Pages

Tuesday, November 2, 2021

கவின்மிகு மத்தாப்புக்களையும் பட்டாசுகளையும் கொளுத்தி தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் !!!



       






தீபாவளி வந்தாலே ஒரு கூட்டம் கிளம்பிவிடும். மாசு மாசு என சில மாசு கூட்டம். இவை காசுக்காக வந்த மாசு கூட்டமா இல்லை மாசுகளால் வந்த காசு கூட்டமா என நானறியேன் பராபரமே!

       இந்நிலையில் வெடிபற்றிய அறிவியலை வெடிப்பதும் நம் கடமை.வெடியின் உற்பத்தி மூலப்பொருட்கள் பழைய காகிதங்கள், கரி(CHARCOAL), பொட்டாசியம் நைட்ரேட் (KNO3 / SALTPETER), கந்தகம் (SULPHUR) பாஸ்பரஸ் ஆகியன என்பதை அனைத்து குப்பைகளும் அறியும்.

1.   பழைய காகிதங்கள் மட்கும் குப்பைகள்.மண்ணுக்கு இயற்கை உரம். பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் எவருக்கும் வெடிக்காதே எனக்கூற உரிமையில்லை.

2.   கரி - உலகே ஒப்புகொண்டிருக்கும் இயற்கை உரம். மிக சிறந்த சுத்திகரிப்பான். நல்ல கிருமிநாசினி. பெட்ரோல் டீசலை பயன்படுத்தும்எவருக்கும் வெடிக்காதே எனக்கூற உரிமையில்லை

3.   நைட்ரஜனும்(தழைசத்து) பொட்டாஷ் (மணிசத்து) பாஸ்பரஸ் (சாம்பல் சத்து) கந்தகமும்(புரத உற்பத்தி தூண்டல்) இல்லாமல் எந்த தாவரமும் வளராது. செயற்கை உரம் மற்றும் களை (ம) பூச்சிகொல்லிகள் மற்றும் அனைத்து அறிவியல் என்ற பெயரில் வீட்டு உபயோக வேதிபொருட்களை பயன்படுத்தும் எவருக்கும் வெடிக்காதே எனக்கூற உரிமையில்லை.

மேற்படி சத்துக்களை நேரடியாக பயன்படுத்த முடியாதென்பதும் தெரியும்.

எனவேதான்  மேகமும் மழையும் சுற்றி  திரியும்  ஐப்பசி மாதம் தீபாவளி

திருநாளில் நாம் வெடிகளை பயன்படுத்தினால் காகிதமும் கரியும் நீரோடு

சேர்ந்து மக்கி மண்வளமாகும். பிற எரிபொருள்கள் எரிந்து வான்சென்று

புகையும் நீரும் சேர்ந்து மண்ணுக்கு பால்விதை முற்ற தேவையான மணி

சத்தாகவும் அடுத்த பயிர் சாகுபடிக்கான  தழை சத்தாகவும் வந்துசேரும்.

சிலவேதிமாற்றங்கள் பூச்சிகொல்லியாக பயிரையும் நம்மையும் காக்கும்.


       உலகின் முதல் உயரிய அறிவியல் தத்துவம் இந்து மதம் !

            பொய் அறிவியல் இதனருகில் வந்தால் வதம் !!

 

இருப்பினும் தேசம் காக்கும் வீரர்களான நாம் உயர் இறையாண்மை மிக்க மத்திய அரசு  மற்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டல்களை பின்பற்றி வெடிகளை வெடித்து ஆர்ப்பரித்து மகிழ்வோம்.

 

         பின் குறிப்பு

@  கருத்தாக்கத்தில் மாசு,குப்பைகள் போன்ற சொற்கள் உண்மையிலேயே மாசு மற்றும் குப்பையை தான் குறிக்கிறது

@  சிலநேரம் கருத்தாக்கம் புரியாவிடில் இருமுறை படிக்கவும்.

@  தீபாவளிக்கு வெடிவெடிக்கும் போது ஆடைகள் பத்திரம்.

 

      உங்கள் வெடியில் மேலைநாட்டு கழிவுகள் சாம்பலாகட்டும் !

             பட்டாசுகளை தயாரிக்கும் சிவகாசிக்கு வீர வணக்கம் !

  என்றும் உங்களுடன்

விராலிமலை ஆர்.ராஜகோபாலன்

வர்ணங்களாய்  மிளிர்வோம்

 வண்ணங்களாய் ஒளிர்வோம்

 என்ற கருத்தாக்கத்தில் மீண்டும் சந்திப்போம்..

                            


4 comments:

  1. தங்கள் கவிதை மிகவும் கருத்து மிக்கது இதை படித்த பிரகாவது திருட்டு திராவிட கிளைகள் (வாக்காளர்கள்) திருந்தட்டும்

    ReplyDelete
  2. மிக சிறப்பு...... நமது பாராம்பர்யா விஷயங்களை மீட்போம்

    ReplyDelete