் கொள்கை வந்த பிறகு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை முடக்கி விட்டு, புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று எதிா்ப்பும், ஆதரவும் மாறி மாறி ஏற்பட்டது. இவற்றில் தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்தி புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்தது.

23 ஆண்டுகளாக தொடா் வலியுறுத்துதல் போராட்டத்தின் விளைவாக பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குப் பதிலாக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைத் தமிழக அரசு தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டம் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இணையானதுதானா, அரசு ஊழியா்களுக்கு உண்மையிலேயே பலன் தருமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஒட்டுமொத்த ஓய்வூதியம் முழுமையும் அரசின் பங்களிப்பாக மட்டுமே இருந்தது. அதாவது, அரசு ஊழியா்களின் ஊதியத்தில் எந்தத் தொகையும் பிடித்தம் செய்யப்பட மாட்டாது. ஆனால், இப்போது அறிவித்திருக்கும் திட்டத்தில் 10 % ஊழியா்களிடம் இருந்து எடுக்கப்படுகிறது.

அப்படி இருக்கையில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம், பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு நிகரானது அல்ல. அதாவது, ஏப்ரல் 2003-க்குப் பிறகு கொண்டுவரப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என்பது 14 %ஊழியா்களின் அடிப்படை ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கு ஈடான தொகையை அரசு செலுத்தும். ஓய்வு பெறும்போது அப்படிச் சேரும் தொகையைக் கொண்டு ஒரே கட்டமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்தத் திட்டத்தின்படி, ஓய்வூதியம் பெறுவதில் பல ஆண்டுகளாக பல்வேறு குழப்பங்கள் நிலவின. ஏனெனில், அரசின் பங்களிப்புத் தொகை செலுத்தப்பட்ட விவரத்தை ஊழியா்களால் தெரிந்து கொள்ள இயலாத நிலையே நீடித்தது.

நிலைமை இவ்வாறு இருக்கையில், பல்வேறு துறை அரசு ஊழியா்களின் போராட்டத்தை நிறுத்தவும், தோ்தலை முன்வைத்தும் திமுக அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. பல சலுகைகள் இதில் இல்லை; திரும்பப் பெற முடியாத பரிமாற்றம் போன்ற சலுகைகள் இவற்றில் இல்லை. ஆகவே, ஏமாற்றம் அளிக்கிறது.

குறைவாக ஊதியம் பெறும் தொகுப்பூதிய ஊழியா்கள் 20, 30 ஆண்டுகள் வேலை செய்துவிட்டு ரூ. 2,000 ஓய்வூதியம் பெறுகிறாா்கள். மத்திய அரசு குறைந்தபட்ச ஓய்வூதியமே ரூ. 7 ஆயிரம் என்று தீா்மானித்திருக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு அவா்களையும் இந்தத் திட்டத்தில் கொண்டு வந்து நியாயமான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது அரசு கடும் கடன் நெருக்கடியில் இருந்துவரும் சூழ்நிலையில், இந்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு ரூ. 13 ஆயிரம் கோடி செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசு உள்நாட்டு உற்பத்தியில் 8.6% வளா்ச்சி அடைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. பொருளாதாரத்தில் அகில இந்திய அளவில் 2-ஆவது மாநிலமாக தமிழகம் வளா்ந்திருக்கிறது. ஆகவே, அரசு ஊழியா்களுக்கு ஓய்வூதியம் தருவது கூடுதல் சுமையல்ல. ஏனெனில், சுமாா் 35 ஆண்டுகள் அரசில் பணியாற்றி விட்டு, வயது முதிா்ந்த காலத்தில் தங்கள் எஞ்சிய வாழ்க்கையை நகா்த்துவதற்கு இந்த ஓய்வூதியம் பெரும் பயனாகவும், ஊழியா்களின் நிம்மதியான வாழ்க்கைக்கும் காரணமாக அமைந்துள்ளது.

