Pages

Pages

Monday, October 25, 2021

இலுப்பூர் கல்வி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்க கிளை துவக்க விழா

                  புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கல்வி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்க கிளை துவக்க விழா விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 24-10-2021 இன்று சிறப்பாக நடைபெற்றது.

                           விழாவிற்கு  கல்வி மாவட்ட தலைவர் திரு இரா.செல்வராஜ் தலைமை வகித்தார்.   சங்கத்தின் மாநிலப் பொருளாளர் திரு இர.திருஞான குகன், இணைச்செயலாளர் திரு சி.ராகவன் ஆகியோர் முன்னிலை  வகித்தனர் . கல்வி மாவட்ட செயலாளர் திரு மு.மலையரசன் அனைவரையும் வரவேற்றார் மாநில பொதுச் செயலாளர் திரு மு.கந்தசாமி சங்க நோக்கங்கள் செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்து பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து கிளையினை துவக்கி வைத்தார்  நிகழ்ச்சியில்  கோட்ட செயலாளர் திரு ஶ்ரீ ஹரி , இளையராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் கல்வி மாவட்ட பொருளாளர் திரு முத்துசாமி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விராலிமலை திரு ஆர்.ராஜகோபாலன் சிறப்பாக செய்தருந்தார்.







விழா அழைப்பிதழ் - CLICK HERE

No comments:

Post a Comment