Pages

Friday, July 26, 2024

மதுரை மாவட்ட செய்திகள்

 இன்று 25/07/2024 மதுரை மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக குரு வந்தனம்  நிகழ்வு மதுரை தெப்பகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது. வேலம்மாள் பொறியியல் கல்லூரியின் நூலகர் / மாணவர் விடுதிக் தலைமை காப்பாளர், யோகா கலைஞர் திரு. கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.நிகழ்வு குத்து விளக்கு ஏற்றி சரஸ்வதி வந்தனத்துடன் தொடங்கி தலைமை ஆசிரியை திருமதி. இந்து மதி அவர்களின் தலைமை உரையுடன் துவங்கியது மதுரை மாவட்ட தேசிய ஆசிரியர் சங்க தலைவர் திரு.சா.பரமசிவம் வாழ்த்துரையாற்ற சிறப்பு விருந்தினர் சிறப்புரையாற்ற நிகழ்வு மிக சிறப்பாக அமைந்தது அனைவரும் குருவின் பெருமை பற்றி சிறப்பாக ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர். நிகழ்வில் பள்ளியளவில் சிறந்து விளங்கிய மாணவியர்களுக்கும் பள்ளிக்கும் அமைப்பின் சார்பாக நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் திரு.கணேசன் நன்றியுரை ஆற்ற நாட்டு பண்ணுடன் நிகழ்வு நிறைவுப் பெற்றது. நிகழ்வு சிறப்பாக நடைப்பெற மாவட்ட பொருளாளர் திரு. ஆறுமுக கடவுள் கல்வி மாவட்டப் பொறுப்பாளர்கள் உதவினர். விழாவில் 40 ஆசிரியர்கள் 50 மாணவிகள்  பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.










No comments:

Post a Comment