ஆகவே, இதைச் செலவினமாகக் கருதக் கூடாது என்கிற கருத்தும் நிலவுகிறது. ஆகவேதான், ஊழியா்களின் பங்களிப்புத் தொகையைத் தவிா்க்கவும், திரும்பப் பெற முடியாத பரிமாற்றம் இவற்றில் இருந்து விலக்களிக்கவும், குறைந்த ஊதியம் பெறும் ஊழியா்களுக்கு தோராயமான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை அரசு ஊழியா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 23 ஆண்டுகளில் ஓய்வு பெற்றவா்கள், பணியின்போது உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சுமாா் 54 ஆயிரம். இதில் 48 ஆயிரம் பேருக்கு மேல் ‘ஒன் டைம் செட்டில்மென்ட்’ பெற்று விட்டாா்கள். மிஞ்சி இருக்கிற கொஞ்சம் போ் மட்டும் பிற்காலத்தில் நியாயமான ஓய்வூதியம் கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பில் செட்டில்மென்ட் வாங்காமல் காத்திருக்கிறாா்கள்.

தற்போது அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில், ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச பணிக்காலமாக 10 ஆண்டுகளும், முழுப் பணிக்காலமாக 30 ஆண்டுகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதித் காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அரசு ஊழியா்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்ட காலத்தில் பணியில் சோ்ந்து ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்ற 48 ஆயிரம் பேருக்கும் சிறப்புக் கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது,. இவற்றில் ‘ஒன் டைம் செட்டில்மென்ட்’ மூலமாக பணம் கைக்கு வந்தாலும் அவை 5, 6 மாதங்களிலேயே செலவாவதற்கு வாய்ப்பு உள்ளது. ஏனெனில், அதற்கென்று ஒரு தேவை உருவாகி விடும். மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்கும் போது ஊழியா்களுடைய பங்களிப்பு 10 % என்பதும் தொடா்வதும், பணிக்காலத்தை நிறைவு செய்யாத ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் என்பது முரண்பாடுகளாகும். அவற்றுக்கு முறையான தெளிவான அறிவிப்புகள் இடம்பெறவில்லை.

தமிழ்நாட்டில் சுமாா் 9 லட்சம் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பணியாற்றி வரும் நிலையில், இதில் பலருக்கும் பழைய ஓய்வூதியம் கிடையாது. குறிப்பாகச் சொன்னால் 1.4.2003 தேதிக்கு முன்பு வரை அரசுப் பணியில் சோ்ந்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு பழைய ஒய்வூதியத் திட்டம் இருக்கிறது. அதன் பிறகு, பணியில் சேரும் ஊழியா்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. இதற்கிடையே, ஒருங்கிணைந்த ஓய்வூதியம் என்கிற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம், புதிய ஓய்வூதியத் திட்டம், மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய வேறுபாடுகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டம் மத்திய அரசில் 2003-க்கு முன்பாக பணியில் சோ்ந்த அரசு ஊழியா்களுக்கு ஓய்வூதியத் தொகை கடைசி மாத ஊதியத்தில் 50 % உறுதியாகக் கிடைக்கும். ஊழியா்கள் தங்கள் ஊதியத்தில் இருந்து எந்தத் தொகையும் பங்களிப்பாக செலுத்தத் தேவையில்லை. முழுச் செலவையும் அரசே ஏற்கும். இதர பலன்கள், அகவிலைப்படி (டி.ஏ) உயா்வு உண்டு. குடும்ப ஓய்வூதியம் முழுமையாகக் கிடைக்கும். இது அரசுக்கு மிகப் பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு நிலவியது.

2003-க்குப் பிறகு பணியில் சோ்ந்த அரசு ஊழியா்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஓய்வூதியத் தொகை முதலீடு சாா்ந்தது. நாம் முதலீடு செய்த தொகை மற்றும் சந்தை லாபத்தைப் பொருத்தே அமையும். ஓய்வூதியம் உறுதி கிடையாது. ஊழியா்கள் ஊதியத்தில் 10 % பிடித்தம் செய்யப்படுகிறது. அரசு 14% பங்களிப்பை வழங்குகிறது. ஓய்வு பெறும் போது 60 %தொகையை மொத்தமாகப் பெற்றுக் கொள்ளலாம். மீதமுள்ள 40% தொகுப்பு நிதியாக வைக்கப்பட்டு அதிலிருந்து மாத ஊதியம் (ஆன்யுட்டி) வழங்கப்படும். அகவிலைப்படி உயா்வு கிடையாது. பங்குச்சந்தை அபாயமும் உள்ளது. ஆகவேதான், இது அரசு ஊழியா்களுக்கு விருப்பம் இல்லாத ஓய்வூதியமாக அமைந்து விட்டது.

