தேவை மூன்று மொழி
தேசிய ஆசிரியர் சங்கத்தின் அறிக்கை
📍 தேசிய கல்விக் கொள்கை 2020 ன் படி ஒரு மாணவர் தன்னுடைய தாய்மொழி மட்டும் அல்லாமல் ஆங்கிலம் மற்றும் இந்தியாவின் ஏதாவது ஒரு மொழியை தேர்ந்தெடுத்து படிக்க வாய்ப்பு அளிக்கிறது.
📍 எந்த மொழியையும் திணிக்கும் வண்ணமாக இல்லை.
📍அப்படி இருக்கையில் தமிழகத்தில் இன்று இந்தி மொழி திணிப்பு என்று பல பேர் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.
📍நமக்கு அண்டை மாநிலங்களான கேரளாவும், கர்நாடகாவும், ஆந்திராவும் மும்மொழி கல்வியை ஏற்றுக்கொண்டு கல்வியில் இன்று மேன்மை பெற்று வருகிறார்கள்.
📍பல வட மாநிலங்களில் உள்ள தமிழர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் தமிழ் கற்பிக்க மும்மொழிக்கொள்கை வகை செய்கிறது
📍தமிழகத்திலே இன்று வசதியான மாணவர்கள் தனியார் மெட்ரிக், CBSE பள்ளியில் சேர்ந்து மும்மொழி பயில்கிறார்கள்.
📍அவ்வாறு இருக்க,
ஏழை எளிய நடுத்தர விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மக்கள் படிக்கக்கூடிய அரசு பள்ளிகளில் மூன்றாவதாக ஒரு மொழியை கற்பதற்கு தமிழக அரசு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதே சிறந்தது.
📍எதிர்கால மாநில வளர்ச்சி, மாணவர் திறன் மேம்பாடு, சமுதாய நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மும்மொழி திட்டத்தை உடனடியாக தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என தேசிய ஆசிரியர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
🙏🏼🙏🏼🙏🏼
No comments:
Post a Comment