Pages

Pages

Tuesday, May 19, 2026

திண்டுக்கல் மாவட்ட செய்திகள்!!!

 இன்று (19/5/2026) செவ்வாய்க்கிழமை காந்திகிராம பல்கலைகழகத்தில் தேசிய ஆசிரியர் சங்கமும் காந்தி கிராம பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியை மாநில இணைச்செயலாளர் திரு. ராகவன் வரவேற்புரை வழங்கினார். 

மாநில துணை தலைவர் திரு. விஜய் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் பிரிவு பேராசிரியர் திரு ராஜா அவர்கள் மற்றும் பேராசிரியர் செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் 

காந்திகிராம பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு பஞ்சநாதன் அவர்கள் தலைமை தாங்கி பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு சேரும் மாணவர்களுக்கு காந்திகிராம பல்கலைக்கழகத்தின் சிறப்புகள் மற்றும் வாய்ப்புகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார் 

. காந்திகிராம பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் திரு .உதயகுமார் (கணிதத்துறை) திருமதி. சத்யா Home science

பேராசிரியர். ராஜ்குமார்

கணிதத் துறை ஆகியோர் காந்திகிராம பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளைப் பற்றி மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர் 

இந்நிகழ்ச்சியை தேசிய ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் திரு ஆறுமுகம் மற்றும் பொருளாளர் திரு மணிகண்டன். பேராசிரியர் திரு ராஜாராம் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.





No comments:

Post a Comment