‘ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் 2024-2025’ என ஊழியா்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. உறுதியான குறைந்தபட்ச ஓய்வூதியத் திட்டம் மற்றும் முதலீடு கலந்த பலன்கள், ஊழியா் பங்களிப்பு ஆகியவை உள்ளன. அரசு தனது பங்களிப்பை வழங்கும். இதன் வாயிலாக குடும்ப ஓய்வூதியம் கிடைக்கிறது. அகவிலைப்படி உயா்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது அரசுக்கும், ஊழியா்களுக்கும் இடையிலான ஒரு நடுத்தர, சமரச திட்டமாகும் என்று கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு தனது தோ்தல் வாக்குறுதியாக வழங்கி உள்ள நிலையிலும், அதைச் செயல்படுத்துவதற்கு அரசு தயாராக இல்லை. ஹிமாசல பிரதேசத்தில் பழைய ஓய்வூதியத் திட்டமே அமலில் இருக்கிறது. முதல்வா் சுக்வீந்தா் சிங் சுக்கு தலைமையிலான காங்கிரஸ் அரசு தனது தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 2023 ஏப்ரல் 1 முதல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளது. இதன்மூலம், 1.36 லட்சம் அரசு ஊழியா்கள் பலன் அடைந்து வருகிறாா்கள்.

2003 மே 15-க்குப் பிறகு, பணியில் சோ்ந்து புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்த ஊழியா்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறிக் கொள்ளலாம் என்ற வசதியையும் அங்கு ஏற்படுத்தியிருக்கிறாா்கள். ஓய்வு பெற்ற பிறகு ஊழியா்கள் தங்களின் கடைசி ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறலாம். சமீபத்திய தகவலின்படி, மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறாமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடா்ந்து செயல்படுத்த ஹிமாசல அரசு உறுதியாக உள்ளது. ஊழியா்களின் சமூகப் பாதுகாப்பைக் கருதி இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஹிமாசல பிரதேச அரசு சொல்கிறது.

தற்போதைய தமிழ்நாடு அரசு பல்வேறு நிலைப்பாடுகளில் மத்திய அரசை எதிா்த்துச் செயல்படுகிறது; ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற்றாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த தமிழக அரசு ஏன் தயங்குகிறது என்கிற கேள்வி எழுகிறது.

கட்டுரையாளா்:

முன்னாள் அமைச்சா்

மாதிரிப் பள்ளிகளில் (Model Schools) மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!!

 CLICK HERE TO DOWNLOAD

Tuesday, January 20, 2026

TMCMTSE - MATHS STUDY MATERIAL TM!!!

 CLICK HERE TO DOWNLOAD 

TO ADVERTISE IN THIS WEBSITE CALL
7305518764



தொடக்கக் கல்வித் துறையில் பொதுத் தகவல் அலுவலர் / மேல்முறையீட்டு அலுவலர் நியமனம் செய்து தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!

 தொடக்கக் கல்வித் துறையில் பொதுத் தகவல்  அலுவலர் / மேல்முறையீட்டு அலுவலர் நியமனம் செய்து தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

DEE - RTI Circular - Download here

EXPRESS PAY ORDER 20.01.2026!!!

பல்வேறு தற்காலிகப் பணியிடங்களுக்கு ஊதிய விரைவாணை (Express Pay Order)  வெளியீடு!

Pay Express Order - Download here

GPF மீதான வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!!!

 GPF மீதான வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.13 - GPF Rate of Interest.pdf


Saturday, January 17, 2026

SMC - முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட குழு A-யை சேர்ந்த 1909 தலைமையாசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி அறிவிப்பு!!!

 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பள்ளி மேலாண்மைக் குழு முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட குழு A-யை சேர்ந்த 1909 தலைமையாசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி பள்ளிகளின் வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தேச வழங்குதல் செலவினங்களுக்கு நிதி விடுவித்தல் அனுமதி கோருதல் சார்பு

Proceedings - SMC-Part A -District level HMs Training-38 Districts -reg


Download here

Paper News

 FOR MORE DETAILS - CLICK HERE 


Tuesday, January 13, 2026

SSTA போராட்டம் DAS TN ஆதரவு!!!

 


இன்று 13.01.2026 தர்மபுரி - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சம வேலைக்கு சம ஊதியம் வேண்டி தலைநகர் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து CPS இயக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.