Pages

Pages

Saturday, February 22, 2025

முக்கிய அறிக்கை!!!

 தேவை மூன்று மொழி

தேசிய ஆசிரியர் சங்கத்தின் அறிக்கை

📍 தேசிய கல்விக் கொள்கை 2020 ன் படி ஒரு மாணவர் தன்னுடைய தாய்மொழி மட்டும் அல்லாமல் ஆங்கிலம் மற்றும் இந்தியாவின் ஏதாவது ஒரு மொழியை தேர்ந்தெடுத்து படிக்க வாய்ப்பு அளிக்கிறது. 

📍 எந்த மொழியையும் திணிக்கும் வண்ணமாக இல்லை.

📍அப்படி இருக்கையில் தமிழகத்தில் இன்று இந்தி மொழி திணிப்பு என்று  பல பேர் கண்டனம் தெரிவிக்கிறார்கள். 

📍நமக்கு அண்டை மாநிலங்களான கேரளாவும், கர்நாடகாவும், ஆந்திராவும் மும்மொழி கல்வியை ஏற்றுக்கொண்டு கல்வியில் இன்று மேன்மை பெற்று வருகிறார்கள்.

📍பல வட மாநிலங்களில் உள்ள தமிழர்களின் குழந்தைகள்  படிக்கும் பள்ளிகளில் தமிழ் கற்பிக்க மும்மொழிக்கொள்கை வகை செய்கிறது

📍தமிழகத்திலே இன்று  வசதியான மாணவர்கள் தனியார் மெட்ரிக், CBSE பள்ளியில் சேர்ந்து மும்மொழி பயில்கிறார்கள். 

📍அவ்வாறு இருக்க, 

ஏழை எளிய நடுத்தர விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மக்கள் படிக்கக்கூடிய அரசு பள்ளிகளில்  மூன்றாவதாக ஒரு மொழியை கற்பதற்கு தமிழக அரசு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதே சிறந்தது. 

📍எதிர்கால மாநில வளர்ச்சி, மாணவர் திறன் மேம்பாடு, சமுதாய நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மும்மொழி திட்டத்தை உடனடியாக தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என தேசிய ஆசிரியர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

🙏🏼🙏🏼🙏🏼

No comments:

Post a Comment