Pages

Tuesday, December 20, 2022

தருமபுரி மாவட்டக் கூட்டம்


வருகிற டிசம்பர் 27 , 2022 அன்று வள்ளுவர் கோட்டம், சென்னையில் நமது சங்கத்தின் சார்பில் நடைபெறும்  தமிழக அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக தருமபுரியில் இன்று நடைபெற்ற  மாதாந்திர கூட்டத்தில் நமது தருமபுரி மாவட்டம்  சார்பாக திரளான ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் படி பொறுப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஆசிரியரையும் தொடர்பு கொண்டு பேசி சென்னைக்கு அழைத்து வந்து 

தருமபுரி மாவட்டத்தில் நமது சங்கம் 

 தொடர்ந்து வளர்ந்து வருகிறது; 

 ஆசிரியர், 

 மாணவர்கள், 

 தேசத்தின்  நலனில் என்றென்றும் அக்கறை கொண்டு உள்ளது

என்று நிரூபிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 எனவே கலந்து கொள்ளும் ஆசிரியர் பெருமக்களின் பெயர்களை பொறுப்பாளர்கள் பதிந்து உறுதி செய்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 இப்படிக்கு

 M.காமராஜ்

 மாவட்ட தலைவர் 

தேசிய ஆசிரியர் சங்கம், தருமபுரி.



No comments:

Post a Comment