Pages

Monday, August 16, 2021

75 ஆவது இந்திய விடுதலை நாளில் சங்க செயல்பாடுகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு நமது நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் அவர்களின் சுதந்திரப்போர்படையின் படையில் பணியாற்றிய தருமபுரி அன்னசாகரத்தைச்சேர்ந்த சுதந்திர வீர மங்கை திருமதி. சிவகாமி குப்புசாமி அவர்களை ,தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக கெளரவிக்கப்பட்டது. மேலும்  அம்மையாரிடம் ஆசியும் வாழ்த்தும் பெறப்பட்டது.

_______________________________________________________

தேசிய ஆசிரியர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக சுதந்திர தின விழா மாவட்டத் தலைவர் திருமதி. வைரமணி தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தின் முன் கொண்டாடப்பட்டது. மாநிலத் துணைத் தலைவர் விஜய் சிறப்புரையாற்றினார். மேலும் ஆசிரியர் சரவணகுமார் DC SSA மற்றும் தேசிய ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு தேசத் தலைவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
 


 நமது இந்திய தாய்த் திருநாட்டின் சிறப்புமிக்க 75வது சுந்திர தினவிழா இன்று (15.08.2021) திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தேசியக் கொடியேற்றி கொண்டாடப்பட்டது. இத்தருணத்தில் நமக்கு நம் தாய்த்திருநாட்டை அந்நியர்களிடமிருந்து மீட்டெடடுத்து சுதந்திரக் காற்றை நமது சொந்தமாக்கிய நம் முன்னோர்களான, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் போற்றி நினைவு கூறப்பட்டது.தமிழ்த்தாய் வாழ்த்து, கொடிப்பாடல், தேசிய கீதம் ஆகியவற்றுடன் நம் தாய்த் திருநாட்டுப் பணியில் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள உறுதியேற்கப்பட்டது. ஜெய் ஹிந்த். வந்தே மாதரம்.

இடம் : தேசிய ஆசிரியர் சங்க மாநில மகளிர் அணிச் செயலாளர் ஸ்ரீ.சாருமதிதேவி இல்லம்,பழனி.

 
 
 
தேசிய ஆசிரியர் சங்கம், பழனி கல்வி மாவட்டத் தலைவர் திருமதி. தேவி ஜான்சிராணி அம்மா அவர்கள் இல்லத்தில் (15.08.2021)  நம்தாய்த் திருநாட்டின் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நம் தேசியக் கொடியேற்றறப்பட்டது.


___________________________________________________________________________________


 திண்டுக்கல் மாவட்டம் MM.கோவிலூர் அருகில் உள்ள பாறைப்பட்டி கிராமத்தில் 75வது சுதந்திர தின விழா தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்வில் தேசிய சங்கத்தின் உடைய ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் நமது சங்கத்தின் மூலமாக நடைபெறும் இலவச டியூஷன் சென்டர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன.
 


________________________________________________________________________________

75 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு. தேசிய ஆசிரியர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தின் முன்பாக. தேசத் தலைவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் திருமதி. வைரமணி அவர்கள் தலைமை தாங்கினார் .மாநில துணைத்தலைவர் திரு பா. விஜய் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மேலும்பல ஆசிரியர்களும் முதன்மைக்கல்வி அலுவலக பணியாளர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.





___________________________________________________________________________________

திண்டுக்கல் மாவட்டம் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக 75 ஆவது சுதந்திர தினத்தன்று திண்டுக்கல்  விவேகானந்தர் நகரில் பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் மாநிலத் துணைத் தலைவர் திரு. பா. விஜய் அவர்கள் வழங்கினார்.




No comments:

Post a Comment