தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு மாநில பொறுப்பாளர் நாகை மாவட்ட வருகை மற்றும் சிறப்பு மாவட்டக்குழு கூட்டம்
இன்று 13. 04. 2025 ஞாயிற்றுக்கிழமை நாகப்பட்டினம் மாவட்டம் மாவட்ட குழு கூட்டம் மாலை 3.00 மணி - 4.00 மணி அளவில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில இணைச் செயலாளர் திரு ராகவன் மற்றும் மாநில பொருளாளர் திரு திருஞான குகன் இருவரும் வழிகாட்டினார்கள்.
1. மாவட்ட அளவில் உறுப்பினர் சேர்க்கை.
2. சித்திரை புத்தாண்டு வாழ்த்து அட்டை கல்வித்துறை அலுவலருக்கு வழங்கி சந்தித்தல்
3. மே மாதம் பயிற்சி முகாமில் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளுதல்
4. சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் மற்றும் ஃபோட்டா-ஜியோ கூட்டமைப்பில் தேசிய ஆசிரியர் சங்கம் நாகை மாவட்ட செயல்பாடுகள்
பற்றி விரிவாக விளக்கப்பட்டது.
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் மற்றும் ஃபோட்டா-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.இமயசிவன் மற்றும் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் திரு பத்மநாபன், திரு சண்முகவடிவேலு
திரு சிவசங்கர் ஆகியோரது செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டத் தலைவர் திரு தட்சிணாமூர்த்தி, மாவட்ட செயலாளர் திரு அருள்செல்வம் , மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி அமுதா ஆகியோர் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்ட செயலாளர் திரு அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மாநில பொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு விசுவாவசு தமிழ் புத்தாண்டு வாழ்த்து அட்டை வழங்கி அனைத்து உறுப்பினர்களுக்கும் இனிய விசுவாவசு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment