Pages

Sunday, April 23, 2023

ஈரோடு மாவட்ட செயதிகள்

 *தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு_ஈரோடு மாவட்டம்_தாளவாடி கிளை* 


*சித்திரை 9, சனிக்கிழமை* (22-4-23) காலை 11:00 மணிக்கு *தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு,தாளவாடி கிளை* சார்பாக *பணி ஓய்வு பெறும் ஆசிரியருக்கு பாராட்டு விழா* மிக சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு திரளான ஆசிரியர்களும், அனைத்து தேசிய ஆசிரியர் சங்க பொறுப்பாளர்களும், வட்டார கல்வி அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த கல்வி மேற்பார்வையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பாக மாநில மற்றும் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இவ் விழாவில் தேசிய ஆசிரியர் சங்கம் செய்து வரும் சமுதாயப் பணிகள், மாணவர் நலன் மற்றும் ஆசிரியர்கள் நலன் காக்கும் நடவடிக்கைகள் பற்றி மாநில செயலாளர் மற்றும் சங்க அறிமுகம் பற்றி மாநில பொருளாளர் விளக்கினார். அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு மிகச் சிறப்பாக விழாவினை நடத்திய தாளவாடி ஒன்றிய பொறுப்பாளர்களுக்கு ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பாக வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறோம். இதன் பின்னர் மாதாந்திர ஈரோடு மாவட்ட கூட்டம் நடைபெற்றது. தாளவாடி ஒன்றியத்திற்கு மகளிர் அணி பொறுப்பாளர் நியமிக்கப்பட்டார். ஒன்றிய அளவில் சங்கத்தினை வளர்ச்சி

அடைய செய்யவும், பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது குறித்தும் கலந்த ஆலோசிக்கப்பட்டது. மாணவர்கள் சார்பாக பயிற்சி வகுப்புகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.



No comments:

Post a Comment