மத்திய கல்வி அமைச்சருடன் தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு தமிழ்நாடு அரசு செயல்முறைகள் வெளியிட்ட நாளுக்கு முன்பு வரை பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்க கோரிக்கை!!!
மதுரை 31.12.2025
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் இன்று மதுரையில் மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இது குறித்து அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மு கந்தசாமி கூறியதாவது :
தமிழ்நாட்டில் RTE சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட 16.11.2012 க்கு முன்பு வரைபணி நியமனம் பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து சட்டப்பாதுகாப்பினை வழங்க வேண்டும் எனவும் இருபது முப்பது ஆண்டுகள் பணி புரிந்த அனுபவம் மிக்க ஆசிரியர்கள் பணியில் தொடரவும் பதவி உயர்வு பெறவும் இது மிகவும் அவசியம் என வலியுறுத்தினார்.
இது குறித்து பதிலளித்த மாண்புமிகு மத்திய அமைச்சர் உச்சநீதிமன்ற தீர்ப்பு, நிலுவையில் உள்ள சீராய்வு மற்றும் அப்பீல் வழக்குகள் மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அனைத்து விசயங்களையும் ஆராய்ந்து முடிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். ஆசிரியர் தகுதித் தேர்வை ஆன்லைனில் நடத்துதல், மதிப்பெண் குறைப்பு, அவரவர் பாடங்களில் இருந்து மட்டும் தேர்வுகளை நடத்துதல் குறித்து கேட்ட போது மாநில அரசுகளுக்கு இதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் மாநில அரசுகள் உரிய கால இடைவெளியில் தேர்வுகளை நடத்திட வேண்டும் எனவும் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது பொதுச் செயலாளர் திரு மு கந்தசாமி, மாநில துணைத் தலைவர்கள் திரு து முருகன் மற்றும் திரு பா விஜய் , மாநில இணைச்செயலாளர் சி ராகவன் ஆகியோர் உடனிருந்தனர்.



No comments:
Post a Comment